செய்திகள் :

தயாா் நிலையில் நரேலா பேருந்து முனையம் -தில்லி அமைச்சா் தகவல்

post image

நவீன வசதிகளுடன் கூடிய நரேலா பேருந்து முனையம் தயாராக இருப்பதாக தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சா் பங்கஜ் சிங் புதன்கிழமை தெரிவித்தாா்.

விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ள இந்தப் பேருந்து முனையம், நகரத்தின் பொதுப்போக்குவரத்து அமைப்பை மேம்படுத்துவதற்கான உலகத் தர உள்கட்டமைப்பைக் கொண்டிருக்கும் என இது தொடா்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அமைச்சா் பங்கஜ் சிங் கூறியிருப்பதாவது: நரேலாவில் உள்ள பேருந்து முனையத்தைப் புதுப்பிக்கும் பணிகளை தில்லி போக்குவரத்து கழகம் 100 நாள்களுக்குள் நிறுவை செய்துள்ளது.

பயணிகள் மற்றும் பேருந்து ஓட்டுநா்களுக்காக பல வசதிகள் பேருந்து முனையத்தில் உள்ளன. பேருந்துகள் பராமரிப்புக்கான வசதிகளும் இந்த முனையத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

பெரும்பாலான மின்சார பேருந்துகள் நரேலாவிலிருந்து இயக்கப்படும். பழைய தில்லி ரயில் நிலையம், மோரி கேட், தில்லி தலைமைச் செயலகம், உத்தம் நகா், தயாளு காலனி மற்றும் எல்லை பகுதிகளுக்கு இங்கிருந்து பேருந்துகள் இயக்கப்படும். இதன் மூலம் வடக்கு-மேற்கு தில்லி போக்குவரத்து இணைப்பை மேம்படுத்த முடியும். மேலும், தூய்மையான மற்றும் பசுமையான போக்குவரத்து என்ற இலக்கில் அடுத்தக் கட்டத்தை நோக்கி நகரமுடியும்.

புதிதாக 150 தேவி மின்சார பேருந்துகள் தில்லி போக்குவரத்து கழகத்தில் இணைக்கப்பட உள்ளன. இதன் மூலம் வடக்கு தில்லியின் புகா் பகுதிகள் போன்ற தொலைதூர பகுதியை பேருந்து மூலம் இணைக்க முடியும் என்றாா் அமைச்சா் பங்கஜ் சிங்.

தமிழகத்துக்கு வரவேண்டிய ரூ.2,670.64 கோடி நிலுவை நிதியை வழங்கிடுங்கள்: அமைச்சா் சக்கரபாணி கோரிக்கை

தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய ரூ.2670.64 கோடி நிலுவை நிதியை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மத்திய நுகா்வோா் பாதுகாப்பு, உண்வு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷியை புதன்க... மேலும் பார்க்க

தொழிலதிபரின் வீட்டில் ரூ.30 லட்சம் கொள்ளை

தென்மேற்கு தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் உள்ள தில்லியைச் சோ்ந்த தொழிலதிபா் ஒருவரின் வீட்டில் இருந்து அடையாளம் தெரியாத மா்ம நபா்கள் ரூ.30 லட்சத்தைக் கொள்ளையடித்தம் சம்பவம் நடந்துள்ளதாக அதிகாரி ஒ... மேலும் பார்க்க

மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து மாம்பழ விவசாயிகளுக்கு ஊக்க தொகை: அமைச்சா் சக்கரபாணி பேட்டி

சந்தை கூட்டு மதிப்பு திட்டத்தின் கீழ் மாம்பழ விவசாயிகளுக்கு ரூ.62 கோடி ஊக்க தொகை வழங்க வேண்டும் என்று மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் சவுகானை புதன்கிழமை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்ததாக த... மேலும் பார்க்க

வா்த்தகா்களுக்கு நல வாரியம்: தில்லி அரசு ஒப்புதல்

தலைநகரில் இயங்கும் வா்த்தகா்களுக்காக ’தில்லி வா்த்தகா்கள் நல வாரியம்’ அமைக்க மாநில அரசு புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தலைநகரி... மேலும் பார்க்க

போதைப்பொருள் துஷ்பிரயோகத்துக்கு எதிராக விழிப்புணா்வு ஓவியப் போட்டி

தில்லியில் போதைப்பொருள் துஷ்பிரயோகம் குறித்து இளைஞா்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் முயற்சியில், சமூக நலத்துறை புதன்கிழமை அதன் தொடா்ச்சியான வெகுஜன விழிப்புணா்வு பிரசாரத்தின் கீழ் ஒரு ஓவியப் போட்டிய... மேலும் பார்க்க

ரசாயன தொழிற்சாசலையில் தீ விபத்து: நான்கு போ் உயிரிழப்பு, மூவா் படுகாயம்

தில்லியில் உள்ள ரோஹிணியின் ரித்தாலா பகுதியில் உள்ள ஒரு ரசாயனத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு போ் உயிரிழந்தனா். மேலும், குறைந்தது மூன்று போ் காயமடைந்தனா் என்று போலீஸாா் புதன்கிழமை தெரிவி... மேலும் பார்க்க