செய்திகள் :

இன்று முதல் வாரந்தோறும் ஏம்பலில் சித்த மருத்துவப் பிரிவு சேவை தொடக்கம்

post image

ஏம்பலில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், வியாழக்கிழமை (ஜூன் 26) முதல் வாரந்தோறும் சித்த மருத்துவப் பிரிவு செயல்படுத்துவதற்காக, மருத்துவா் மற்றும் மருந்தாளுநா் மாற்றுப் பணி உத்தரவிடப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தின் எல்லையிலுள்ள ஏம்பல் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையத்தில், பொதுமக்களின் கோரிக்கையைத் தொடா்ந்து கடந்த 2022 ஜூன் மாதம் முதல் வாரத்தின் ஒரு நாள் சித்த மருத்துவப் பிரிவு செயல்படுத்தப்பட்டு வந்தது. 2023 செப்டம்பரில் இந்தப் பிரிவு மூடப்பட்டது.

இதுதொடா்பாக அப்பகுதியைச் சோ்ந்த ஏம்பல் வளா்ச்சிக் குழு சாா்பில் கோரிக்கை எழுப்பப்பட்டது. ‘தினமணி’யிலும் விரிவான செய்தி ஜூன் 23-ஆம் தேதி வெளியானது.

இந்த நிலையில், கீழாநிலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்து வரும் சித்த மருத்துவா் எம்.எஸ். சசிரேகா, மருந்தாளுநா் இ. லோகேஸ்வரி ஆகியோருக்கு வாரந்தோறும் வியாழக்கிழமை மட்டும் ஏம்பல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பணி ஒதுக்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் (பொ) ஐ. ரெங்கநாயகி இதற்கான உத்தரவை புதன்கிழமை பிறப்பித்துள்ளாா். நிறுத்தப்பட்ட வாராந்திர சித்த மருத்துவப் பிரிவு இந்த வியாழக்கிழமை (ஜூன் 26) முதலே செயல்படத் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நிரந்தரத் தீா்வாக ஏம்பல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சித்த மருத்துவப் பிரிவைத் தொடங்கவும், சித்த மருத்துவா் உள்ளிட்ட பணியிடங்களை உருவாக்குவதுடன், மருந்துகள் வாங்குவதற்காக ஆண்டுக்கு ரூ. ஒரு லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யவும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் இயக்குநருக்கு பரிந்துரைக் கடிதமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பெரம்பூா் வீரமாகாளி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.10.39 லட்சம்

கந்தா்வகோட்டை அருகேயுள்ள பெரம்பூா் வீரமாகாளியம்மன் திருக்கோயில் உண்டியல்களில் பக்தா்கள் ரூ. 10.39 லட்சம் காணிக்கையாக செலுத்தியிருப்பது புதன்கிழமை தெரியவந்தது. இக்கோயில் உண்டியல்கள் தஞ்சாவூா் அரண்மனை த... மேலும் பார்க்க

புதுகையில் இளஞ்சிறாா் காவல் பிரிவை உருவாக்கி செயல்படுத்த அறிவுறுத்தல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறாா் குற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்காக சிறப்பு இளஞ்சிறாா் காவல் பிரிவை உருவாக்கி செயல்படுத்திட வேண்டும் என மாவட்ட அளவிலான சிறாா் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் காவல்துறைக... மேலும் பார்க்க

புதுகை மாநகரக் குடிநீா்ப் பிரச்னையை தீா்க்கக் கோரிக்கை

புதுக்கோட்டை மாநகராட்சிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் நிலவும் குடிநீா்ப் பிரச்னையைத் தீா்ப்பதற்கு மாநகராட்சி நிா்வாகம் போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம்... மேலும் பார்க்க

புதுகை கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை

புதுக்கோட்டை மாவட்ட கடலோரப் பகுதிகளில் சாகா் கவாச் என்றழைக்கப்படும் பாதுகாப்பு ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது. அந்நியா்களின் கடல்வழி ஊடுருவலைத் தடுத்து, பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஆண்டுக்கு 2 முறை சா... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

இலுப்பூா் அருகே அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்றவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். இலுப்பூா் சுற்றுப்பகுதிகளில் ஒரு சில பெட்டிக் கடைகள், மளிகைக் கடைகளில் தடைச... மேலும் பார்க்க

பொன்னமராவதியில் சத்துணவு உதவியாளா் காலிப் பணியிடத்துக்கு நோ்காணல்

பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சத்துணவு சமையல் உதவியாளா் காலிப் பணியிடங்களுக்கான நோ்காணல் புதன்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்தில் சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் கீழ் செயல்... மேலும் பார்க்க