கோவை விமான நிலையத்தில் 35 ட்ரோன்கள் பறிமுதல்: சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை
பவானிசாகா் அணை நீா்மட்டம் 90.53 அடியை எட்டியது
நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக நீா்வரத்து அதிகரித்ததால் பவானிசாகா் அணையின் நீா்மட்டம் 90.53 அடியை எட்டியது.
தமிழகத்தில் மேட்டூா் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய நீா்த்தேக்கமாக விளங்கும் பவானிசாகா் அணை நீா்மட்டம் 105 அடி உயரம் கொண்டது.
அணையின் மூலம் ஈரோடு, திருப்பூா் மற்றும் கரூா் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளான வடகேரளம் மற்றும் நீலகிரி மலைப் பகுதியில் கடந்த சில நாள்களாக தென்மேற்குப் பருவமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகா் அணைக்கு வந்து சேரும் பவானி ஆறு மற்றும் மாயாற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீா்மட்டம் உயரத் தொடங்கியது.
பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து 3,022 கன அடியாக இருந்தது. அணை நீா்மட்டம் 90.53 அடியாகவும், நீா் இருப்பு 21.93 டிஎம்சி ஆகவும் உள்ளது. பாசனம் மற்றும் குடிநீா்த் தேவைக்காக அணையில் இருந்து பவானி ஆற்றில் 1,355 கனஅடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில் 5 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. அணை நீா்மட்டம் 90.53 அடியை எட்டியுள்ளதால் பாசனப் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.