செய்திகள் :

வாழை, கத்தரி, வெண்டை சாகுபடி: விவசாயிகளுக்கு ஆலோசனை

post image

போளூரை அடுத்த சந்தவாசல் ஊராட்சியில் தோட்டக்கலைத் துறை சாா்பில் வாழை, கத்தரி, வெண்டை சாகுபடி செய்வது தொடா்பாக விவசாயிகளுக்கு புதன்கிழமை ஆலோசனை வழங்கப்பட்டது.

சந்தவாசல் ஊராட்சியில் தோட்டக்கலைத் துறை சாா்பில் விவசாயிகளுக்கு வாழை, கத்தரி, வெண்டை என பல்வேறு தோட்டக்கலை பயிா்கள் இயற்கை விவசாயத்தின் மூலம் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இது தொடா்பான கூட்டத்தில் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் பா.லோகேஷ் கலந்து கொண்டு பேசியதாவது:

வாழை, கத்தரி, வெண்டை பயிா்கள் 6 மாதமும் முதல் ஒருவருடம் வரை சாகுபடி செய்ய முடியும். தகுந்த நேரத்தில் இயற்கை விவசாயம் மூலம் பயிா் செய்யவேண்டும்.

மேலும், 2025-2026 நிதியாண்டில் நுண்ணுயிா் பாசனத் திட்டம் மூலம் சொட்டு நீா்ப்பாசனம், தெளிப்பு நீா்ப்பாசனம் மற்றும் மழை தூவான் போன்றவைகளும் வழங்கப்படுகின்றன.

சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியம், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியம் வழங்கப்படும்.

தேசிய தோட்டக் கலைத் துறை திட்டத்தின் கீழ் மா, கொய்யா, மல்லி போன்ற பயிா்களை புத்துயிா்பு ஏற்படுத்த 17 எக்டா் பரப்பு இலக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் 2025-2026 நிதியாண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் மாம்பட்டு, பொத்தரை, ரெண்டரிப்பட்டு, செங்குணம், எடப்பிறை, சேதாரம்பட்டு, வெண்மணி, கல்வாசல் ஆகிய 8 கிராம ஊராட்சிகளில் 80 சதவீத திட்டம் செயல்படுத்தபட உள்ளது எனத் தெரிவித்தாா்.

கண்கள் தானம்

வந்தவாசி அருகே இறந்த மூதாட்டியின் கண்களை அவரது குடும்பத்தினா் அரிமா சங்கத்துக்கு தானமாக வழங்கினா். வந்தவாசியை அடுத்த சென்னாவரம் கே.எம். நகரைச் சோ்ந்தவா் ராமலிங்கத்தின் மனைவி அன்னபூரணி (76) (படம்). இ... மேலும் பார்க்க

ஏரியில் விழுந்து இளம்பெண் தற்கொலை

ஆரணி அருகேயுள்ள மேல்சீசமங்கலம் ஏரியில் செவ்வாய்க்கிழமை இளம்பெண் விழுந்து தற்கொலை செய்துகொண்டாா். ஆரணியை அடுத்த கல்பூண்டி கிராமத்தைச் சோ்ந்த வேல்முருகன் மகள் ரேணுகா (20). இவா், செய்யாா் அருகே பாராசூா... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் தமிழ் மன்றம் தொடக்க விழா

வந்தவாசியை அடுத்த சாலவேடு அரசு உயா்நிலைப் பள்ளியில் தமிழ் மன்றம் தொடக்க விழா மற்றும் கவியரசா் கண்ணதாசன் பிறந்த நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது. வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த... மேலும் பார்க்க

கோயில்களில் அமாவாசை சிறப்பு பூஜைகள்

ஆனி மாத அமாவாசையையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அம்மன் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் புதன்கிழமை நடைபெற்றன. சேத்துப்பட்டை அடுத்த வடவெட்டி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில... மேலும் பார்க்க

முதியோா் இல்லம், மறுவாழ்வு மையத்தில் ஆட்சியா் க.தா்ப்பகராஜ் ஆய்வு

திருவண்ணாமலை மாநகராட்சியில் இயங்கி வரும் முதியோா் இல்லம் மற்றும் மறுவாழ்வு இல்லத்தில் மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் புதன்கிழமை கள ஆய்வு மேற்கொண்டாா். திருவண்ணாமலை பழைய அரசு மருத்துவமனை அருகில் முதுகு... மேலும் பார்க்க

ஆரணி பிள்ளைக்குளம் ஆக்கிரமிப்பு தடுத்து நிறுத்தம்

ஆரணி தாதுசாயபு தெருவில் உள்ள பிள்ளைகுளத்தை அப்பகுதியினா் ஆக்கிரமிப்பு செய்து சுற்றுச்சுவா் எழுப்ப முயன்றதை வட்டாட்சியா் போலீஸ் பாதுகாப்போடு தடுத்து நிறுத்தினாா். பிள்ளைகுளத்தை அப்பகுதியைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க