செய்திகள் :

போலீஸுக்கு தண்ணிகாட்ட குளத்தில் குதித்த இளைஞர் - படகில் சென்று தட்டி தூக்கிய தீயணைப்பு வீரர்கள்

post image

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை அடுத்த காட்டாத்துறை குருவிளைக்காடு பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன் (43). கட்டடம் கட்டும் கொத்தனாராக வேலை செய்துவருகிறார். இவர் காட்டாத்துறையில் விஜி என்பவர் நடத்தி வரும் இறைச்சி கடைக்கு அடிக்கடி செல்வது வழக்கம். அங்கு வரும் விஜியின் நண்பர்கள் காட்டாத்துறை புலையன்விளையை சேர்ந்த விஜின்குமார்(43), பறக்கை கக்கன்புதூரை சேர்ந்த ஸ்டாலின்(33) ஆகியோரும் ஸ்டீபனுக்கு அறிமுகம் ஆனார்கள்.

இந்த நிலையில்  இறைச்சி கடைக்கு இறைச்சி வாங்க சென்ற போது, விஜி மற்றும் அவரது நண்பர்களான விஜின்குமார், ஸ்டாலின் ஆகியோர் ஸ்டீபனை கேலியாக பேசி சிரித்துள்ளனர். அதுபற்றி ஸ்டிபன் கேட்டதால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு காரணமாக  கடந்த 22-தேதி இரவு  குருவிளைகாடு சந்திப்பு பகுதியில் நின்ற ஸ்டீபனை, விஜி மற்றும் அவரது நண்பர்கள் விஜின்குமார், ஸ்டாலின் ஆகியோர் வழி மறித்து தாக்கியதுடன், அரிவாளாலும் வெட்டினர். இதில் பலத்த காயம் அடைந்த ஸ்டீபனை அப்பகுதியினர் மீட்டு சிகிச்சைக்காக தக்கலை அரசு மாவட்ட மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டபின், மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

படகில் அழைத்துவரும் காட்சி

இதுகுறித்து ஸ்டீபன் அளித்த புகாரின் அடிப்படையில் தக்கலை போலீஸார் விசாரணை நடத்தி விஜி, விஜின்குமார், ஸ்டாலின் ஆகிய 3 பேர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அதில் விஜி, விஜின்குமார் ஆகியோரை போலீஸார் கைதுசெய்தனர். ஸ்டாலினை போலீஸார் தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் பறக்கை பகுதியில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீஸார் விஜினை கைதுசெய்ய சென்றனர்.

பறக்கை குளத்தின் கரையில் அமர்ந்திருந்த ஸ்டாலின் தனிப்படை போலீஸாரை கண்டதும் குளத்தில் குதித்தார். அந்த குளம் தாமரை மற்றும் பாசிகளால் நிரம்பி உள்ளது. இதை பயன்படுத்தி ஸ்டாலின் பாசிகளுக்கு இடையே புகுந்து நீரில் மூழ்கி பதுங்கினார். அவர் வெளியே வருவார் என தனிப்படை போலீஸார் காத்திருந்தனர். ஆனால் தண்ணீருக்குள் மூழ்கியவாறே, ஸ்டாலின் தனிப்படை போலீசாருக்கு போக்கு காட்டினார்.

குளத்தில் குதித்து பதுங்கிய ஸ்டாலினை படகில் சென்று மீட்ட தீயணைப்பு வீரர்கள்

போலீஸார் திரும்பி சென்றுவிடுவார்கள் என நினைத்தார் ஸ்டீபன். ஆனால், போலீஸார் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த தீயணைப்பு துறையினர் அவசர காலத்தில் பயன்படுத்தும் ரப்பர் படகை குளத்தில் இறக்கி, படகு மூலம் குளத்தில் பதுங்கியிருந்த ஸ்டாலினை பிடித்தனர். அவரை படகில் ஏற்றி கரைக்கு கொண்டு வந்த தீயணைப்பு வீரர்கள், தக்கலை போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

திருமணம் செய்த மறுத்த நபர்; 14 முறை வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண் சென்னையில் கைது!

குஜராத்திற்கு கடந்த மாதத்தில் இருந்து தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் வந்து கொண்டே இருந்தது. அதுவும் குறிப்பாக அகமதாபாத்தில் இருக்கும் நரேந்திர மோடி ஸ்டேடியத்திற்கு அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் வந்து... மேலும் பார்க்க

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு; 5 ஆண்டுகளைக் கடந்தும் நிறைவடையாத விசாரணை!

தூத்துக்குடி மாவட்டம்,சாத்தான்குளம் காவல் நிலையத்தில் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 22-ம் தேதி தந்தை ஜெயராஜ், மகன் பெனிக்ஸ் ஆகிய 2 பேர் போலீஸாரின் கொடூரத் தாக்குதலில் உயிரிழந்தனர். கடந்த 22-ம் தேதி இ... மேலும் பார்க்க

மதுரை: பட்டியலினப் பெண் அரசு ஊழியர் தற்கொலை; சாதி ரீதியாக இழிவுபடுத்தியதாகக் காதல் கணவர் மீது புகார்

காதல் திருமணம் செய்துகொண்ட பட்டியலினப் பெண் அரசு ஊழியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், அவரது கணவர் மீது சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்ப... மேலும் பார்க்க

நெல்லை: காங். தலைவர் ஜெயகுமார் மரண வழக்கு; 400 நாள்களைக் கடந்து நீடிக்கும் மர்மம்; திணறும் போலீஸார்

நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகிலுள்ள கரைசுத்துப்புதூரைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக பதவி வகித்து வந்தார். இவர், கடந்த 2024-ம் ஆண்டு மே மாதம் 2-ம் தேதி வீட்டை வி... மேலும் பார்க்க

வேலூர்: மாற்றுத்திறனாளி பெண் பாலியல் வன்கொடுமை; குற்றவாளிக்கு 30 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு காவல் உட்கோட்டத்துக்கு உட்பட்ட இலவம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கட்டட மேஸ்திரி மணிவண்ணன் (வயது 49). கடந்த 2019-ம் ஆண்டு, 20 வயது மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் வீட்டில் தனியாக... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: ”உன்னால் எங்க நிம்மதி போச்சு” - போதையில் தகராறு செய்த கணவன்; கத்தியால் குத்தி கொன்ற மனைவி

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள எருமைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி (45). இரவது மனைவி சிந்தனை செல்வி (25).இவர்களுக்கு ஆண், பெண் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கொத்தனார் வேலை செய்து வ... மேலும் பார்க்க