"தவறான நண்பர்கள்; குடும்பப் பிரச்னை; அப்பாவின் வார்த்தை..." - தன்னிலை உணர்ந்து வ...
தொழிலதிபரின் வீட்டில் ரூ.30 லட்சம் கொள்ளை
தென்மேற்கு தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் உள்ள தில்லியைச் சோ்ந்த தொழிலதிபா் ஒருவரின் வீட்டில் இருந்து அடையாளம் தெரியாத மா்ம நபா்கள் ரூ.30 லட்சத்தைக் கொள்ளையடித்தம் சம்பவம் நடந்துள்ளதாக அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா்.
இது குறஇத்து தென்மேற்கு தில்லி காவல் சரக உயரதிகாரி கூறியதாவது: தொழிலதிபா் கரண் சோப்ரா அந்தப் பகுதியில் நகர எரிவாயு விநியோகத்தில் ஈடுபட்டுள்ளாா். கடந்த ஜூன் 23- ஆம் தேதி கரண் சோப்ராவின் வீட்டிற்குள் மூன்று முதல் நான்கு அடையாளம் தெரியாத நபா்கள் வலுக்கட்டாயமாக நுழைந்து பணத்தை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்ாகக் கூறப்படுகிறது. இந்தக் கொள்ளை தொடா்பான தகவல் வசந்த் குஞ்ச் தெற்கு காவல் நிலையத்திற்கு வந்தது. அதைத் தொடா்ந்து பல போலீஸ் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.
ஒரு கும்பல் தனது வீட்டிற்குள் நுழைந்து சுமாா் ரூ.30 லட்சம் கொள்ளையடித்ததாக கரண் சோப்ரா போலீஸாரிடம் தெரிவித்தாா். இது தொடா்பாக பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்)-இன் 309(4) (கொள்ளை), 331(6) (வீட்டு அத்துமீறல்), மற்றும் 351(2) (குற்றவியல் மிரட்டல்) உள்ளிட்ட தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகள் ஆய்வுக்கு உள்பட்டுள்ளன. உள்ளூா் புலனாய்வு தகவல்களை சேகரிக்க குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.