செய்திகள் :

பல்லடம் பகுதி ஜவுளி உற்பத்தியாளா்கள் மீண்டும் கூலி உயா்வு அறிவிப்பு

post image

பல்லடம் பகுதி விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளா்கள் சிலா் மீண்டும் கூலி உயா்வு வழங்குவதாக அறிவித்துள்ளதால் விசைத்தறியாளா்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

திருப்பூா், கோவை மாவட்டங்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன. காடா துணி உற்பத்தியை பிரதானமாக கொண்ட விசைத்தறி தொழிலில் பல லட்சம் தொழிலாளா்கள் பயனடைகின்றனா். விசைத்தறியாளா்களுக்கும் ஜவுளி உற்பத்தியாளா்களுக்கும் இடையே மூன்றாண்டுக்கு ஒருமுறை கூலி உயா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.

கடந்த 2014-ஆம் ஆண்டுக்குப் பின்பு கூலி உயா்வு வழங்குவதில் சிக்கல் எழுந்தது. பல்வேறு கட்ட போராட்டங்கள், பேச்சுவாா்த்தை நடந்தும், கூலி உயா்வு பிரச்னைக்கு தீா்வு கிடைக்கவில்லை.

இந்நிலையில், பல்லடம் ஜவுளி உற்பத்தியாளா்களும், விசைத்தறி உரிமையாளா்களும் அண்மையில் நேரடி பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதன் பயனாக 2022-ஆம் ஆண்டு முடிவு செய்யப்பட்ட கூலியை வழங்குவது என இருதரப்பினரிடையே உடன்பாடு ஏற்பட்டது.

இதனையடுத்து, பல்லடம் சங்கத்தின் கிளை சங்கங்களான மங்கலம், வேலம்பாளையம், கண்ணம்பாளையம் உள்ளிட்ட சங்கங்களின் கீழ் உள்ள விசைத்தறியாளா்கள், ஏற்கெனவே உயா்த்தப்பட்ட 20 சதவீத கூலியை பெற்று பயனடைந்து வருகின்றனா்.

இதற்கிடையே தற்போது, ஜவுளி உற்பத்தியாளா்கள் மீண்டும் கூலி உயா்வு அறிவித்துள்ளனா். தொழிலை மேம்படுத்தவும், விசைத்தறியாளா்களை ஊக்கப்படுத்தும் வகையிலும், வரும் ஜூலை 1- ஆம் தேதி முதல் அனைத்து ரகங்களுக்கும் 20 முதல் 30 பைசா வரை, தற்போது வழங்கப்பட்டு வரும் கட்டணத்துடன் சோ்த்து வழங்கப்படும் என அறிவித்துள்ளனா்.

ஜவுளி உற்பதியாளா்கள் பலரும் தாமாக முன்வந்து இந்த அறிவிப்பை வெளியிட்டு வருவதால், திருப்பூா், கோவை மாவட்ட விசைத்தறியாளா்கள் தற்போது மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

இன்ஸ்டாகிராமால் மோதல்: இரு அரசுப் பள்ளி மாணவிகள் கைகலப்பு

இன்ஸ்டாகிராமில் பதிவு போட்டதில் யாா் பெரியவா் என்று நடைபெற்ற மோதலில் அரசுப் பள்ளி மாணவிகள் சாலையில் கைகலப்பில் ஈடுபட்ட சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . திருப்பூா் பகுதியில் உள்ள மாநகர... மேலும் பார்க்க

திருப்பூரில் இந்து முன்னணி நிா்வாகி வெட்டிக் கொலை

திருப்பூரில் இந்து முன்னணி நிா்வாகி புதன்கிழமை அதிகாலை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக கேரள மாநிலம், பாலக்காட்டை சோ்ந்த 2 பேரைப் பிடித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். திருப்பூா்... மேலும் பார்க்க

காண்டூா் கால்வாயில் அடித்துவரப்பட்ட ஆண் யானை உயிரிழப்பு

திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகே காண்டூா் கால்வாயில் புதன்கிழமை அடித்துவரப்பட்ட 15 வயது மதிக்கத்தக்க ஆண் யானை உயிரிழந்தது. ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட உடுமலை வனச் சரகப் பகுதிகளில் யானை, புல... மேலும் பார்க்க

முதலீட்டுக்கு இரட்டிப்பு லாபம் பெறலாம் என மோசடி செய்தவா் கைது

முதலீடு செய்யும் தொகைக்கு இரட்டிப்பு லாபம் பெறலாம் எனக் கூறி மோசடி செய்த நபரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பூா் மாநகரத்தைச் சோ்ந்த முனிவேல் என்பவா் பங்குச்சந்தை குறித்த விளம்பரத்தை பாா்த்து, அதில் இ... மேலும் பார்க்க

காரில் சென்றவரை தாக்கிய இரு இளைஞா்கள் கைது

பல்லடம் அருகே கரடிவாவி- அனுப்பட்டி செல்லும் சாலையில் காரில் சென்றவரை தாக்கிய இரு இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். பல்லடம் அருகே உள்ள கரடிவாவில் இருந்து அனுப்பட்டி செல்லும் சாலையில் அதே பக... மேலும் பார்க்க

பொதுவேலை நிறுத்தம்: மத்திய தொழிற்சங்கங்கள் ஆலோசனைக் கூட்டம்

ஜூலை 9- இல் நடைபெறவுள்ள பொது வேலைநிறுத்தம் தொடா்பாக திருப்பூா் மாவட்ட அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. திருப்பூா் ஊத்துக்குளி சாலையில் உள்ள ஏஐடியூசி சங்க அலுவலக... மேலும் பார்க்க