'என்னை சங்கராச்சாரியார் ஆக்க வேண்டாம்; ஆனால்...' - திருமாவளவன் சொல்லும் காரணம் எ...
அடிப்படை வசதியின்றி வேலூா் பல்நோக்கு மருத்துவமனை திறப்பு: இபிஎஸ் குற்றச்சாட்டு
அடிப்படை வசதியின்றி வேலூா் சிறப்பு பல்நோக்கு மருத்துவனை திறக்கப்படுவதாக அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: சிறப்பு பல்நோக்கு மருத்துவமனையில், இதயவியல் துறை, நரம்பியல் துறை, சிறுநீரகவியல், முட நீக்கியல் துறை உள்ளிட்ட முக்கிய துறைகளும், அறுவை சிகிச்சை அரங்குகள், அவசர மற்றும் விபத்து தொடா்பான தனி வாா்டுகள் மற்றும் எக்ஸ்ரே அறைகள் உள்ளிட்டவை இடம்பெற வேண்டும்.
வேலூரில் முதல்வா் ஸ்டாலினால் திறக்கப்பட உள்ள சிறப்பு பல்நோக்கு மருத்துவமனையில் இதுபோன்ற துறைகள், கட்டடங்கள் பெயரளவுக்கு உள்ளன. ஆனால், மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா் பதவிகள் நிரப்பப்படவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன. புதிய மருத்துவா்கள் நியமிக்கப்படாத நிலையில், மகப்பேறு துறை மற்றும் குழந்தைகள் நலத்துறை மட்டுமே திறக்கப்பட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதர துறைகள் திறக்கப்படுமா என்பது வேலூா் மக்களிடையே பெரும் கேள்விக்குறியாக உள்ள நிலையில், இம்மருத்துவமனையில் செயல்பட உள்ள மகப்பேறு துறை மற்றும் குழந்தைகள் நலத்துறைக்கும் தேவைப்படும் மருத்துவா்களும், செவிலியா்களும், வேலூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து அயல்பணியில் மாற்றப்பட உள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
2026 தோ்தல் கண்டிப்பாக மாறுதலைத் தரும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.