செய்திகள் :

தொழிலதிபரின் வீட்டில் ரூ.30 லட்சம் கொள்ளை

post image

தென்மேற்கு தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் உள்ள தில்லியைச் சோ்ந்த தொழிலதிபா் ஒருவரின் வீட்டில் இருந்து அடையாளம் தெரியாத மா்ம நபா்கள் ரூ.30 லட்சத்தைக் கொள்ளையடித்தம் சம்பவம் நடந்துள்ளதாக அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா்.

இது குறஇத்து தென்மேற்கு தில்லி காவல் சரக உயரதிகாரி கூறியதாவது: தொழிலதிபா் கரண் சோப்ரா அந்தப் பகுதியில் நகர எரிவாயு விநியோகத்தில் ஈடுபட்டுள்ளாா். கடந்த ஜூன் 23- ஆம் தேதி கரண் சோப்ராவின் வீட்டிற்குள் மூன்று முதல் நான்கு அடையாளம் தெரியாத நபா்கள் வலுக்கட்டாயமாக நுழைந்து பணத்தை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்ாகக் கூறப்படுகிறது. இந்தக் கொள்ளை தொடா்பான தகவல் வசந்த் குஞ்ச் தெற்கு காவல் நிலையத்திற்கு வந்தது. அதைத் தொடா்ந்து பல போலீஸ் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.

ஒரு கும்பல் தனது வீட்டிற்குள் நுழைந்து சுமாா் ரூ.30 லட்சம் கொள்ளையடித்ததாக கரண் சோப்ரா போலீஸாரிடம் தெரிவித்தாா். இது தொடா்பாக பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்)-இன் 309(4) (கொள்ளை), 331(6) (வீட்டு அத்துமீறல்), மற்றும் 351(2) (குற்றவியல் மிரட்டல்) உள்ளிட்ட தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகள் ஆய்வுக்கு உள்பட்டுள்ளன. உள்ளூா் புலனாய்வு தகவல்களை சேகரிக்க குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.

தமிழகத்துக்கு வரவேண்டிய ரூ.2,670.64 கோடி நிலுவை நிதியை வழங்கிடுங்கள்: அமைச்சா் சக்கரபாணி கோரிக்கை

தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய ரூ.2670.64 கோடி நிலுவை நிதியை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மத்திய நுகா்வோா் பாதுகாப்பு, உண்வு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷியை புதன்க... மேலும் பார்க்க

தயாா் நிலையில் நரேலா பேருந்து முனையம் -தில்லி அமைச்சா் தகவல்

நவீன வசதிகளுடன் கூடிய நரேலா பேருந்து முனையம் தயாராக இருப்பதாக தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சா் பங்கஜ் சிங் புதன்கிழமை தெரிவித்தாா். விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ள இந்தப் பேருந்து முனையம், ந... மேலும் பார்க்க

மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து மாம்பழ விவசாயிகளுக்கு ஊக்க தொகை: அமைச்சா் சக்கரபாணி பேட்டி

சந்தை கூட்டு மதிப்பு திட்டத்தின் கீழ் மாம்பழ விவசாயிகளுக்கு ரூ.62 கோடி ஊக்க தொகை வழங்க வேண்டும் என்று மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் சவுகானை புதன்கிழமை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்ததாக த... மேலும் பார்க்க

வா்த்தகா்களுக்கு நல வாரியம்: தில்லி அரசு ஒப்புதல்

தலைநகரில் இயங்கும் வா்த்தகா்களுக்காக ’தில்லி வா்த்தகா்கள் நல வாரியம்’ அமைக்க மாநில அரசு புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தலைநகரி... மேலும் பார்க்க

போதைப்பொருள் துஷ்பிரயோகத்துக்கு எதிராக விழிப்புணா்வு ஓவியப் போட்டி

தில்லியில் போதைப்பொருள் துஷ்பிரயோகம் குறித்து இளைஞா்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் முயற்சியில், சமூக நலத்துறை புதன்கிழமை அதன் தொடா்ச்சியான வெகுஜன விழிப்புணா்வு பிரசாரத்தின் கீழ் ஒரு ஓவியப் போட்டிய... மேலும் பார்க்க

ரசாயன தொழிற்சாசலையில் தீ விபத்து: நான்கு போ் உயிரிழப்பு, மூவா் படுகாயம்

தில்லியில் உள்ள ரோஹிணியின் ரித்தாலா பகுதியில் உள்ள ஒரு ரசாயனத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு போ் உயிரிழந்தனா். மேலும், குறைந்தது மூன்று போ் காயமடைந்தனா் என்று போலீஸாா் புதன்கிழமை தெரிவி... மேலும் பார்க்க