செய்திகள் :

ஒன் பிளஸ்-க்கு போட்டியாக விவோவின் புதிய ஸ்மார்ட்போன்!

post image

விவோ நிறுவனத்தின் எக்ஸ் 200 எஃப்இ ஸ்மார்ட்போன், ஜூலை மாத இரண்டாவது வாரத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், தைவானில் அறிமுகமாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகவுள்ளது.

ஒன்பிளஸ் நிறுவனத்தின் 13எஸ் ஸ்மார்ட்போனுக்கு போட்டியாக விவோ எஸ் 200 எஃப்இ ஸ்மார்ட்போனை விவோ தயாரித்துள்ளது.

ஃபிளாக்‌ஷிப் எனப்படும் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் தயாராகியுள்ள இதன் விலை இந்தியாவில் ரூ. 55,000 வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் முக்கிய அம்சமாக, சோனி நிறுவனத்தின் லென்ஸ்களை விட மேம்பட்ட திறன் உடைய ஸெய்ஸ் (Zeiss) லென்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால், புகைப்படங்கள் மற்றும் விடியோக்களை எடுப்பதில் தனித்துவமான இருக்கும்.

விவோ எக்ஸ் 200 எஃப்இ சிறப்பம்சங்கள்

  • 6.31 அங்குலத்தில் அமோலிட் திரை வழங்கப்பட்டுள்ளது.

  • திரையின் பயன்பாடு சுமூகமாக இருக்கும் வகையில் 120Hz திறன் கொடுக்கப்பட்டுள்ளது.

  • தூசு மற்றும் நீர்புகாத்தன்மை உடைய IP69 திறனுடன் வருகிறது.

  • மீடியாடெக் டைமன்சிட்டி 9300+ புராசஸர் கொண்டது.

  • நினைவகத்தை 512GB வரையிலும் உள்நினைவகத்தை 12GB வரையிலும் பெருக்கிக்கொள்ளலாம்.

  • 6,500mAh பேட்டரி திறனுடன் வேகமாக சார்ஜ் செய்யும் வகையில் 90W சார்ஜிங் திறன் கொடுக்கப்பட்டுள்ளது.

  • வையர் இல்லாமல் சார்ஜ் செய்யலாம்.

  • ஸெய்ஸ் லென்ஸுகளுடைய 3 கேமராக்கள் பின்புறம் கொடுக்கப்பட்டுள்ளன. (50MP பிரைமரி சென்சார், 50MP டெலிபோட்டோ லென்ஸ், 8MP அல்ட்ரா வைட் சென்சார்) முன்பக்க செல்ஃபி கேமராவுக்கு 50MP லென்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | ஒரு மாதத்திற்குள் இன்னொரு ஸ்மார்ட்போனா? ஜூலை 2-ல் அறிமுகம் செய்கிறது விவோ!

ஈரான்-இஸ்ரேல் போர் நிறுத்தம் எதிரொலி: தங்கம் விலை ரூ.900 சரிவு!

புதுதில்லி: ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் ஏற்படும் என்ற எதிர்பார்ப்புகள் நிலவி வந்த நிலையில், பாதுகாப்பான புகலிடமான தங்கத்தின் விலை இன்று தலைநகர் தில்லியில் ரூ.900 சரிந்து ரூ.98,900 ஆக நி... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 75 காசுகள் உயர்ந்து ரூ.86.03 ஆக முடிவு!

மும்பை: மத்திய கிழக்கில் ஏற்பட்ட பதற்றத்தைத் தொடர்ந்து, உலகளாவிய கச்சா எண்ணெய் விலை குறைந்ததால், இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவிலிருந்து மீண்டு, டாலருக்கு நிகராக 75 காசுகள் உயர்ந்து ரூ.86.03 ... மேலும் பார்க்க

மத்திய கிழக்கில் ஏற்பட்ட பதற்றங்களுக்கு மத்தியிலும் சென்செக்ஸ் 158 புள்ளிகள் உயர்வுடன் முடிவு!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் நிறுத்த மீறல் பற்றிய தகவல்கள் வெளியான நிலையில், முதலீட்டாளர்கள் சற்று எச்சரிக்கையுடன் இருந்ததால், முதலீட்டாளர்கள் சற்று லாபம் ஈட்யதின் வெளிப்பாட்டின் காரணமாக சென்செக்ஸ... மேலும் பார்க்க

ஒரு மாதத்திற்குள் இன்னொரு ஸ்மார்ட்போனா? ஜூலை 2-ல் அறிமுகம் செய்கிறது விவோ!

விவோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனான, டி 4 லைட் 5ஜி ஜூலை 2ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகமாகவுள்ளது.கடந்த 18ஆம் தேதி விவோ டி 4 அல்ட்ரா இந்தியாவில் அறிமுகமான நிலையில், தற்போது ஒரு மாதத்திற்குள் மற்றொ... மேலும் பார்க்க

போர் நிறுத்தம் எதிரொலி: 900 புள்ளிகள் உயர்வுடன் தொடங்கிய பங்குச்சந்தை!

இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் நிறுத்தத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்ததன் விளைவாக இந்திய பங்குச்சந்தைகள் செவ்வாய்க்கிழமை காலை ஏற்றத்துடன் தொடங்கின. மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் உச்சக... மேலும் பார்க்க

பஜாஜ் சிஎன்ஜி பைக்கின் விலை ரூ.5,000 குறைப்பு

புணே: தனது ஃப்ரீடம் 125 சிஎன்ஜி பைக்கின் விலையை ரூ.5,000 குறைத்துள்ளதாக பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அறிவித்துள்ளது.அதையடுத்து, அந்த பைக்கின் ஆரம்ப விலை தற்போது ரூ.85,976-ஆக (காட்சியக விலை) குறைந்துள்ளது. டிர... மேலும் பார்க்க