செய்திகள் :

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு; 5 ஆண்டுகளைக் கடந்தும் நிறைவடையாத விசாரணை!

post image

தூத்துக்குடி மாவட்டம்,சாத்தான்குளம் காவல் நிலையத்தில் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 22-ம் தேதி தந்தை ஜெயராஜ், மகன் பெனிக்ஸ் ஆகிய 2 பேர் போலீஸாரின் கொடூரத் தாக்குதலில் உயிரிழந்தனர். கடந்த 22-ம் தேதி இருவரின் 5-ம் ஆண்டு நினைவு அஞ்சலி அனுசரிக்கபப்ட்டது.  தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தில் அப்போதைய சாத்தான்குளம்  காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர்,  உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன் , ரகுகணேஷ் உள்பட 10 போலீஸார் கொலை வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

சாத்தான்குளம் காவல் நிலையம்

சி.பி.சி.ஐ.டி போலீஸார் இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில், சி.பி.ஐ விசாரணைக்கு வழக்கு மாற்றப்பட்டது.  இதுவரை 105 சாட்சிகளிடம் விசாரணை மேற்கொண்ட சி.பி.ஐ., துரிதமாக செயல்பட்டு 3 மாதத்துக்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இக்கொலைச் சம்பவம் நடந்து 5 ஆண்டுகள் ஆகியும் இந்த வழக்கின் விசாரணை முடிவடையாதது ஜெயராஜ், பெனிக்ஸ் குடும்பத்தினரிடம் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வழக்கின் நிலை குறித்து  ஜெயராஜ், பெனிக்ஸ் குடும்பத்தினர் தரப்பில் ஆஜராகி வரும் வழக்கறிஞர்களிடம்   பேசினோம், “இந்த வழக்கை 6 மாதத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என மதுரை கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்தது. ஒவ்வொரு முறையும் சி.பி.ஐ. தரப்பில் காலஅவகாசம் கோரப்பட்ட நிலையில், கடந்த வாரம் இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு கிளை, 3 மாதத்துக்குள் வழக்கை விசாரித்து முடிக்க உத்தரவிட்டுள்ளது.

சாத்தன்குளம்

இதுவரை  இந்த வழக்கை 4 நீதிபதிகள் விசாரித்துள்ளனர். தற்போது 5-வது நீதிபதி இந்த வழக்கை விசாரித்து வருகிறார். தற்போது இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி, ஜெயராஜ்-பெனிக்ஸ் கொலை வழக்கை விசாரித்து வரும் கோர்ட்டுக்கு பொறுப்பு நீதிபதியாகவே இருந்து வருகிறார். இது ஒரு முக்கியமான வழக்கு. இதுபோன்ற வழக்குகளில் ஒரே  நீதிபதி மூலம் விசாரணையை மேற்கொண்டால்தான் விரைவில் நீதி கிடைக்கும். ஆனாலும், இதை ஒரு உரிமையாக கோர முடியாது என்பதால் எங்களால் இந்த விவகாரத்தில் வேறு எதுவும் செய்ய முடியவில்லை.

அதேவேளையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 9 பேருக்கும் தனித்தனியாக 9 வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 9 பேரும் தனித்தனியாக சி.பி.ஐ. தரப்பு சாட்சிகள் 105 பேரிடமும் குறுக்கு விசாரணை மேற்கொள்வதால் மிகுந்த காலதாமதம் ஏற்படுகிறது.  இது, குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கான உரிமை. இதை எந்தவிதத்திலும் தடுக்க முடியாது. ஆனால் இதை விரைந்து முடிக்க வேண்டியது நீதிமன்றத்தின் கடமை. இந்த வழக்கின் விசாரணையை தாமதப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் சிலர் செயல்படுவதும் தெரிகிறது. அவ்வாறு செயல்படுவதையும் நீதிமன்றம் கண்டறிந்து தடுக்க வேண்டும்.

5-ம் ஆண்டு நினைவஞ்சலி போஸ்டர்

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமமாகும். இந்த வழக்கின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு நிரந்தர நீதிபதியை நியமித்து வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை”  என்றனர். பல்வேறு குற்ற வழக்குகளில் நீதிமன்றங்கள் விரைந்து தீர்ப்பு வழங்கி வரும் நிலையில் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கின் தீர்ப்பையும் விரைந்து வழங்க வேண்டும் என்பது அவரது குடும்பத்தினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

திருமணம் செய்த மறுத்த நபர்; 14 முறை வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண் சென்னையில் கைது!

குஜராத்திற்கு கடந்த மாதத்தில் இருந்து தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் வந்து கொண்டே இருந்தது. அதுவும் குறிப்பாக அகமதாபாத்தில் இருக்கும் நரேந்திர மோடி ஸ்டேடியத்திற்கு அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் வந்து... மேலும் பார்க்க

போலீஸுக்கு தண்ணிகாட்ட குளத்தில் குதித்த இளைஞர் - படகில் சென்று தட்டி தூக்கிய தீயணைப்பு வீரர்கள்

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை அடுத்த காட்டாத்துறை குருவிளைக்காடு பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன் (43). கட்டடம் கட்டும் கொத்தனாராக வேலை செய்துவருகிறார். இவர் காட்டாத்துறையில் விஜி என்பவர் நடத்தி வரும் இறைச... மேலும் பார்க்க

மதுரை: பட்டியலினப் பெண் அரசு ஊழியர் தற்கொலை; சாதி ரீதியாக இழிவுபடுத்தியதாகக் காதல் கணவர் மீது புகார்

காதல் திருமணம் செய்துகொண்ட பட்டியலினப் பெண் அரசு ஊழியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், அவரது கணவர் மீது சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்ப... மேலும் பார்க்க

நெல்லை: காங். தலைவர் ஜெயகுமார் மரண வழக்கு; 400 நாள்களைக் கடந்து நீடிக்கும் மர்மம்; திணறும் போலீஸார்

நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகிலுள்ள கரைசுத்துப்புதூரைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக பதவி வகித்து வந்தார். இவர், கடந்த 2024-ம் ஆண்டு மே மாதம் 2-ம் தேதி வீட்டை வி... மேலும் பார்க்க

வேலூர்: மாற்றுத்திறனாளி பெண் பாலியல் வன்கொடுமை; குற்றவாளிக்கு 30 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு காவல் உட்கோட்டத்துக்கு உட்பட்ட இலவம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கட்டட மேஸ்திரி மணிவண்ணன் (வயது 49). கடந்த 2019-ம் ஆண்டு, 20 வயது மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் வீட்டில் தனியாக... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: ”உன்னால் எங்க நிம்மதி போச்சு” - போதையில் தகராறு செய்த கணவன்; கத்தியால் குத்தி கொன்ற மனைவி

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள எருமைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி (45). இரவது மனைவி சிந்தனை செல்வி (25).இவர்களுக்கு ஆண், பெண் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கொத்தனார் வேலை செய்து வ... மேலும் பார்க்க