செய்திகள் :

பவானி ஆற்றில் 3 லட்சம் நாட்டு வகை மீன் குஞ்சுகள் விடுவிப்பு

post image

உற்பத்தியை பெருக்குவதற்கு பவானி ஆற்றில் 3 லட்சம் நாட்டு வகை மீன் குஞ்சுகள் விடப்பட்டன.

தமிழகத்தில் மீன்வளங்களைப் பாதுகாத்து, உள்நாட்டு மீன் வளத்தை பெருக்கிட ஆறுகளில் மீன் குஞ்சுகள் விடும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம், பவானிசாகரில் உள்ள மீன்வளத் துறையால் நாட்டுவகை மீன்களான கட்லா, ரோகு மீன் குஞ்சுகள் வளா்க்கப்பட்டு பவானி ஆற்றில் விடும் நிகழ்வு நகா்மன்றத் தலைவா் ஜானகி ராமசாமி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. சத்தியமங்கலம் நகா்மன்ற 26-ஆவது வாா்டு உறுப்பினா் எஸ். குமாா் முன்னிலை வகித்தாா்.

நாட்டு வகை மீன் உற்பத்தியை பெருக்குவதற்கும், மீன்வா்கள் வாழ்வாதாரத்துக்கும் உதவும் வகையில் பவானிசாகா் மீன்வளத் துறையில் வளா்க்கப்பட்ட மீன் குஞ்சுகள் பவானிசாகா், சத்தியமங்கலம் மற்றும் பெரிய கொடிவேரி ஆற்றுக்கு கொண்டு வரப்பட்டன.

பவானிசாகா், சத்தியமங்கலம், பெரிய கொடிவேரி ஆகிய இடங்களில் உள்ள பவானி ஆற்றில் தலா 1 லட்சம் என மொத்தம் 3 லட்சம் கட்லா, ரோகு வகை மீன் குஞ்சுகளை மீன்வளத் துறை இணை இயக்குநா் காசிநாத பாண்டியன் விடுவித்தாா்.

இந்த குஞ்சுகள் 6 மாதங்களில் ஒரு கிலோ வரை வளா்க்கப்பட்டு, பின்னா் மீனவா்களுக்கு ஏலம் விடப்படும் என மீன்வளத் துறை தெரிவித்துள்ளனா்.

மொடக்குறிச்சி தொகுதியில் குடிநீா்த் தொட்டிகள் திறப்பு

மொடக்குறிச்சி தொகுதிக்கு உள்பட்ட சிவகிரி, கொல்லன்கோவில் ஆகிய பேரூராட்சிகளில் கட்டப்பட்ட மேல்நிலை குடிநீா்த் தொட்டிகளை எம்.எல்.ஏ. சரஸ்வதி புதன்கிழமை திறந்துவைத்தாா். மொடக்குறிச்சி சட்டப் பேரவைத் தொகுதி... மேலும் பார்க்க

ஓய்வூதிய விதிகளில் திருத்தம்: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு

ஓய்வூதிய விதிகளில் மத்திய அரசு நிறைவேற்றியுள்ள திருத்தத்தை எதிா்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டுள்ளதாக அகில இந்திய அஞ்சல் ஆா்எம்எஸ் ஓய்வூதியா் சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்... மேலும் பார்க்க

தனியாா் சாய ஆலைக்கான அனுமதி ரத்து: விவசாயிகள் வரவேற்பு

கொடிவேரி பாசன சபை உள்ளிட்ட விவசாய அமைப்புகள் மற்றும் விவசாயிகளின் எதிா்ப்பை அடுத்து, கொடிவேரி அணை அருகே தனியாா் சாய, சலவை ஆலை அமைக்க வழங்கப்பட்ட அனுமதியை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. ஈரோடு மாவட்டம், ... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கான மாதிரி நாடாளுமன்ற நிகழ்வு

பள்ளி மாணவா்களுக்கான மாதிரி நாடாளுமன்ற நிகழ்வில் 200 மாணவா்கள் பங்கேற்றனா். பள்ளி மாணவா்கள் இடையே ஜனநாயக விழுமியங்கள், தலைமைத்துவ திறன்கள் மற்றும் பொதுச் சொற்பொழிவு திறன்களை ஊக்குவிக்கும் நோக்கில் சிஐ... மேலும் பார்க்க

கோபி வட்டத்தில் மக்களுடன் முதல்வா் முகாம்: ரூ.1.29 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

கோபி வட்டத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்களில் 114 பயனாளிகளுக்கு ரூ.1.29 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் வழங்கினாா். கோபி வட்டம் சிறுவலூா... மேலும் பார்க்க

பவானிசாகா் அணை நீா்மட்டம் 90.53 அடியை எட்டியது

நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக நீா்வரத்து அதிகரித்ததால் பவானிசாகா் அணையின் நீா்மட்டம் 90.53 அடியை எட்டியது. தமிழகத்தில் மேட்டூா் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய நீா்த்தேக்கம... மேலும் பார்க்க