செய்திகள் :

``வெள்ளித் தட்டில் 600 பேருக்கு விருந்து; ஒரு பிளேட் சாப்பாடு ரூ.5000'' - அரசு செலவில் ஆடம்பரமா?

post image

மும்பையில் பாராளுமன்ற மதிப்பீட்டுக்குழு கூட்டம் இரண்டு நாள்கள் நடந்தது. இந்த கூட்டம் மகாராஷ்டிரா சட்டமன்ற கட்டிடத்தில் நடந்தது. நாடு முழுவதும் இருந்து 600 பேர் இதில் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தை பாராளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா தொடங்கி வைத்தார்.

இந்த கூட்டம் இப்போது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. கூட்டத்தில் பங்கேற்க வந்தவர்கள் தாஜ் பேலஸ் மற்றும் டிரிடெண்ட் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். இரண்டு ஹோட்டல் வாயிலில் 40 அடி உயரத்தில் பிரம்மாண்ட பேனர் ஒன்றும் வைக்கப்பட்டு இருந்தது.

விருந்தினர்களுக்கு சட்டமன்ற வளாகத்தில் சாப்பாட்டு வசதி செய்யப்பட்டு இருந்தது. அவசரமாக தற்காலிக குளிர்சாதன வசதி கொண்ட சாப்பிடும் அறை சட்டமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்தது. அதோடு நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்டது. விருந்தினர்களுக்கு வழங்கப்பட்ட சாப்பாடுதான் இப்போது சர்ச்சையாகி பொருளாக மாறி இருக்கிறது.

வெள்ளித்தட்டில் விருந்தினர்களுக்கு சாப்பாடு வழங்கப்பட்டுள்ளது. அதோடு ஸ்பூன் கூட வெள்ளியில் தயாரிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு தட்டும் தலா 550 ரூபாய் கொடுத்து வாடகைக்கு எடுத்து வரப்பட்டது என்றும், ஒவ்வொரு சாப்பாடும் 4500 ரூபாய் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி இருக்கின்றன.

விருந்தினர்களுக்கு சாப்பாடு

இது குறித்து காங்கிரஸ் சட்டமன்றத் தலைவர் விஜய் நாக்பூரில் அளித்த பேட்டியில், "மாநில அரசு ஏற்கெனவே நிதி நெருக்கடியில் இருக்கும் போது விருந்தினர்களுக்கு வெள்ளித்தட்டில் சாப்பாடு வழங்கவேண்டிய அவசியம் என்ன?. ஒரு பிளேட் சாப்பாட்டிற்கு ரூ.5000 செலவு செய்திருக்கிறார்கள். விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை. தொழிலாளர்களுக்கு போனஸ் கொடுக்கவில்லை. பல நலத்திட்டங்களுக்கான நிதி குறைக்கப்பட்டுள்ளது'' என்று குற்றம் சாட்டினார்.

இதே போன்று மாநில காங்கிரஸ் தலைவர் ஹர்ஷ்வர்தன் அளித்த பேட்டியில், ''550 ரூபாய் வெள்ளித்தட்டில் 5000 ரூபாய்க்கு ஒவ்வொருவருக்கும் சாப்பாடு போட்டுள்ளனர். ஆனால் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய அவர்களிடம் பணம் இல்லை. சகோதரிகளுக்கு ரூ.2100 கொடுக்க பணம் இல்லை. ஆனால் இது போன்ற ஆடம்பர விருந்திற்கு மட்டும் அவர்களிடம் பணத்திற்கு பற்றாக்குறை இருப்பதில்லை'' என்று தெரிவித்தார்.

