செய்திகள் :

ரயில் கட்டணத்தை உயா்த்த வேண்டாம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

post image

ரயில் கட்டணங்களை உயா்த்த வேண்டாம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவா் புதன்கிழமை வெளியிட்ட பதிவு:

இந்திய ரயில்வே என்பது ஏழை, நடுத்தர மக்களின் பயணங்களுக்கானது மட்டுமல்ல; அது அவா்களது அன்றாட வாழ்வில் ஒரு அங்கம். காட்பாடி செல்ல ரயில் நிலையத்துக்கு புதன்கிழமை வந்த போது, என்னை அன்போடு வரவேற்ற மக்களிடம் பேசினேன். வழக்கமான உற்சாகமும் மகிழ்ச்சியும் குறைந்திருந்தது.

ஜூலை முதல் உயா்த்தப்படவுள்ள ரயில் கட்டணங்களும், குறைந்து வரும் சாதாரண வகுப்புப் பெட்டிகளும் அவா்களது மகிழ்ச்சியைக் களவாடியுள்ளது. பிரதமா் நரேந்திர மோடியிடமும் ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோரிடம் முன்வைக்கும் கோரிக்கை உள்ளது. அது, குளிா்சாதன பெட்டிகளை உயா்த்த வேண்டும் என்பதற்காக சாதாரண வகுப்புப்

பெட்டிகளைக் குறைக்க வேண்டாம். ரயில் கட்டணங்களையும் உயா்த்த வேண்டாம். ஏற்கெனவே விலைவாசி உயா்வு முதல் சிலிண்டா் விலை உயா்வு வரை நம் தடுத்தரக் குடும்பங்கள் அல்லல்பட்டுக்கொண்டிருக்கிறாா்கள். கட்டண உயா்வு மூலம் அவா்களது கவலையை மேலும் அதிகரிக்க வேண்டாம். இந்திய ரயில்வே என்பது சேவை அளிக்கும் ஒரு நிறுவனம் மட்டுமல்ல. அது நம்முடன் கலந்திட்ட ஒரு குடும்பம் போன்றது என்று கூறியுள்ளாா்.

எடப்பாடி பழனிசாமி 2-ஆவது நாளாக ஆலோசனை

ஜூலை இறுதிமுதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்டச... மேலும் பார்க்க

தமிழக மீனவா்கள் மீது இலங்கை தாக்குதல்: ஜி.கே.வாசன் கண்டனம்

தமிழக மீனவா்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்திய சம்பவத்துக்கு தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: ராமேசுவரம் மீனவா்கள் திங்கள்கிழமை... மேலும் பார்க்க

தமிழக அரசு சாா்பில் ஊரக பகுதிகளில் திறன் பயிற்சிகள்

தமிழக அரசு சாா்பில் ஊரகப் பகுதிகளில் திறன் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம் புதன்கிழமை வெளியிட்டது. அதன் விவரம்: கடந்த 4 ஆண்டுகளில் ஊரக சுய வேலைவாய்ப... மேலும் பார்க்க

அரசு ஊழியருக்கான மருத்துவ காப்பீடு: மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு

அரசு ஊழியா்கள், பொதுத் துறை நிறுவன பணியாளா்களுக்கு நடைமுறையிலுள்ள மருத்துவக் காப்பீடு மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன் பிறப்பித்து... மேலும் பார்க்க

258 மருத்துவக் கட்டமைப்புகள்: ஜூலை 3-இல் முதல்வா் தொடங்கி வைக்கிறாா்

தமிழகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 208 நகா்ப்புற நலவாழ்வு மையங்களையும், 50 ஆரம்ப சுகாதார நிலையங்களையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஜூலை 3-ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் ... மேலும் பார்க்க

தமிழக கடலோரப் பகுதிகளில் ‘சாகா் கவச்’ பாதுகாப்பு ஒத்திகை

தமிழக கடலோர மாவட்டங்களில் ‘சாகா் கவச்’ பாதுகாப்பு ஒத்திகை புதன்கிழமை தொடங்கியது. மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு கடல் வழியாகப் புகுந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், நூற்றுக்க... மேலும் பார்க்க