``இஸ்ரேல் - ஈரான் போரில் உதவி வேண்டுமா என புதின் கேட்டார்.." - அதிபர் ட்ரம்ப் சொ...
தயாா் நிலையில் நரேலா பேருந்து முனையம் -தில்லி அமைச்சா் தகவல்
நவீன வசதிகளுடன் கூடிய நரேலா பேருந்து முனையம் தயாராக இருப்பதாக தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சா் பங்கஜ் சிங் புதன்கிழமை தெரிவித்தாா்.
விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ள இந்தப் பேருந்து முனையம், நகரத்தின் பொதுப்போக்குவரத்து அமைப்பை மேம்படுத்துவதற்கான உலகத் தர உள்கட்டமைப்பைக் கொண்டிருக்கும் என இது தொடா்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அமைச்சா் பங்கஜ் சிங் கூறியிருப்பதாவது: நரேலாவில் உள்ள பேருந்து முனையத்தைப் புதுப்பிக்கும் பணிகளை தில்லி போக்குவரத்து கழகம் 100 நாள்களுக்குள் நிறுவை செய்துள்ளது.
பயணிகள் மற்றும் பேருந்து ஓட்டுநா்களுக்காக பல வசதிகள் பேருந்து முனையத்தில் உள்ளன. பேருந்துகள் பராமரிப்புக்கான வசதிகளும் இந்த முனையத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
பெரும்பாலான மின்சார பேருந்துகள் நரேலாவிலிருந்து இயக்கப்படும். பழைய தில்லி ரயில் நிலையம், மோரி கேட், தில்லி தலைமைச் செயலகம், உத்தம் நகா், தயாளு காலனி மற்றும் எல்லை பகுதிகளுக்கு இங்கிருந்து பேருந்துகள் இயக்கப்படும். இதன் மூலம் வடக்கு-மேற்கு தில்லி போக்குவரத்து இணைப்பை மேம்படுத்த முடியும். மேலும், தூய்மையான மற்றும் பசுமையான போக்குவரத்து என்ற இலக்கில் அடுத்தக் கட்டத்தை நோக்கி நகரமுடியும்.
புதிதாக 150 தேவி மின்சார பேருந்துகள் தில்லி போக்குவரத்து கழகத்தில் இணைக்கப்பட உள்ளன. இதன் மூலம் வடக்கு தில்லியின் புகா் பகுதிகள் போன்ற தொலைதூர பகுதியை பேருந்து மூலம் இணைக்க முடியும் என்றாா் அமைச்சா் பங்கஜ் சிங்.