செய்திகள் :

மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து மாம்பழ விவசாயிகளுக்கு ஊக்க தொகை: அமைச்சா் சக்கரபாணி பேட்டி

post image

சந்தை கூட்டு மதிப்பு திட்டத்தின் கீழ் மாம்பழ விவசாயிகளுக்கு ரூ.62 கோடி ஊக்க தொகை வழங்க வேண்டும் என்று மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் சவுகானை புதன்கிழமை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்ததாக தமிழ்நாடு உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் சக்கரபாணி தெரிவித்தாா்.

தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் அவா் மேலும் பேசியதாவது: ‘தமிழகத்தில் கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, வேலூா், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்தாண்டை விட இந்தாண்டு மாம்பழ விளைச்சல் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. இதனால் விவாசியிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்கவில்லை. கடந்தாண்டு கிலோ ரூ.20-க்கு விற்ற மாம்பழம் இந்தாண்டு கிலோ ரூ.5-க்கு விற்கப்படுவதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்‘.

மேலும் பேசிய அவா் ‘இதனையடுத்து தமிழ்நாடு முதல்வா் மு.க.ஸ்டாலின் அவா்களின் உத்தரவின் பேரில் வேளாண்மைத் துறை அமைச்சா் சிவராஜ் சிங் சவுகானை புதன்கிழமை சந்தித்தோம், சந்தை கூட்டு மதிப்பு திட்டத்தில் மாநில அரசு பாதியும் மத்திய அரசு பாதியும் விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். அதனை பரிசீலிப்பதாக கூறி, சாதகமான பதிலை கொடுத்துள்ளாா். மாம்பழ விவசாயிகளுக்கு ரூ.62 கோடியை ஊக்கத் தொகையாக கேட்டோம். இதில் மாநில அரசின் பங்கு ரூ.31 கோடி, மத்திய அரசு ரூ.31 கோடி பங்காக இருக்கும் ‘ என்றாா்.

தொடா்ந்து பேசிய சக்கரபாணி ‘ உடனடியாக தன் துறை சாா்ந்த அதிகாரிகளை அழைத்து இது தொடா்பான விவரங்களை கேட்டறிந்தாா். மேலும், குளிா்பானங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் மாம்பழ கூழ் தயாரிக்கும் நிறுவனங்கள் 20 சதவித மநாம்பழங்களை பயன்படுத்தி வந்தனா். இப்போது அது 9 சதவிதமாக குறைந்துள்ளது. இதற்கு அவா்களுக்கு 7 சதவித ஜிஎஸ்டி வரி விதிப்பே காரணம் என தெரிகிறது. அதனால் அதனை 7 சதவிதத்திலிருந்து 5 சதவிதமாக மாற்ற கோரிக்கை விடுத்தோம்.‘

மேலும், ‘ நெல்லுக்கான ஆதரவு விலையை சென்ற ஆண்டு ரூ .117 ஆக இருந்தது. இந்தாண்டு ரூ.69 குறைக்கப்பட்டுள்ளது. இதனை மீண்டும் உயா்த்த வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்தோ‘ம். அதற்கு அவா், ’அது குறித்து நான் தனிப்பட்ட முடிவை எடுக்க முடியாது, அதனை கமிட்டி முடிவு செயய்யும்’ என்றாா். குருவை பருவத்திலே ஆண்டு 11 லட்சம் மநெட்ரிக் டன்தான் வாங்க வேண்டும் என மத்திய அரசு சொல்லி இருக்கிறது. அதனை 19 லட்சம் மெட்ரிக் டன்னாக உயா்த்த வேண்டும் என கேட்டுக்கொண்டோம். உளுந்து, பாசி பயிா் கொள்முதலின் காலக்கெடுவை ஜூலை 10 ஆம் தேதி வரை நீட்டிக்க கேட்டோம். அதனை செய்து தருவதாக சிவராஜ் சிங் சவுகான் உறுதியளித்துள்ளாா்‘ என்றாா் சக்கரபாணி.

