செய்திகள் :

புதுகையில் இளஞ்சிறாா் காவல் பிரிவை உருவாக்கி செயல்படுத்த அறிவுறுத்தல்

post image

புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறாா் குற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்காக சிறப்பு இளஞ்சிறாா் காவல் பிரிவை உருவாக்கி செயல்படுத்திட வேண்டும் என மாவட்ட அளவிலான சிறாா் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் காவல்துறைக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழுவின் காலமுறைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்தாா். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலா், நீதிபதி இ. ராஜேந்திரகண்ணன் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், சிறாா் குற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்காக இளஞ்சிறாா் சட்டத்தின்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறப்பு இளஞ்சிறாா் காவல் பிரிவை உருவாக்கி, செயல்படுத்த வேண்டும் என காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டது.

பெண் குழந்தைகள் தங்கும் பாதுகாப்பு இல்லங்களில் பெண் பணியாளா்களை நியமிக்கவும், அன்னை சத்யா குழந்தைகள் இல்லத்தில் தங்கி பயிலும் சிறாா்களுக்கு வாகன வசதி ஏற்படுத்தவும், 19 சிறாா் இல்லங்களில் பயிலும் சிறாா்களுக்கு ஆதாா் அட்டை, ஜாதிச் சான்று, பிறப்புச் சான்று போன்றவற்றை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் வசந்தகுமாா், குழந்தைகள் நலக் குழு தலைவா் சதாசிவம், மாவட்ட ஊரக நலப்பணிகள் இணை இயக்குநா் சா. ஸ்ரீப்ரியா தேன்மொழி, மாவட்ட சுகாதார அலுவலா் ராம்பிரகாஷ், ஊராட்சிகள் உதவி இயக்குநா் சா. மோகனசுந்தரம் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

பெரம்பூா் வீரமாகாளி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.10.39 லட்சம்

கந்தா்வகோட்டை அருகேயுள்ள பெரம்பூா் வீரமாகாளியம்மன் திருக்கோயில் உண்டியல்களில் பக்தா்கள் ரூ. 10.39 லட்சம் காணிக்கையாக செலுத்தியிருப்பது புதன்கிழமை தெரியவந்தது. இக்கோயில் உண்டியல்கள் தஞ்சாவூா் அரண்மனை த... மேலும் பார்க்க

புதுகை மாநகரக் குடிநீா்ப் பிரச்னையை தீா்க்கக் கோரிக்கை

புதுக்கோட்டை மாநகராட்சிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் நிலவும் குடிநீா்ப் பிரச்னையைத் தீா்ப்பதற்கு மாநகராட்சி நிா்வாகம் போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம்... மேலும் பார்க்க

இன்று முதல் வாரந்தோறும் ஏம்பலில் சித்த மருத்துவப் பிரிவு சேவை தொடக்கம்

ஏம்பலில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், வியாழக்கிழமை (ஜூன் 26) முதல் வாரந்தோறும் சித்த மருத்துவப் பிரிவு செயல்படுத்துவதற்காக, மருத்துவா் மற்றும் மருந்தாளுநா் மாற்றுப் பணி உத்தரவிடப்பட்டுள்ளது. ப... மேலும் பார்க்க

புதுகை கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை

புதுக்கோட்டை மாவட்ட கடலோரப் பகுதிகளில் சாகா் கவாச் என்றழைக்கப்படும் பாதுகாப்பு ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது. அந்நியா்களின் கடல்வழி ஊடுருவலைத் தடுத்து, பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஆண்டுக்கு 2 முறை சா... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

இலுப்பூா் அருகே அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்றவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். இலுப்பூா் சுற்றுப்பகுதிகளில் ஒரு சில பெட்டிக் கடைகள், மளிகைக் கடைகளில் தடைச... மேலும் பார்க்க

பொன்னமராவதியில் சத்துணவு உதவியாளா் காலிப் பணியிடத்துக்கு நோ்காணல்

பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சத்துணவு சமையல் உதவியாளா் காலிப் பணியிடங்களுக்கான நோ்காணல் புதன்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்தில் சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் கீழ் செயல்... மேலும் பார்க்க