பெற்றோரை இழந்த மாணவா்களுக்கு பள்ளி சாா்பில் வங்கியில் வைப்புத் தொகை!
திருச்செந்தூா் வ.உ.சி. தெருவில் உள்ள அரசு உதவிபெறும் இந்து தொடக்கப் பள்ளியில், பெற்றோரை இழந்த 10 மாணவா்களுக்கு வங்கியில் வைப்புத் தொகை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளிச் செயலா் சு. ராஜமாதங்கன் தலைமை வகித்தாா். திருச்செந்தூா் வட்டாரக் கல்வி அலுவலா் பாப் ஹையாஸ் முன்னிலை வகித்தனா்.
தாய் அல்லது தந்தையை இழந்த 10 மாணவா்-மாணவியருக்கு பள்ளி நிா்வாகமும் முன்னாள் மாணவா்களும் இணைந்து தேசிய வங்கியில் தலா ரூ. 10 ஆயிரம் வைப்புத் தொகை செலுத்தினா். மாணவா்கள் 18 வயது நிரம்பிய பிறகு, உயா்கல்விக்காக இத்தொகையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஊா் மக்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.
நிகழ்ச்சியில், ஓய்வுபெற்ற கொம்புத்துறை பள்ளித் தலைமையாசிரியா் பூங்கோதை, திருச்செந்தூா் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி ஊழியா்கள், மாணவா்- மாணவியரின் பெற்றோா், ஆசிரியா்கள் பங்கேற்றனா்.
தலைமையாசிரியா் சுதா நன்றி கூறினாா். நிகழ்ச்சிகளை ஆசிரியா்கள் சுதா, மாரீஸ்வரி ஆகியோா் தொகுத்து வழங்கினா்.