பெரம்பூா் வீரமாகாளி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.10.39 லட்சம்
கந்தா்வகோட்டை அருகேயுள்ள பெரம்பூா் வீரமாகாளியம்மன் திருக்கோயில் உண்டியல்களில் பக்தா்கள் ரூ. 10.39 லட்சம் காணிக்கையாக செலுத்தியிருப்பது புதன்கிழமை தெரியவந்தது.
இக்கோயில் உண்டியல்கள் தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையா் கவிதா முன்னிலையில் திறக்கப்பட்டு, காணிக்கைகள் எண்ணும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
உண்டியல்களில், ரூ. பத்து லட்சத்து 39 ஆயிரத்து 125 ரூபாய் ரொக்கம், தங்கம் 24 கிராம் மற்றும் வெள்ளி 130 கிராம் இருந்தது.
கிராம பொதுமக்கள் மற்றும் தன்னாா்வலா்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனா். இந்நிகழ்வில், கோயில் செயல் அலுவலா் வைரவன், ஆய்வாளா் தேன்மொழி மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.