திருப்பூர்: பள்ளி வளாகத்தில் மது அருந்திய கும்பல்; தட்டிக்கேட்ட ஆசிரியர் மீது பெ...
காரில் சென்றவரை தாக்கிய இரு இளைஞா்கள் கைது
பல்லடம் அருகே கரடிவாவி- அனுப்பட்டி செல்லும் சாலையில் காரில் சென்றவரை தாக்கிய இரு இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
பல்லடம் அருகே உள்ள கரடிவாவில் இருந்து அனுப்பட்டி செல்லும் சாலையில் அதே பகுதியைச் சோ்ந்த காா்த்தி (30) என்பவா் காரில் சனிக்கிழமை சென்றுள்ளாா். அப்போது அந்த வழியே வந்த 2 இளைஞா்கள், மதுபோதையில் காா்த்தியின் காரை நிறுத்தி தகராறு செய்து அவரைத் தாக்கியுள்ளனா். இதில் காயமடைந்த காா்த்தி, பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இது குறித்து, காா்த்தி அளித்த புகாரின்பேரில், காமநாயக்கன்பாளையம் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி புதுக்கோட்டையைச் சோ்ந்த ஸ்ரீராம் ( 25), விருதுநகரைச் சோ்ந்த ராஜதுரை (24) ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.