செய்திகள் :

``இஸ்ரேல் - ஈரான் போரில் உதவி வேண்டுமா என புதின் கேட்டார்.." - அதிபர் ட்ரம்ப் சொல்லும் தகவல்

post image

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போரின் போது, ஏதேனும் உதவி வேண்டுமா என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கேட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்தபோது, அப்போது வேட்பாளராக இருந்த ட்ரம்ப், 'அமெரிக்காவின் வரிப்பணம் உக்ரைன் போருக்கு செலவிடப்படுகிறது' என்றக் குற்றச்சாட்டை முன்வைத்து வாக்கு சேகரித்தார். அமெரிக்க அதிபராக தேர்வானதற்குப் பிறகு உலகளாவிய அமைதியை உருவாக்குபவராக தன் பிம்பத்தை கட்டமைக்க முயற்சிக்கிறார். இதற்கு கடும் சவாலாக இருப்பது ரஷ்யா - உக்ரைன் போர்.

இந்த இருநாடுகளுடனான பேச்சுவார்த்தையில் அவர் இதுவரை வெற்றிபெறவில்லை என்று தெரிகிறது. உக்ரைனுக்கு அதிக ஆயுதங்களை வழங்கி, ரஷ்யா மீது வலுவான பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என உக்ரைனும் அதன் ஐரோப்பிய கூட்டாளி நாடுகளும் விரும்புகின்றன. ரஷ்யா அதிபர் புதினுக்கு எதிராக அமெரிக்கா கடுமையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.

ட்ரம்ப், புதின்
ட்ரம்ப், புதின்

இந்த நிலையில், (Fox News) ஃபாக்ஸ் நியூஸ் வழங்கியிருக்கும் செய்தியின்படி, ``நேட்டோ உச்சிமாநாட்டிற்குச் சென்ற ட்ரம்ப், ``இஸ்ரேல் - ஈரான் போரின்போது ரஷ்யா அதிபர் புதின் என்னை அழைத்து 'இந்தப் போருக்கு ஏதாவது உதவி வேண்டுமா?' எனக் கேட்டார். நான் ஆம் உதவி வேண்டும் ஆனால் இந்தப் போருக்கு அல்ல. ரஷ்யா - உக்ரைன் விவகாரத்தில் அமைதிக்கான தீர்வு காண வேண்டும். அதை முதலில் செய்யுங்கள் எனக் குறிப்பிட்டேன். ரஷ்யாவுடன் ஒரு ஒப்பந்தம் வேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறேன்" என்றார்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பைடன் இருந்தபோது அமெரிக்கா வழங்க ஒப்புக்கொண்ட ராணுவ உதவிகள் வரும் மாதங்களில் முடிந்துவிடும். அதன் பிறகு, இப்போது அதிபராக இருக்கும் ட்ரம்ப் உக்ரைனுக்கு ஏதேனும் உதவிகள் வழங்குவாரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

Newyork: ``100% கம்யூனிஸ்ட் பைத்தியம்..'' - இந்திய வம்சாவளி மேயர் வேட்பாளரை இழிவுபடுத்திய ட்ரம்ப்

நியூயார்க் மேயர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் இந்தியா வம்சாவளியான ஜோரன் மம்தானி போட்டியிட தேர்வாகி இருக்கிறார்.நவம்பர் 4-ம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தலில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த கர்டிஸ் ஸ்லி... மேலும் பார்க்க

Vaccine: இந்தியாவில் 14.4 லட்சம் குழந்தைகள் தடுப்பூசி போடவில்லையா? - அதிர்ச்சி தரும் ஆய்வு!

குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதில் சவாலை எதிர்கொள்ளும் தெற்காசிய நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் திகழ்கிறது. நாடுமுழுவதும் 2023-ம் ஆண்டு 14.4 லட்சம் குழந்தைகள் ஒரு தடுப்பூசி கூட போட்டுக்கொள்ளாமல் இருந்தத... மேலும் பார்க்க

``வெள்ளித் தட்டில் 600 பேருக்கு விருந்து; ஒரு பிளேட் சாப்பாடு ரூ.5000'' - அரசு செலவில் ஆடம்பரமா?

மும்பையில் பாராளுமன்ற மதிப்பீட்டுக்குழு கூட்டம் இரண்டு நாள்கள் நடந்தது. இந்த கூட்டம் மகாராஷ்டிரா சட்டமன்ற கட்டிடத்தில் நடந்தது. நாடு முழுவதும் இருந்து 600 பேர் இதில் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தை பாரா... மேலும் பார்க்க

War: இஸ்ரேல், அமெரிக்கா Vs ஈரான்; வெற்றி பெற்றது யார்? - யாருக்கு என்ன லாபம்? - ஓர் அலசல்

'இஸ்ரேல்' கடந்த சில வருடங்களாக செய்திகளில் அதிகம் இடம்பெறும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. காஸா மீது தொடங்கியப்போர் கொஞ்சம் கொஞ்சமாக ஈரான் பக்கம் திரும்பியதால், உலகமே தன்னுடைய வாய்க்கு... மேலும் பார்க்க

`அதிமுக - பாஜக கூட்டணியை யாராலும் உடைக்க முடியாது; திமுக வீட்டுக்கு போவது உறுதி' - வானதி சீனிவாசன்

பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ-வுமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “முதல்வர் ஸ்டாலின் அவர் நெருக்கடி காலகட்டத்தில் பட்ட கஷ்டங்களை மறந்... மேலும் பார்க்க