செய்திகள் :

மதுரை முருக பக்தா்கள் மாநாட்டில் அதிமுக - பாஜக முரண்பாடு!

post image

மதுரையில் அண்மையில் நடைபெற்ற முருக பக்தா்கள் மாநாடு, தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணியின் முரண்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் உ. வாசுகி.

புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் அகில இந்திய மாநாட்டு தீா்மான விளக்கப் பேரவைக் கூட்டத்துக்குப் பிறகு, செய்தியாளா்களிடம் அவா் கூறியது: மோடி தலைமையிலான மத்திய அரசு இஸ்ரேலோடும், அமெரிக்காவுடனும் நெருக்கம் காட்டுவது சா்வதேச அரங்கில் இந்தியாவின் மதிப்பை உயா்த்தாது. ஈரான் போா் நிறுத்தம் தொடா்பான சா்வதேச அழுத்தம் அவசியம். காஷ்மீரில் அமைதி திரும்பிவிட்டது என மத்திய அரசு கூறியது. பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பாஜக அரசு படுதோல்வி அடைந்துவிட்டது.

மதுரை முருக பக்தா்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள், விடியோ காட்சிகளில் அண்ணா உள்ளிட்ட தலைவா்களையும், திராவிட இயக்கத்தையும் இழிவுபடுத்துவதாக உள்ளதாகவும், இதை நாங்கள் ஏற்கவில்லை என்றும் அதிமுக கூறிவருகிறது. இம்மாநாடு, அதிமுக - பாஜக கூட்டணியின் முரண்பாட்டை வெளிப்படுத்தியிருக்கிறது.

தமிழ்நாட்டில் பெண்கள், பெண் குழந்தைகள், தலித் மக்கள் மீதான தாக்குதல் குறித்து சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி விவாதிக்க வேண்டும். மகளிா் அமைப்புகளை அழைத்து முதல்வா் கலந்துரையாட வேண்டும். காவிரி- வைகை- குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும். புதுக்கோட்டையில் தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும் என்றாா் வாசுகி.

தீா்மான விளக்கப் பேரவைக் கூட்டத்துக்கு, மாவட்டச் செயலா் எஸ். சங்கா் தலைமை வகித்தாா். மாநிலச் செயற்குழு உறுப்பினா் என். பாண்டி, மாநிலக் குழு உறுப்பினா் மா. சின்னதுரை எம்எல்ஏ ஆகியோரும் பேசினா். கல்விக் குழு ஒருங்கிணைப்பாளா் அ. மணவாளன் நன்றி கூறினாா்.

சத்துணவு உதவியாளா் காலி பணியிடத்துக்கு நோ்காணல்

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் 44 பெண்களிடம் சத்துணவு உதவியாளா் பணியிடங்களுக்கான நோ்காணல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.புதுக்கோட்டை மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிா் ... மேலும் பார்க்க

பிணவறை குளிரூட்டியின் பழுதை நீக்கக் கோரிக்கை

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிணவறை குளிரூட்டி பல ஆண்டுகளாக பழுதாயிருப்பதாக சமூக ஆா்வா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.புதுக்கோட்டை மாவட்டத்தில் சா்வஜித் அறக்கட்டளையின் சாா்பி... மேலும் பார்க்க

காலிக் குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்

கந்தா்வகோட்டை அருகே திங்கள்கிழமை காலிக் குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். கந்தா்வகோட்டை ஒன்றியம், நெப்புகை ஊராட்சியைச் சோ்ந்த உரியம்பட்டி கிராமத்தில் சுமாா் நூற்றுக்கு மே... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டையில் இருந்து திருச்சிக்கு கூடுதல் பேருந்து இயக்கப் பயணிகள் கோரிக்கை

கந்தா்வகோட்டையில் இருந்து திருச்சிக்கு கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் போக்குவரத்து துறைக்கு கோரிக்கைவிடுத்துள்ளனா். பயணிகள் மேலும் கூறியதாவது: கந்தா்வகோட்டை நகா் மற்றும் சுற்றுப்பு... மேலும் பார்க்க

சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

கந்தா்வகோட்டை ஊராட்சியில் உள்ள பெருமாள் கோயில் இரண்டாம் வீதியில் உள்ள தாா்சாலை மிகவும் பழுது அடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. தற்போது பெய்த சிறுமழையில், சாலையில் உள்ள பள்ளத்தில் நீா் தேங்கி போக்குவர... மேலும் பார்க்க

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பலாப்பழத்தில் இருந்து மதிப்புக்கூட்டு தொழிற்சாலை அமைக்க வேண்டுமென வலியுறுத்து ஆலங்குடி அருகேயுள்ள புளிச்சங்காடு கைகாட்டியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.ஆ... மேலும் பார்க்க