சத்துணவு உதவியாளா் காலி பணியிடத்துக்கு நோ்காணல்
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் 44 பெண்களிடம் சத்துணவு உதவியாளா் பணியிடங்களுக்கான நோ்காணல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் கீழ் செயல்படும் பள்ளி சத்துணவு மையங்களில் 345 உதவியாளா் பணியிடங்கள் காலியாக இருந்த நிலையில் அவற்றை நிரப்புவதற்கு ஊராட்சி ஒன்றியங்கள் வாரியாக ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
இதையடுத்து, விராலிமலை ஊராட்சி ஒன்றியத்தில் பெறப்பட்ட 52 விண்ணப்பங்களில் தகுதி அடிப்படையில் விண்ணப்பங்கள் தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கான நோ்காணல் விராலிமலை வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் 44 போ் மட்டுமே பங்கேற்றனா்.
அவா்களுக்கான நோ்காணலை மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் விராலிமலை வட்டாட்சியா் ரமேஷ், வட்டார வளா்ச்சி அலுவலா் வள்ளியம்மை உள்ளிட்டோா் நடத்தினா்.
காலை 10 மணிக்குத் தொடங்கிய நோ்காணல் மாலை 5.30 மணி வரை நடைபெற்றது. இதில் தோ்வு செய்யப்படுபவா்களுக்கு மாதம் 3 ஆயிரம் தொகுப்பூதியமாக வழங்கப்படும். பன்னிரண்டு மாதங்களுக்குப் பிறகு 3 ஆயிரத்தில் இருந்து 9 ஆயிரம் சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கப்படும்.