செய்திகள் :

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டறிக்கையில் கையெழுத்திட ராஜ்நாத் சிங் மறுப்பு!

post image

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டறிக்கையில் கையெழுத்திட இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மறுப்பு தெரிவித்துள்ளார்.

சீனாவின் கிங்டாவோ நகரில் நடைபெற்று வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) பாதுகாப்பு அமைச்சா்கள் மாநாட்டில் ராஜ்நாத் சிங் பங்கேற்றுள்ளார்.

இந்த மாநாட்டில், சீனா, பாகிஸ்தான், ரஷியா, ஈரான் உள்பட 10 நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்று உரையாற்றினர்.

இந்த மாநாட்டில் பேசிய ராஜ்நாத் சிங், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்தும் ஆபரேஷன் சிந்தூர் குறித்தும் விளக்கம் அளித்தார்.

மேலும், பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளிக்கும் எந்த நாட்டையும் வெளிப்படையாக எஸ்சிஓ விமர்சிக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டறிக்கையில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து குறிப்பிடாததாலும், பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் வலுவான நிலைப்பாட்டை அறிக்கை பிரதிபலிக்கவில்லை எனக் கூறியும் கையெழுத்திட ராஜ்நாத் சிங் மறுத்துவிட்டார்.

மேலும், அந்த அறிக்கையில், பலுசிஸ்தான் பிரச்னையைக் குறிப்பிட்டு, அப்பகுதியில் இந்தியா அமைதியின்மையை உருவாக்குவதாக மறைமுகமாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளதால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலுசிஸ்தான் சுதந்திரப் போராட்டத்துக்கும் இந்தியாவுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று பாகிஸ்தானின் குற்றச்சாட்டு மத்திய அரசு ஏற்கெனவே விளக்கம் அளித்துள்ளது.

இதையும் படிக்க : பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றுபட வேண்டும்: சீனாவில் ராஜ்நாத் சிங் உரை!

அகமதாபாத் விமான விபத்து: கறுப்புப் பெட்டியில் இருந்து தரவுகள் மீட்பு!

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் மீட்கப்பட்ட கறுப்புப் பெட்டியில் இருந்து தரவுகள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.குஜராத் மாநிலம்... மேலும் பார்க்க

ஹிந்தி அனைத்து இந்திய மொழிகளுக்கும் நண்பன்! - மத்திய அமைச்சர் அமித் ஷா

ஹிந்தி அனைத்து இந்திய மொழிகளுக்கும் நண்பன் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.மத்திய அரசின் அலுவல் மொழித் துறையின் பொன்விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்... மேலும் பார்க்க

பாராசிட்டமால் 650 வகை மாத்திரைக்கு கர்நாடக அரசு தடை!

பாராசிட்டமால் 650 வகை உள்பட 14 மாத்திரை, மருந்துகளுக்கு தடை விதித்து கர்நாடக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.மக்கள் அதிகம் பயன்படுத்தும் மாத்திரைகள் மற்றும் மருந்துகளின் மாதிரிகளைப் பெற்று, கடந்த மே மா... மேலும் பார்க்க

சிபு சோரனை சந்தித்து நலம் விசாரித்தார் குடியரசுத் தலைவர் முர்மு!

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவருமான சிபு சோரனை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். 81 வயதாகும் சிபு சோரன், கடந்த சில நாள்களு... மேலும் பார்க்க

அம்புபாச்சி மேளா: 4 நாள்களுக்குப் பிறகு காமாக்யா கோயில் நடை திறப்பு!

அஸ்ஸாமின் குவாகாத்தியில் உள்ள காமாக்யா கோயிலில் அம்புபாச்சி மேளா நிறைவையொட்டி காமாக்யா கோயில் நடை பக்தர்கள் தரிசனத்துக்காக இன்று திறக்கப்பட்டுள்ளது. 51 சக்தி பீடங்களில் ஒன்றாக திகழ்கிறது ஸ்ரீ காமக்யா ... மேலும் பார்க்க

மகாராஷ்டிர தேர்தல் தகவலைத் தாருங்கள்; விவாதிக்கத் தயார்! காங்கிரஸ் அறிவிப்பு

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் இறுதி வாக்காளர் பட்டியல், வாக்குப்பதிவு விடியோ உள்ளிட்டவைக் கொடுத்தால், தேர்தல் ஆணையத்துடன் விவாதத்துக்குத் தயார் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.கடந்த ஆண்டு நடைப... மேலும் பார்க்க