செய்திகள் :

குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை நீடிப்பு!

post image

கோவை மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருவதால் குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் தொடர்ந்து கன மழையின் காரணமாக, கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, கடந்த மே 30 ஆம் தேதி முதல் கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா பகுதிக்குப் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், கனமழை தொடரும் நிலையில், கோவை மாவட்டத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து, சுற்றுலாப் பகுதி மீண்டும் திறக்கப்படாது என்பதை வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெள்ளப்பெருக்கு நிலை சீராகும் வரை சுற்றுலா அனுமதி வழங்கப்படாது. நிலைமையை மதிப்பீடு செய்த பிறகு, வனத்துறை அதிகாரிகளின் உத்தரவுப்படி சுற்றுலா அனுமதி மீண்டும் வழங்கப்படும் என்று போளுவாம்பட்டி வனச்சரக அலுவலர் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் இனி ஒரே விலையில் இறைச்சி விற்பனை! - அரசு தகவல்

தமிழகம் முழுவதும் இனி ஒரே விலையில் இறைச்சி விற்கப்படும் என்றும் அதற்கான விலையை அரசே நிர்ணயிக்கும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை வேப்பேரியில் தேசிய அளவிலான கால்நடை கருத்தரங்கு நடைபெற்று வர... மேலும் பார்க்க

சென்னையில் மின்சார பேருந்து சேவை எப்போது? வெளியான அறிவிப்பு!

சென்னையில் 120 மின்சார பேருந்துகளின் சேவையை வரும் ஜூன் 30 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைக்கவுள்ளார். டீசலில் இயங்கும் பேருந்துகளுக்கு மாற்றாக, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பிலாத இயற்கை எரிவாயு ... மேலும் பார்க்க

மாப்பிள்ளை அவர்தான், அவர் அணிந்திருக்கும் சட்டை என்னுடையது: பிரதமரை சாடிய முதல்வர்!

மாப்பிள்ளை அவர்தான், அவர் அணிந்து கொண்டிருக்கக்கூடிய சட்டை என்னுடையது என்று பிரதம மந்திரி ஊரக குடியிருப்புத் திட்டம் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 26) திருப்பத்தூர்... மேலும் பார்க்க

லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது!

சேலத்தில் ரூ. 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி மற்றும் கிராம நிர்வாக உதவியாளர் கைது செய்யப்பட்டனர். சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ளது காமக்காப்பாளையம்.இந்த ஊரைச் சார்ந்தவர் கண்ணையன் வ... மேலும் பார்க்க

சிப்காட் தொழில் பூங்கா... திருப்பத்தூர் மாவட்டத்துக்கு 5 புதிய அறிவிப்புகள்!

திருப்பத்தூர் மாவட்டத்துக்கான 5 புதிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 26) திருப்பத்தூர் மாவட்டம், மண்டலவாடியில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற பணி... மேலும் பார்க்க

திருப்பத்தூர் மாவட்டத்தில் ரூ. 517 கோடியில் திட்டங்கள்: முதல்வர் திறந்து வைத்தார்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.517 கோடி செலவில், 90 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 60 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 1,00,168 பயனாளிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் நலத்திட... மேலும் பார்க்க