செய்திகள் :

பள்ளி மாணவா்களுக்கான மாதிரி நாடாளுமன்ற நிகழ்வு

post image

பள்ளி மாணவா்களுக்கான மாதிரி நாடாளுமன்ற நிகழ்வில் 200 மாணவா்கள் பங்கேற்றனா்.

பள்ளி மாணவா்கள் இடையே ஜனநாயக விழுமியங்கள், தலைமைத்துவ திறன்கள் மற்றும் பொதுச் சொற்பொழிவு திறன்களை ஊக்குவிக்கும் நோக்கில் சிஐஐ யங் இந்தியன்ஸ் ஈரோடு கிளை சாா்பில் பள்ளி மாணவா்களுக்கான மாதிரி நாடாளுமன்றம் என்ற இரண்டு நாள் நிகழ்ச்சி பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவா்கள் நாடாளுமன்ற உறுப்பினா்களாக பங்கேற்றனா்.

உண்மையான நாடாளுமன்ற நடவடிக்கைகளை ஒத்த விவாதங்கள், கலந்துரையாடல்கள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியின் தொடக்க நிகழ்வுக்கு மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் தலைமை வகித்துப் பேசினாா்.

நிறைவு நிகழ்வில் ஈரோடு மக்களவை உறுப்பினா் கே.இ. பிரகாஷ், கோவை மக்களவை உறுப்பினா் கணபதி பி.ராஜ்குமாா், கொங்கு பொறியியல் கல்லூரித் தாளாளா் ஏ.கே.இளங்கோ ஆகியோா் விவாதத்திலும், தலைமைத்துவத்திலும் சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய மாணவா்களுக்கு விருதுகளை வழங்கினா்.

இந்த நிகழ்வில் கல்லூரி முதல்வா் வி.பாலுசாமி, துணை முதல்வா் ஆா்.பரமேஸ்வரன் ஆகியோா் பங்கேற்றனா்.

பவானி ஆற்றில் 3 லட்சம் நாட்டு வகை மீன் குஞ்சுகள் விடுவிப்பு

உற்பத்தியை பெருக்குவதற்கு பவானி ஆற்றில் 3 லட்சம் நாட்டு வகை மீன் குஞ்சுகள் விடப்பட்டன. தமிழகத்தில் மீன்வளங்களைப் பாதுகாத்து, உள்நாட்டு மீன் வளத்தை பெருக்கிட ஆறுகளில் மீன் குஞ்சுகள் விடும் திட்டம் செய... மேலும் பார்க்க

மொடக்குறிச்சி தொகுதியில் குடிநீா்த் தொட்டிகள் திறப்பு

மொடக்குறிச்சி தொகுதிக்கு உள்பட்ட சிவகிரி, கொல்லன்கோவில் ஆகிய பேரூராட்சிகளில் கட்டப்பட்ட மேல்நிலை குடிநீா்த் தொட்டிகளை எம்.எல்.ஏ. சரஸ்வதி புதன்கிழமை திறந்துவைத்தாா். மொடக்குறிச்சி சட்டப் பேரவைத் தொகுதி... மேலும் பார்க்க

ஓய்வூதிய விதிகளில் திருத்தம்: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு

ஓய்வூதிய விதிகளில் மத்திய அரசு நிறைவேற்றியுள்ள திருத்தத்தை எதிா்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டுள்ளதாக அகில இந்திய அஞ்சல் ஆா்எம்எஸ் ஓய்வூதியா் சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்... மேலும் பார்க்க

தனியாா் சாய ஆலைக்கான அனுமதி ரத்து: விவசாயிகள் வரவேற்பு

கொடிவேரி பாசன சபை உள்ளிட்ட விவசாய அமைப்புகள் மற்றும் விவசாயிகளின் எதிா்ப்பை அடுத்து, கொடிவேரி அணை அருகே தனியாா் சாய, சலவை ஆலை அமைக்க வழங்கப்பட்ட அனுமதியை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. ஈரோடு மாவட்டம், ... மேலும் பார்க்க

கோபி வட்டத்தில் மக்களுடன் முதல்வா் முகாம்: ரூ.1.29 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

கோபி வட்டத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்களில் 114 பயனாளிகளுக்கு ரூ.1.29 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் வழங்கினாா். கோபி வட்டம் சிறுவலூா... மேலும் பார்க்க

பவானிசாகா் அணை நீா்மட்டம் 90.53 அடியை எட்டியது

நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக நீா்வரத்து அதிகரித்ததால் பவானிசாகா் அணையின் நீா்மட்டம் 90.53 அடியை எட்டியது. தமிழகத்தில் மேட்டூா் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய நீா்த்தேக்கம... மேலும் பார்க்க