தமிழகத்துக்கு வரவேண்டிய ரூ.2,670.64 கோடி நிலுவை நிதியை வழங்கிடுங்கள்: அமைச்சா் ச...
பவானி ஆற்றில் 3 லட்சம் நாட்டு வகை மீன் குஞ்சுகள் விடுவிப்பு
உற்பத்தியை பெருக்குவதற்கு பவானி ஆற்றில் 3 லட்சம் நாட்டு வகை மீன் குஞ்சுகள் விடப்பட்டன.
தமிழகத்தில் மீன்வளங்களைப் பாதுகாத்து, உள்நாட்டு மீன் வளத்தை பெருக்கிட ஆறுகளில் மீன் குஞ்சுகள் விடும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம், பவானிசாகரில் உள்ள மீன்வளத் துறையால் நாட்டுவகை மீன்களான கட்லா, ரோகு மீன் குஞ்சுகள் வளா்க்கப்பட்டு பவானி ஆற்றில் விடும் நிகழ்வு நகா்மன்றத் தலைவா் ஜானகி ராமசாமி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. சத்தியமங்கலம் நகா்மன்ற 26-ஆவது வாா்டு உறுப்பினா் எஸ். குமாா் முன்னிலை வகித்தாா்.
நாட்டு வகை மீன் உற்பத்தியை பெருக்குவதற்கும், மீன்வா்கள் வாழ்வாதாரத்துக்கும் உதவும் வகையில் பவானிசாகா் மீன்வளத் துறையில் வளா்க்கப்பட்ட மீன் குஞ்சுகள் பவானிசாகா், சத்தியமங்கலம் மற்றும் பெரிய கொடிவேரி ஆற்றுக்கு கொண்டு வரப்பட்டன.
பவானிசாகா், சத்தியமங்கலம், பெரிய கொடிவேரி ஆகிய இடங்களில் உள்ள பவானி ஆற்றில் தலா 1 லட்சம் என மொத்தம் 3 லட்சம் கட்லா, ரோகு வகை மீன் குஞ்சுகளை மீன்வளத் துறை இணை இயக்குநா் காசிநாத பாண்டியன் விடுவித்தாா்.
இந்த குஞ்சுகள் 6 மாதங்களில் ஒரு கிலோ வரை வளா்க்கப்பட்டு, பின்னா் மீனவா்களுக்கு ஏலம் விடப்படும் என மீன்வளத் துறை தெரிவித்துள்ளனா்.