செய்திகள் :

கீழடி: "ஆதாரம் இல்லாத அகழாய்வு அறிக்கையை மத்திய அரசு ஏற்காது" - ஆர்.பி.உதயகுமார்

post image

மதுரையில் நடந்த தனியார் நலத்திட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், பின்பு செய்தியாளர்களிடம் பேசும்போது, "திமுக ஆட்சியின் சக்கரம் சுழல்கிறதோ இல்லையோ, அரசு பேருந்தின் சக்கரங்கள் துண்டாகி தனியே சுழன்று ஓடிக்கொண்டிருக்கின்றன.

மதுரையிலிருந்து சென்ற அரசுப் பேருந்தின் இரண்டு சக்கரங்கள் சாலையில் தனியாக ஓடியதால் பயணிகள் காயமடைந்துள்ளனர். இது போன்ற செய்திகளை இதுவரை நாம் பார்த்ததில்லை, இந்த ஆட்சியின் நிலையை அறிய இது ஒன்றே போதும்.

கீழடி
கீழடி

அதிமுக ஆட்சியிலிருந்துதான் தமிழகத்தில் 39 இடங்களில் அகழாய்வு நடைபெற்று வருகிறது, கீழடி அகழாய்வு எனும் பிள்ளையைப் பெற்றது அதிமுக, அதற்கு திமுக பெயர் சூட்டுகிறது.

கீழடி அகழாய்வுக்கு முக்கியத்துவம் தந்தது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு. திமுக ஆட்சியில் நடைபெறும் பிரச்னைகளை மடைமாற்றுவதற்காக கீழடி அகழாய்வு குறித்து மத்திய அரசு ஆதாரம் கேட்டதைப் பேசி வருகிறது.

கீழடி அகழாய்வைப் பொதுவாகப் பேசி விட முடியாது, அதற்கான ஆதாரங்களைக் கொடுக்க வேண்டும், ஆதாரம் இல்லாமல் கொடுக்கப்படும் அகழாய்வறிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளாது.

மத்திய அரசு விளக்கம் கேட்பது நடைமுறையில் உள்ளதே. அதில் திமுக விளம்பரம் தேடுகிறது, அதிமுக ஆட்சிக் காலத்தில் எங்களிடமும் விளக்கம் கேட்டிருக்கிறார்கள், அப்போதைய அரசுச் செயலாளர் உதயசந்திரன் விளக்கம் கொடுத்திருக்கிறார், மத்திய அரசு அகழாய்வில் விளக்கம் கேட்பதற்கு திமுக அரசு ஏன் குதிக்கிறது?

ஆர்.பி. உதயகுமார்
ஆர்.பி. உதயகுமார்

ஆணவத்தின் உச்சத்தில் உள்ள அமைச்சர் டிஆர்பி ராஜாவைச் சட்ட ரீதியாகச் சந்திப்போம், அதிமுகவை ஒரு முறை விமர்சித்தால், நாங்கள் நூறு முறை விமர்சிப்போம்.

எடப்பாடி பழனிசாமியை மீண்டும் இழிவுபடுத்தினால் அமைச்சர் டிஆர்பி ராஜா கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும். அரசியல் களத்தில் எடப்பாடி பழனிசாமியைக் குறைத்து மதிப்பிட்டவர்கள் தோற்றுப் போயிருக்கிறார்கள்" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

முருக பக்தர்கள் மாநாடு: 10,000 வாகனங்களில் 2.5 லட்சம் பேர்? மேடையில் முருகன் சிலைகள் - நேரடி விசிட்

மதுரை பாண்டி கோவில் அருகிலுள்ள அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முருக பக்தர்கள் மாநாடு இன்று நடைபெறவிருக்கிறது. இம்மாநாட்டுக்காக அறுபடை முருகன் கோவில்களைப் போன்ற செட் ஒன்று... மேலும் பார்க்க

"இந்தியாவில் அமெரிக்கப் பெண்கள் தனியாகப் பயணம் செய்ய வேண்டாம்" - அமெரிக்கா எச்சரிக்கை; பின்னணி என்ன?

இந்தியாவில் உள்ள அமெரிக்கக் குடிமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அமெரிக்க வெளியுறவுத்துறை எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது.ஜூன் 16ம் தேதி வெளியான இந்த ஆலோசனை அறிக்கையில், இந்தியாவின் சில பகுதிகளில் குற்றங... மேலும் பார்க்க

முருக பக்தர்கள் மாநாடு: ``முருகனும் சிவனும் இந்துவா?" - சீமான் கேள்வி

இந்து முன்னணி அமைப்பின் சார்பாக இன்று மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடத்தவிருக்கிறது.உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆந்திராவின் துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் வருவதாகக் கூறப்படுகிறது.ம... மேலும் பார்க்க

US attacks on Iran: பாராட்டும் இஸ்ரேல்; கண்டிக்கும் ஜனநாயக அமைப்புகள் என்ன சொல்கின்றன?

ஈரானின் அணு ஆயுதத் தளங்களில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், அமைப்புகளும் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.அதே நேரம் இஸ்ரேல... மேலும் பார்க்க

"முருக பக்தர்கள் மாநாடு முடிந்த பின் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி" - எல்.முருகன்

முருக பக்தர்கள் மாநாடு தமிழக அரசியலிலும் சரி, ஆன்மீகத்திலும் சரி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.மதுரையில் நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாட்ட... மேலும் பார்க்க

TRUMP -ன் அழைப்பை நிராகரித்த MODI - ஏன்? | முருகன் மாநாடு BJP | Yoga Day | Imperfect Show 21.6.2025

* ஜெகநாத்தின் பூமிக்கு வருவதற்காக ட்ரம்ப் ன் அழைப்பை நிராகரித்தேன்" -பிரதமர் மோடி* சர்வதேச யோகா தினம் - பொதுமக்களுடன் இணைந்து யோகாசனங்கள் செய்த பிரதமர் மோடி* தொடர்ச்சியாக 50 தண்டால்... அசத்திய ஆளுநர்.... மேலும் பார்க்க