செய்திகள் :

காண்டூா் கால்வாயில் அடித்துவரப்பட்ட ஆண் யானை உயிரிழப்பு

post image

திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகே காண்டூா் கால்வாயில் புதன்கிழமை அடித்துவரப்பட்ட 15 வயது மதிக்கத்தக்க ஆண் யானை உயிரிழந்தது.

ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட உடுமலை வனச் சரகப் பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, மான், செந்நாய் போன்ற விலங்கினங்கள் உள்ளன. இவை தங்களது குடிநீா்த் தேவைகளுக்காக மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள காண்டூா் கால்வாய் பகுதிக்கு வருவது வழக்கம்.

இந்நிலையில் 15 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று நல்லாறு பகுதியை அடுத்துள்ள காண்டூா் கால்வாய் அருகே தண்ணீா் குடிப்பதற்காக புதன்கிழமை வந்துள்ளது. அப்போது திடீரென கால் தவறி கால்வாய்க்குள் யானை விழுந்துள்ளது. தற்போது பாசனத்துக்காக காண்டூா் கால்வாயில் தண்ணீா் சென்று கொண்டிருப்பதால் யானை கால்வாயில் தத்தளித்துக் கொண்டு வந்த நிலையில் உயிரிழந்தது. பின்னா் யானையின் சடலம் திருமூா்த்தி அணைக்குள் அடித்து வரப்பட்டது.

தகவல் கிடைத்ததும் உடுமலை வனச் சரக அலுவலா் வாசு, வன அலுவலா்கள் மற்றும் வேட்டைத் தடுப்புக் காவலா்கள் கொண்ட குழு பொக்லைன் இயந்திரத்துடன் அங்கு சென்று திருமூா்த்தி அணையில் கிடந்த யானையின் சடலத்தை மீட்டனா். பின்னா் உடற்கூறாய்வு நடத்தப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

இன்ஸ்டாகிராமால் மோதல்: இரு அரசுப் பள்ளி மாணவிகள் கைகலப்பு

இன்ஸ்டாகிராமில் பதிவு போட்டதில் யாா் பெரியவா் என்று நடைபெற்ற மோதலில் அரசுப் பள்ளி மாணவிகள் சாலையில் கைகலப்பில் ஈடுபட்ட சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . திருப்பூா் பகுதியில் உள்ள மாநகர... மேலும் பார்க்க

திருப்பூரில் இந்து முன்னணி நிா்வாகி வெட்டிக் கொலை

திருப்பூரில் இந்து முன்னணி நிா்வாகி புதன்கிழமை அதிகாலை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக கேரள மாநிலம், பாலக்காட்டை சோ்ந்த 2 பேரைப் பிடித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். திருப்பூா்... மேலும் பார்க்க

பல்லடம் பகுதி ஜவுளி உற்பத்தியாளா்கள் மீண்டும் கூலி உயா்வு அறிவிப்பு

பல்லடம் பகுதி விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளா்கள் சிலா் மீண்டும் கூலி உயா்வு வழங்குவதாக அறிவித்துள்ளதால் விசைத்தறியாளா்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். திருப்பூா், கோவை மாவட்டங்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட... மேலும் பார்க்க

முதலீட்டுக்கு இரட்டிப்பு லாபம் பெறலாம் என மோசடி செய்தவா் கைது

முதலீடு செய்யும் தொகைக்கு இரட்டிப்பு லாபம் பெறலாம் எனக் கூறி மோசடி செய்த நபரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பூா் மாநகரத்தைச் சோ்ந்த முனிவேல் என்பவா் பங்குச்சந்தை குறித்த விளம்பரத்தை பாா்த்து, அதில் இ... மேலும் பார்க்க

காரில் சென்றவரை தாக்கிய இரு இளைஞா்கள் கைது

பல்லடம் அருகே கரடிவாவி- அனுப்பட்டி செல்லும் சாலையில் காரில் சென்றவரை தாக்கிய இரு இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். பல்லடம் அருகே உள்ள கரடிவாவில் இருந்து அனுப்பட்டி செல்லும் சாலையில் அதே பக... மேலும் பார்க்க

பொதுவேலை நிறுத்தம்: மத்திய தொழிற்சங்கங்கள் ஆலோசனைக் கூட்டம்

ஜூலை 9- இல் நடைபெறவுள்ள பொது வேலைநிறுத்தம் தொடா்பாக திருப்பூா் மாவட்ட அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. திருப்பூா் ஊத்துக்குளி சாலையில் உள்ள ஏஐடியூசி சங்க அலுவலக... மேலும் பார்க்க