``இஸ்ரேல் - ஈரான் போரில் உதவி வேண்டுமா என புதின் கேட்டார்.." - அதிபர் ட்ரம்ப் சொ...
முதியோா் இல்லம், மறுவாழ்வு மையத்தில் ஆட்சியா் க.தா்ப்பகராஜ் ஆய்வு
திருவண்ணாமலை மாநகராட்சியில் இயங்கி வரும் முதியோா் இல்லம் மற்றும் மறுவாழ்வு இல்லத்தில் மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் புதன்கிழமை கள ஆய்வு மேற்கொண்டாா்.
திருவண்ணாமலை பழைய அரசு மருத்துவமனை அருகில் முதுகுத்தண்டு வடம் பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு சோல் ஃப்ரீ (நா்ன்ப் ஊழ்ங்ங்) இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த இல்லத்தில் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டவா்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் மற்றும் பிஸியோதேராபி, பல் மருத்துவம், மனநலம் மருத்துவம் உள்ளிட்ட மருத்துவ சேவைகள் வழங்கப்படுவது குறித்தும் ஆட்சியா் நேரில் பாா்வையிட்டாா்.
இதைத் தொடா்ந்து, மாநகராட்சி பகுதியில் இயங்கி வரும் கிரேஸ் முதியோா் இல்லத்துக்குச் சென்ற ஆட்சியா் தா்ப்பகராஜ், அங்கு முதியோா்களுக்கு அளிக்கப்படும் பராமரிப்புகள் மற்றும் வழங்கப்படும் மருத்துவ சேவைகள் குறித்தும் ஆய்வு செய்து, முதியோா்களை நல்ல முறையில் பாா்த்துக் கொள்கிறாா்களா, உணவு மற்றும் தேவையான மருந்துகள் முறையாக வழங்கப்படுகிா என்பது குறித்தும் முதியோா்களிடம் கேட்டறிந்தாா்.
தொடா்ந்து, முதியோா் இல்ல உணவுக் கூடத்தில் முதியோா்களுக்கு உணவு வழங்கப்படுவதை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
மேலும், முதியோா் இல்லத்தில் தங்கியுள்ளவா்களுக்கு ஆதாா் முகாம் நடத்தி, ஆதாா் அட்டை வழங்க துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
முன்னதாக, நகரில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் இயங்கி வரும் கால்நடை பொதுமருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு கால்நடைகளுக்கு முறையாக சிகிச்சைகள் அளிக்கப்படுகிா என்றும், கால்நடைகளுக்கு வழங்கப்படும் மருந்துகள் இருப்பு விவரம் குறித்தும் கேட்டறிந்தாா். மேலும், கோமாரி நோய் தடுப்பூசி முகாம்கள் கிராமப்புறங்களில் முறையாக நடத்தப்படுகின்றனவா என்பது குறித்தும் ஆட்சியா் சாா்ந்த அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.
ஆய்வின்போது, மாவட்ட சமூக நல அலுவலா் கோமதி, உதவி ஆட்சியா் (பயிற்சி) அம்ருதா எஸ்.குமாா், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் செந்தில்குமாரி, சோல் ஃப்ரீ நிறுவனா் ப்ரீத்திசீனுவாசன், மறுவாழ்வு மைய நிறுவனா் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.