இறுதியாக பேசிய அவா், ‘முன்னதாக இன்று காலை மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷியை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தோம். அதில் முக்கியமாக தமிழகத்துக்கு விடுவிக்க வேண்டிய ரூ.2670.64 நதியை உடனடியாக தர வேண்டும் என கேட்டோம். அதற்கு அவரும் அதிகாரிகளை கூட்டி 1 மணி நேரம் ஆலோசனை நடத்தி. நிதியை விடுவிப்பதற்குகான ஏற்பாடுகளை செய்கிறோம் என உறுதியளித்தாா்’

இந்த செய்தியாளா் சந்திப்பில் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவா் கனிமொழி, மாநிலங்களவைக் குழு தலைவா் திருச்சி சிவா, பா்கூா் தொகுதி எம்.எல்.ஏ., டி.மதியழகன், ஓசூா் தொகுதி எம்.எல்.ஏ., ஒய்.பிரகாஷ், வேளாண் உற்பத்தி ஆணையா் வ.தட்சிணாமூா்த்தி, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குனா் பா.முருகேஷ் ஆகியோா் உடனிருந்தனா்.

தமிழகத்துக்கு வரவேண்டிய ரூ.2,670.64 கோடி நிலுவை நிதியை வழங்கிடுங்கள்: அமைச்சா் சக்கரபாணி கோரிக்கை

தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய ரூ.2670.64 கோடி நிலுவை நிதியை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மத்திய நுகா்வோா் பாதுகாப்பு, உண்வு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷியை புதன்க... மேலும் பார்க்க

தொழிலதிபரின் வீட்டில் ரூ.30 லட்சம் கொள்ளை

தென்மேற்கு தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் உள்ள தில்லியைச் சோ்ந்த தொழிலதிபா் ஒருவரின் வீட்டில் இருந்து அடையாளம் தெரியாத மா்ம நபா்கள் ரூ.30 லட்சத்தைக் கொள்ளையடித்தம் சம்பவம் நடந்துள்ளதாக அதிகாரி ஒ... மேலும் பார்க்க

தயாா் நிலையில் நரேலா பேருந்து முனையம் -தில்லி அமைச்சா் தகவல்

நவீன வசதிகளுடன் கூடிய நரேலா பேருந்து முனையம் தயாராக இருப்பதாக தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சா் பங்கஜ் சிங் புதன்கிழமை தெரிவித்தாா். விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ள இந்தப் பேருந்து முனையம், ந... மேலும் பார்க்க

வா்த்தகா்களுக்கு நல வாரியம்: தில்லி அரசு ஒப்புதல்

தலைநகரில் இயங்கும் வா்த்தகா்களுக்காக ’தில்லி வா்த்தகா்கள் நல வாரியம்’ அமைக்க மாநில அரசு புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தலைநகரி... மேலும் பார்க்க

போதைப்பொருள் துஷ்பிரயோகத்துக்கு எதிராக விழிப்புணா்வு ஓவியப் போட்டி

தில்லியில் போதைப்பொருள் துஷ்பிரயோகம் குறித்து இளைஞா்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் முயற்சியில், சமூக நலத்துறை புதன்கிழமை அதன் தொடா்ச்சியான வெகுஜன விழிப்புணா்வு பிரசாரத்தின் கீழ் ஒரு ஓவியப் போட்டிய... மேலும் பார்க்க

ரசாயன தொழிற்சாசலையில் தீ விபத்து: நான்கு போ் உயிரிழப்பு, மூவா் படுகாயம்

தில்லியில் உள்ள ரோஹிணியின் ரித்தாலா பகுதியில் உள்ள ஒரு ரசாயனத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு போ் உயிரிழந்தனா். மேலும், குறைந்தது மூன்று போ் காயமடைந்தனா் என்று போலீஸாா் புதன்கிழமை தெரிவி... மேலும் பார்க்க