செய்திகள் :

இந்தியா - பாகிஸ்தான்..அணு ஆயுதப்போரை நிறுத்தியுள்ளோம்! மீண்டும் சீண்டும் அதிபர் டிரம்ப்!

post image

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போரை வர்த்தகத்தைக் காரணமாகக் கூறி நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியுள்ளார்.

நெதர்லாந்து நாட்டில் நடைபெறும் நாட்டோ அமைப்பின் மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்பட அந்த அமைப்பு நாடுகளின் தலைவர்கள் இன்று (ஜூன் 25) பங்கேற்றுள்ளனர்.

இந்த மாநாட்டில் நடைபெற்ற பத்திரிகையாளர்களுடனான சந்திப்பில் பேசிய அதிபர் டிரம்ப், உலக நாடுகளுக்கு இடையிலான மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதாகப் பேசியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, இந்தியா பாகிஸ்தான் இடையிலான போரை வர்த்தகத்தைக் காரணமாகக் கூறி சில செல்போன் அழைப்புகளில் தான் முடிவுக்குக் கொண்டு வந்ததாகக் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் பேசியதாவது:

”இவற்றில் முக்கியமானது, இந்தியா மற்றும் பாகிஸ்தான்.. நான் அந்தப் போரை வர்த்தகத்தை மையமாகக் கூறி சில செல்போன் அழைப்புகளில் முடிவுக்குக் கொண்டு வந்தேன். நீங்கள் இருவரும் சண்டையிட்டால் நாங்கள் உங்களுடன் வர்த்தகம் செய்யப்போவதில்லை எனக் கூறினேன்.

பாகிஸ்தானின் ராணுவத் தளபதி கடந்த வாரம் எனது அலுவலகத்துக்கு வந்திருந்தார். பிரதமர் மோடி என்னுடைய சிறந்த நண்பர். அவர் ஒரு சிறந்த மனிதர். நான் அவர்களுக்கு ஒரு காரணத்தை உருவாக்கினேன். நீங்கள் சண்டையிட்டால் நாங்கள் வர்த்தகம் செய்யப்போவதில்லை எனக் கூறினேன். அதற்கு அவர்கள் இல்லை..எனக்கு வர்த்தகம் செய்யவேண்டும் எனக் கூறினார்கள். நாங்கள் அணு ஆயுதப் போரை நிறுத்தினோம்” எனப் பேசியுள்ளார்.

இத்துடன், கடந்த சில வாரங்களாக இந்தியா - பாகிஸ்தான், கொசோவோ மற்றும் செர்பியா ஆகிய நாடுகளை நாங்கள் கவனித்துக்கொண்டோம் எனவும் அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

முன்னதாக, இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர்நிறுத்ததில் மூன்றாவது நபரின் தலையீடு இல்லை என மத்திய அரசு தெரிவித்திருந்தது.

மேலும், இந்தப் போரை தான் நிறுத்தியதாகக் கூறவேண்டாம் என அதிபர் டிரம்ப்பிடம், பிரதமர் நரேந்திர மோடி கறாராகக் கேட்டுக்கொண்டார். அதன்பின்னர், இந்தப் போரை முடிவுக்கொண்டு வருதற்கு இருநாடுகளும்தான் ஒப்புக்கொண்டன என டிரம்ப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:அமெரிக்க தாக்குதலின் வெற்றி? அணுசக்தி தளவாடங்கள் பலத்த சேதம்! ஒப்புக்கொண்ட ஈரான்!

அமெரிக்கா - ஈரான் இடையே அடுத்தவாரம் பேச்சுவார்த்தை: டிரம்ப்

ஈரானுடன் அடுத்த வாரம் அமெரிக்க அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று (ஜூன் 25) தெரிவித்தார். ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போரினால், தடைபட்டிருந்த பேச்சுவார்த்த... மேலும் பார்க்க

அபிநந்தனை சிறைப்பிடித்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி கொல்லப்பட்டார்!

2019ஆம் ஆண்டு இந்திய விமானப் படை விங் கமாண்டர் அபிநந்தனை சிறைப்பிடித்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரியான மேஜர் மோயிஸ் அப்பாஸ் ஷா பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டார். பாகிஸ்தான் ராணுவ வீரர்களுக்கும் அந்நாட்... மேலும் பார்க்க

அணுகுண்டுகளைத் தாங்கும் போர் விமானங்களை வாங்கும் பிரிட்டன்!

அணுகுண்டுகளைத் தாங்கும் திறனுடைய எஃப்-35 போர் விமானங்களை அமெரிக்காவிடமிருந்து வாங்கவுள்ளதாக, பிரிட்டன் பிரதமர் கியெர் ஸ்டார்மெர் அறிவித்துள்ளார். நெதர்லாந்து நாட்டில் நடைபெறும் நாட்டோ அமைப்பின் மாநாட்... மேலும் பார்க்க

அமெரிக்க தாக்குதலின் வெற்றி? அணுசக்தி தளவாடங்கள் பலத்த சேதம்! ஒப்புக்கொண்ட ஈரான்!

அமெரிக்காவின் தாக்குதல்களில் தங்களது அணுசக்தி தளவாடங்கள் பலத்த சேதமடைந்துள்ளதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது.மத்திய கிழக்கில் கடந்த ஜூன் 13 ஆம் தேதி முதல் இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இருநாடுகளுக்கும் இடை... மேலும் பார்க்க

ஈரான், பாகிஸ்தானில் இருந்து வெளியேறும் ஆப்கன் மக்கள்! 7000 பேர் தாயகம் திரும்பினர்!

ஈரான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில், அகதிகளாக வசித்த சுமார் 7000-க்கும் மேற்பட்ட ஆப்கன் மக்கள் தங்களது தாயகத்துக்கு திரும்பியுள்ளதாக, தலிபான் அரசு தெரிவித்துள்ளது.ஈரான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாட... மேலும் பார்க்க

இஸ்ரேலுடன் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைத் தீவிரம்: ஹமாஸ் அறிவிப்பு!

காஸா மீதான போரை முடிவுக்குக் கொண்டு வர, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் கிளர்ச்சிப்படைக்கு இடையில் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைத் தீவிரமடைந்துள்ளதாக ஹமாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஸாவில் நடைபெற்று வரும... மேலும் பார்க்க