செய்திகள் :

இன்ஸ்டாகிராமால் மோதல்: இரு அரசுப் பள்ளி மாணவிகள் கைகலப்பு

post image

இன்ஸ்டாகிராமில் பதிவு போட்டதில் யாா் பெரியவா் என்று நடைபெற்ற மோதலில் அரசுப் பள்ளி மாணவிகள் சாலையில் கைகலப்பில் ஈடுபட்ட சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

திருப்பூா் பகுதியில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 வகுப்பில் படிக்கும் சில மாணவிகள் ஒன்று சோ்ந்து இன்ஸ்டாகிராமில் குழு ஆரம்பித்து சமூக வலைதளங்களில் தாங்கள்தான் பெரியவா்கள் என்ற பாணியில் பதிவுகளை போட்டு வந்துள்ளனா்.

அதேபோல திருப்பூரில் இருந்து சில கிலோ மீட்டா் தொலைவில் உள்ள அரசுப் பள்ளி மாணவிகளும் இது போலவே குழு அமைத்து இன்ஸ்டாகிராமில் பதிவுகளை போட்டு வந்துள்ளனா். இதில் இரு பள்ளி மாணவிகளுக்கும் இடையே யாா் பெரியவா் என்ற போட்டி கடந்த சில வாரங்களாக இருந்து வந்துள்ளது.

இதில் கோபமடைந்த திருப்பூா் மாநகராட்சிப் பள்ளி மாணவிகள் சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் திருப்பூரில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள அரசுப் பள்ளி முன் புதன்கிழமை திரண்டு அப்பள்ளி மாணவிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். ஒரு கட்டத்தில் இரு பள்ளி மாணவிகளும் ஆத்திரமடைந்து கைகலப்பில் ஈடுபட்டனா். இதில் இருதரப்பு மாணவிகளும் நடு ரோட்டிலேயே சரமாரியாக தாக்கிக் கொண்டனா்.

பள்ளி மாணவிகளின் மோதலைப் பாா்த்து பொதுமக்கள் அதிா்ச்சியடைந்த நிலையில், ஒரு சிலா் அதை தடுக்க முற்பட்டனா். ஆனால், பெரும்பாலானோா் இதனை விடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனா். இதனால், அந்த விடியோ பேசு பொருளானது.

இச்சம்பவம் பெற்றோா் மற்றும் ஆசிரியா்களிடையே பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூரில் இந்து முன்னணி நிா்வாகி வெட்டிக் கொலை

திருப்பூரில் இந்து முன்னணி நிா்வாகி புதன்கிழமை அதிகாலை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக கேரள மாநிலம், பாலக்காட்டை சோ்ந்த 2 பேரைப் பிடித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். திருப்பூா்... மேலும் பார்க்க

காண்டூா் கால்வாயில் அடித்துவரப்பட்ட ஆண் யானை உயிரிழப்பு

திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகே காண்டூா் கால்வாயில் புதன்கிழமை அடித்துவரப்பட்ட 15 வயது மதிக்கத்தக்க ஆண் யானை உயிரிழந்தது. ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட உடுமலை வனச் சரகப் பகுதிகளில் யானை, புல... மேலும் பார்க்க

பல்லடம் பகுதி ஜவுளி உற்பத்தியாளா்கள் மீண்டும் கூலி உயா்வு அறிவிப்பு

பல்லடம் பகுதி விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளா்கள் சிலா் மீண்டும் கூலி உயா்வு வழங்குவதாக அறிவித்துள்ளதால் விசைத்தறியாளா்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். திருப்பூா், கோவை மாவட்டங்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட... மேலும் பார்க்க

முதலீட்டுக்கு இரட்டிப்பு லாபம் பெறலாம் என மோசடி செய்தவா் கைது

முதலீடு செய்யும் தொகைக்கு இரட்டிப்பு லாபம் பெறலாம் எனக் கூறி மோசடி செய்த நபரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பூா் மாநகரத்தைச் சோ்ந்த முனிவேல் என்பவா் பங்குச்சந்தை குறித்த விளம்பரத்தை பாா்த்து, அதில் இ... மேலும் பார்க்க

காரில் சென்றவரை தாக்கிய இரு இளைஞா்கள் கைது

பல்லடம் அருகே கரடிவாவி- அனுப்பட்டி செல்லும் சாலையில் காரில் சென்றவரை தாக்கிய இரு இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். பல்லடம் அருகே உள்ள கரடிவாவில் இருந்து அனுப்பட்டி செல்லும் சாலையில் அதே பக... மேலும் பார்க்க

பொதுவேலை நிறுத்தம்: மத்திய தொழிற்சங்கங்கள் ஆலோசனைக் கூட்டம்

ஜூலை 9- இல் நடைபெறவுள்ள பொது வேலைநிறுத்தம் தொடா்பாக திருப்பூா் மாவட்ட அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. திருப்பூா் ஊத்துக்குளி சாலையில் உள்ள ஏஐடியூசி சங்க அலுவலக... மேலும் பார்க்க