விருந்தினர்களுக்கு சாப்பாடு

சமூக ஆர்வலர் கும்பார் இது குறித்து கூறுகையில், ''600 விருந்தினர்களுக்கு ரூ.27 லட்சம் செலவு செய்து சாப்பாடு கொடுத்திருக்கின்றனர். சிக்கனத்தைப் போதிக்கும் மதிப்பீட்டுக் குழுவிற்கு இது போன்று மக்கள் பணத்தை விரையம் செய்தது பொதுமக்களின் கோபத்தை தூண்டி இருக்கிறது'' என்று தெரிவித்துள்ளார். சிவசேனா(உத்தவ்)வும் அரசின் இந்த செயலை கடுமையாக விமர்சித்துள்ளது.

விருந்தினர்களுக்கு நிகில் கேடர்ஸ் நிறுவனம் தான் சாப்பாடு வழங்கியது. அந்த நிறுவனத்தின் உரிமையாளர் சுனிலிடம் இது குறித்து பேசியபோது, ''வெள்ளித்தட்டில் சாப்பாடு பரிமாறப்படவில்லை. வெள்ளி போன்று இருக்கும் வெள்ளையான தட்டில்தான் சாப்பாடு பரிமாறப்பட்டது. அதுவும் ஒரு தட்டு ரூ.100 முதல் 150-க்கு வாடகைக்கு கிடைக்கிறது. அதனை வாடகைக்கு எடுத்து வந்துதான் பயன்படுத்தினோம். அதே போன்று ஸ்பூனும் வெள்ளியால் செய்யப்பட்டது கிடையாது. ஒரு சாப்பாடும் ரூ.4500 கிடையாது. அதைவிட குறைந்த கட்டணத்தில்தான் வழங்கினோம். வெள்ளித்தட்டு இரண்டு லட்சம் ரூபாயாகும். அதில் எப்படி சாப்பாடு பரிமாற முடியும்'' என்று கேள்வி எழுப்பினார்.

Newyork: ``100% கம்யூனிஸ்ட் பைத்தியம்..'' - இந்திய வம்சாவளி மேயர் வேட்பாளரை இழிவுபடுத்திய ட்ரம்ப்

நியூயார்க் மேயர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் இந்தியா வம்சாவளியான ஜோரன் மம்தானி போட்டியிட தேர்வாகி இருக்கிறார்.நவம்பர் 4-ம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தலில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த கர்டிஸ் ஸ்லி... மேலும் பார்க்க

Vaccine: இந்தியாவில் 14.4 லட்சம் குழந்தைகள் தடுப்பூசி போடவில்லையா? - அதிர்ச்சி தரும் ஆய்வு!

குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதில் சவாலை எதிர்கொள்ளும் தெற்காசிய நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் திகழ்கிறது. நாடுமுழுவதும் 2023-ம் ஆண்டு 14.4 லட்சம் குழந்தைகள் ஒரு தடுப்பூசி கூட போட்டுக்கொள்ளாமல் இருந்தத... மேலும் பார்க்க

``இஸ்ரேல் - ஈரான் போரில் உதவி வேண்டுமா என புதின் கேட்டார்.." - அதிபர் ட்ரம்ப் சொல்லும் தகவல்

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போரின் போது, ஏதேனும் உதவி வேண்டுமா என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கேட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார். அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்தபோது, அப்போது... மேலும் பார்க்க

War: இஸ்ரேல், அமெரிக்கா Vs ஈரான்; வெற்றி பெற்றது யார்? - யாருக்கு என்ன லாபம்? - ஓர் அலசல்

'இஸ்ரேல்' கடந்த சில வருடங்களாக செய்திகளில் அதிகம் இடம்பெறும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. காஸா மீது தொடங்கியப்போர் கொஞ்சம் கொஞ்சமாக ஈரான் பக்கம் திரும்பியதால், உலகமே தன்னுடைய வாய்க்கு... மேலும் பார்க்க

`அதிமுக - பாஜக கூட்டணியை யாராலும் உடைக்க முடியாது; திமுக வீட்டுக்கு போவது உறுதி' - வானதி சீனிவாசன்

பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ-வுமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “முதல்வர் ஸ்டாலின் அவர் நெருக்கடி காலகட்டத்தில் பட்ட கஷ்டங்களை மறந்... மேலும் பார்க்க