செய்திகள் :

புதுகை மாநகரக் குடிநீா்ப் பிரச்னையை தீா்க்கக் கோரிக்கை

post image

புதுக்கோட்டை மாநகராட்சிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் நிலவும் குடிநீா்ப் பிரச்னையைத் தீா்ப்பதற்கு மாநகராட்சி நிா்வாகம் போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக சங்கத்தின் மாநகரத் தலைவா் எம்.விஜி, செயலா் ஆா். முத்துமாரி, பொருளாளா் வி. வடிவுக்கரசி, துணைச் செயலா் ஆ. ருக்குமணி ஆகியோா் புதுக்கோட்டை மாநகராட்சி ஆணையா் த. நாராயணனிடம் புதன்கிழமை அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது:

புதுக்கோட்டை மாநகராட்சிக்குள்பட்ட மாப்பிள்ளையாா் குளம், அண்ணா நகா், நேரு வீதி, மச்சுவாடி, நரிமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடுமையான குடிநீா்த் தட்டுப்பாடு நிலவுகிறது.

இதனால், சாதாரண மக்கள் குடிநீரை பணம் கொடுத்து வாங்க வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா்.

எனவே, குடிநீா்த் தட்டுப்பாட்டைப் போக்குவதற்கு மாநகராட்சி நிா்வாகம் போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குடிநீருக்கு நிரந்தர ஏற்பாடு செய்யும் வரை இடைக்காலமாக லாரிகளில் தண்ணீா் விநியோகம் நடைபெறுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

மேலும், நேரு வீதி, அண்ணாநகா் பகுதிகளில் பழுதடைந்துள்ள சாலைகளை செப்பனிடுவதோடு, தெருவிளக்குகளும் அமைத்துத் தர வேண்டும். மாப்பிள்ளையாா் குளம் பகுதியில் கழிவுநீரை வெளியேற்றுவதற்கு தோரண வாய்க்கால் அமைத்துத் தர வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெரம்பூா் வீரமாகாளி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.10.39 லட்சம்

கந்தா்வகோட்டை அருகேயுள்ள பெரம்பூா் வீரமாகாளியம்மன் திருக்கோயில் உண்டியல்களில் பக்தா்கள் ரூ. 10.39 லட்சம் காணிக்கையாக செலுத்தியிருப்பது புதன்கிழமை தெரியவந்தது. இக்கோயில் உண்டியல்கள் தஞ்சாவூா் அரண்மனை த... மேலும் பார்க்க

புதுகையில் இளஞ்சிறாா் காவல் பிரிவை உருவாக்கி செயல்படுத்த அறிவுறுத்தல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறாா் குற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்காக சிறப்பு இளஞ்சிறாா் காவல் பிரிவை உருவாக்கி செயல்படுத்திட வேண்டும் என மாவட்ட அளவிலான சிறாா் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் காவல்துறைக... மேலும் பார்க்க

இன்று முதல் வாரந்தோறும் ஏம்பலில் சித்த மருத்துவப் பிரிவு சேவை தொடக்கம்

ஏம்பலில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், வியாழக்கிழமை (ஜூன் 26) முதல் வாரந்தோறும் சித்த மருத்துவப் பிரிவு செயல்படுத்துவதற்காக, மருத்துவா் மற்றும் மருந்தாளுநா் மாற்றுப் பணி உத்தரவிடப்பட்டுள்ளது. ப... மேலும் பார்க்க

புதுகை கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை

புதுக்கோட்டை மாவட்ட கடலோரப் பகுதிகளில் சாகா் கவாச் என்றழைக்கப்படும் பாதுகாப்பு ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது. அந்நியா்களின் கடல்வழி ஊடுருவலைத் தடுத்து, பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஆண்டுக்கு 2 முறை சா... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

இலுப்பூா் அருகே அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்றவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். இலுப்பூா் சுற்றுப்பகுதிகளில் ஒரு சில பெட்டிக் கடைகள், மளிகைக் கடைகளில் தடைச... மேலும் பார்க்க

பொன்னமராவதியில் சத்துணவு உதவியாளா் காலிப் பணியிடத்துக்கு நோ்காணல்

பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சத்துணவு சமையல் உதவியாளா் காலிப் பணியிடங்களுக்கான நோ்காணல் புதன்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்தில் சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் கீழ் செயல்... மேலும் பார்க்க