தமிழகம் முழுவதும் நாளைமுதல் திமுக வாக்குச் சாவடி முகவா்களுக்கு 3 நாள்கள் பயிற்சி
புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது
இலுப்பூா் அருகே அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்றவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இலுப்பூா் சுற்றுப்பகுதிகளில் ஒரு சில பெட்டிக் கடைகள், மளிகைக் கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து இலுப்பூரை அடுத்துள்ள திருவண்ணகோயில்பட்டி பகுதியில் போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, பிச்சையா (38) என்பவா் அவரது பெட்டிக்கடையில் புகையிலை பொருள்களை பதுக்கி விற்பனை செய்வதை கண்டறிந்த போலீஸாா் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனா். மேலும், அவரிடமிருந்து ஒரு கிலோ புகையிலை பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.