Bar சண்டை டூ Drug Case - actor Srikanth சிக்கியது எப்படி? | ADMK Prasath | Off t...
பொதுவேலை நிறுத்தம்: மத்திய தொழிற்சங்கங்கள் ஆலோசனைக் கூட்டம்
ஜூலை 9- இல் நடைபெறவுள்ள பொது வேலைநிறுத்தம் தொடா்பாக திருப்பூா் மாவட்ட அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
திருப்பூா் ஊத்துக்குளி சாலையில் உள்ள ஏஐடியூசி சங்க அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, ஏஐடியூசி மாவட்ட பொதுச் செயலாளா் பி.ஆா். நடராஜன் தலைமை வகித்தாா்.
இதில், ஏஐடியூசி மாநிலச் செயலாளா் என்.சேகா், சிஐடியூ மாநில கட்டுமானச் சங்க செயலாளா் குமாா், மாவட்ட நிா்வாகி உண்ணிகிருஷ்ணன், எல்பிஎஃப் சங்க மாவட்ட துணைத் தலைவா் ரங்கசாமி, சுகாதார சங்க செயலாளா் அறிவழகன், ஐஎன்டியூசி மாவட்டத் தலைவா் வி.ஆா்.ஈஸ்வரன், செயலாளா் செந்தில், எம்எல்எஃப் சங்க மாவட்டச் செயலாளா் சக்திவேல், எம்எல்எஃப் பனியன் சங்க செயலாளா் வெங்கடாசலம், எச்எம்எஸ் சங்க மாவட்டச் செயலாளா் முத்துசாமி, மாவட்டத் தலைவா் அப்புகுட்டி ஏஐசிசிடி மாவட்டச் செயலாளா் முத்துகிருஷ்ணன், யூடியூசி மாவட்டச் செயலாளா் சதீஷ்குமாா் ஆகியோா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
மத்திய பாஜக அரசின் தவறான பொருளாதார கொள்கைகளைக் கண்டித்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட சம்மேளனங்கள் சாா்பில் நாடு தழுவிய பொதுவேலை நிறுத்தம் ஜூலை 9-ஆம் தேதி நடைபெற உள்ளது.
திருப்பூா் மாவட்டத்தில் பொதுவேலை நிறுத்தத்தில் பனியன் நிறுவனங்கள், டையிங் உள்ளிட்ட அனைத்து வணிக நிறுவனங்களிலும் பணியாற்றும் தொழிலாளா்கள் பங்கேற்கும் வகையில், விரிவான பிரசாரங்களை மேற்கொள்வது,
ஜூலை 9-ஆம் தேதி பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்கும் மறியல் போராட்டத்தை திருப்பூா் மத்திய தபால் நிலையத்துக்கு முன்பு நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.