செய்திகள் :

ஏர் இந்தியா விமானங்களுக்கு தற்காலிக தடை கோரி வழக்கு!

post image

பாதுகாப்பு தணிக்கைகள் முடியும்வரை ஏர் இந்தியா போயிங் விமானங்களுக்கு தற்காலிக தடை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டுப் பயணிகள் உள்பட 242 பேருடன் கடந்த ஜூன் 12 ஆம் தேதி லண்டனுக்கு புறப்பட்ட ஏா் இந்தியா விமானம், சில நிமிடங்களிலேயே அருகில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதிக் கட்டடத்தின் மீது விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் பயணித்த 241 பேர் உள்பட 270 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்து நாட்டிலேயே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் தொடர்ந்து ஏர் இந்தியா விமானங்கள் மீது புகார்கள் வந்துகொண்டே இருக்கின்றன. தொழில்நுட்பக் கோளாறு உள்ளிட்ட காரணங்களால் ஏர் இந்தியா விமானங்கள் நிறைய ரத்து செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பாதுகாப்பு தணிக்கைகள் முடிவடையும் வரை ஏர் இந்தியா போயிங் விமானங்களுக்குத் தடை கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மே 20 ஆம் தேதி ஏர் இந்தியா விமானத்தில் தில்லியில் இருந்து சிகாகோ சென்றபோது இருக்கைகளை சாய்க்க முடியவில்லை, பொழுதுபோக்கிற்காக டிவி உள்ளிட்டவை வேலை செய்யவில்லை, ஏசி வேலை செய்யவில்லை என வழக்கறிஞர் அஜய் பன்சால் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

மேலும், '1934 ஆம் ஆண்டு விமானச் சட்டம், 1937 ஆம் ஆண்டு விமான விதிகள் ஆகியவற்றை விமான நிறுவனங்கள் சரிவர கடைப்பிடிப்பதில்லை, இதனால் ஒட்டுமொத்த விமான நிறுவனங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். விதிகளை பின்பற்றாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க | உணவுக்காகக் காத்திருந்த காஸா மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்! 25 பேர் பலி

அரபு நாட்டிலிருந்து ஒரு கோடி வழங்கிய மருத்துவர்: ஏர் இந்தியா விபத்தில் உயிரிழந்த மருத்துவ மாணவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம்

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த மருத்துவ மாணவர்களின் குடும்பங்களுக்கு 5 லட்சம் திர்ஹாம்(இந்திய ரூபாயில் சுமார் 1 கோடி) நிதியுதவி வழங்கி உதவிக்கரம் நீட்டியுள்ளார் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த மர... மேலும் பார்க்க

பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியக் கொள்கை; உலகிற்கு எடுத்துரைத்த ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர்

பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் கடுமையான கொள்கையை ஆபரேஷன் சிந்தூர் உலகிற்குத் தெளிவுபடுத்தியுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரதர் மோடி கலந்... மேலும் பார்க்க

கேதாரேஷ்வர் குகைக் கோயில் தூண்கள் பற்றிய மர்மம் உண்மையா? உலக அழிவை சொல்லுமா?

மகாராஷ்டிரத்தில் அமைந்துள்ள கேதாரேஷ்வர் குகைக் கோயிலைப் பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும். சஹ்யாத்ரி மலையின் இதயப் பகுதியில் அமைந்திருக்கும் இந்தக் கோயிலைச் சுற்றிலும் ஏராளமான மர்மங்கள் நீடிப்பதாகத் த... மேலும் பார்க்க

கேமரூனுக்கு உதவிக்கரம் நீட்டும் இந்தியா! மீண்டும் 1000 மெட்ரிக் டன் அரிசி அனுப்பி வைப்பு!

மத்திய ஆப்பிரிக்க நாடான கேமரூனுக்கு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில், இந்தியா சார்பில் 1000 மெட்ரிக் டன் அரிசி மற்றும் மருத்துவப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கேமரூன் நாட்... மேலும் பார்க்க

ஆற்றில் சிக்கிய படகு வீடு! மீட்புப் பணியில் தேசிய படை!

மகாராஷ்டிர மாநிலத்தில், தொழில்நுட்பக் கோளாரால் ஆற்றின் நடுவே சிக்கிய படகு வீட்டிலுள்ள பயணிகளை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். பால்கர் மாவட்டத்தின், மஸ்வான் பகுதியிலுள்ள சூர்யா ஆற்றி... மேலும் பார்க்க

கனமழையால் நிலச்சரிவு! 2 மாநிலங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை முடக்கம்! எங்கே?

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், சிக்கிம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய இருமாநிலங்களையும் இணைக்கும் 10-வது தேசிய நெடுஞ்சாலையின் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கட... மேலும் பார்க்க