முருக பக்தா்கள் மாநாடு அல்ல; அரசியல் மாநாடு: அமைச்சா் பி.கே.சேகா்பாபு
Relationship: தாம்பத்தியத்தின் 5 நிலைகளும் இரண்டரை வருடங்களும்..!
'ஒரு தம்பதியர் ஒருவர் மேல் ஒருவர் உண்மையான அன்புகூருவதற்கு இரண்டரை ஆண்டுகள் பிடிக்கும் என்பது சில மூத்த தம்பதியரின் அனுபவ கருத்து. அது என்ன இரண்டரை ஆண்டுகள்..?

அது காதல் திருமணமோ அல்லது பெற்றோர் பார்த்து வைத்த திருமணமோ, திருமணமாகி ஒரு கூட்டுக்குள் மிக மிக அருகில் இருக்கும் போது, தன் துணையின் சிறு சிறு உடல் அசைவுகள்கூட அழகாகத் தெரிவதால், அந்த ஈர்ப்பிலேயே முதல் வருடம் ஓடி விடுமாம். அதன் பிறகு பெரும்பாலான மனைவியர் கருவுற்று விடுவார்கள். அதனால், அடுத்த ஒரு வருடம் முழுக்க தன் குழந்தையை வயிற்றில் சுமந்து அல்லாடுகிறாளே என்கிற பரிதவிப்பில் கணவனும், தன்னை உள்ளங்கையில் வைத்துத் தாங்குகிறானே என்கிற பெருமையில் மனைவியும் இருப்பார்கள். இந்த வேளையில் காமம் கொஞ்சம் எட்டி நிற்கும். அந்த ஈர்ப்பிலேயே முதல் வருடம் ஓடி விடுமாம்..!

அடுத்து பிள்ளை வரும். இரவெல்லாம் கண் விழித்து தொட்டிலை மாறி மாறி ஆட்டுகையில் தூக்கம் பிடிக்கிற அளவுக்குக் காதல் பிடிக்காது. பிறந்த குழந்தைக்கு புது உலகம் பிடிபட்டு அது இரவுகளில் உறங்க ஆரம்பித்தப் பிறகுதான், கணவனுக்கும் மனைவிக்கும் பரஸ்பரம் சிரிப்புகளை பரிமாறிக் கொள்ளவே நேரம் கிடைக்கும். இந்த இடைவெளியில் திருமணமான புதிதில் இருந்த உடல் ஈர்ப்புகள் எல்லாம் சோர்ந்துபோய் ஓடி ஒளிந்திருக்கும்.
அதற்குப்பதிலாக, மனதுக்குள் வழிய வழிய அன்பு குடி புகுந்திருக்கும். கணக்குப் போட்டு பார்த்தால், இந்த அன்பு ஒரு தம்பதியருக்குள் குடி புகுவதற்கு இரண்டரை வருடங்கள் தேவைப்பட்டிருக்கும். இதன் பிறகு நீங்கள் ஒன்றுமே செய்ய தேவையில்லை. உங்கள் தாம்பத்தியத்தை அந்த அன்பே துடுப்புப் போட்டு செலுத்த ஆரம்பித்து விடுமாம்.
வாத்ஸ்யாயனர்கூட, காதலில் காமம், அக்கறை, நட்பு, கருணை என்று நான்கு நிலைகள் பற்றி சொல்லியிருப்பார். முதலில் காமம்தான் ஆட்கொள்ளும். பெற்றோரான பிறகு பரஸ்பரம் அக்கறை, தாம்பத்தியத்தில் நீயும் நானும் சமம் என்கிற நட்பு, கடைசியாகக் கருணை. இந்தக் கருணை வந்துவிட்டால், ஒருவருடைய தவற்றை இன்னொருவர் மன்னிக்கிற அளவுக்கு பக்குவப்பட்டு விடுவீர்கள். அப்புறம், வீட்டுக்குள்ளிருந்தும் சரி, வீட்டுக்கு வெளியில் இருந்தும் சரி, எந்த மூன்றாம் நபர் தலையீடும் ஒரு திருமண வாழ்க்கையை அசைக்க முடியாது' என்பது வாழ்ந்தவர்களின் கருத்து.
படிப்பு மற்றும் வேலை காரணமாக திருமணத்துக்கு பிறகு குழந்தை பிறப்பை தள்ளிப் போட்டாலும்கூட, ஒரு தாம்பத்தியத்தில் காதல், காமம், அக்கறை, நட்பு, கருணை ஆகியவை நிறைந்து இருந்துவிட்டால் எப்பேர்ப்பட்ட சூழலும் அந்த உறவை அசைக்க முடியாத அளவுக்கு இருக்கும். இந்த நிலையை நாமும்தான் முயற்சி செய்துபார்ப்போமே..!

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR