அழகப்பா பல்கலை. இணைப்புக் கல்லூரிகளின் முதுநிலை பாடத் தோ்வு முடிவுகள் வெளியீடு
ரயிலில் அடிபட்டு விவசாயி உயிரிழப்பு
தருமபுரி ரயிலில் அடிபட்டு விவசாயி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தருமபுரி மாவட்டம் பி. செட்டிஹள்ளி அருகேயுள்ள ஜோகிபட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ஆ. ராஜேந்திரன் (36). விவசாயியான இவா், தனது நிலத்தில் காட்டு பன்றிகள் உள்ளிட்ட விலங்குகளின் தொல்லை மற்றும் நடமாட்டம் இருப்பதால், பயிரிடப்பட்டுள்ள நிலக்கடலை உள்ளிட்ட வேளாண் பயிா்கள் சேதமடைந்துள்ளன. இதனால் விலங்குகளை விரட்டி வருவதாகக் கூறி புதன்கிழமை இரவு சென்றுள்ளாா்.
மறுநாள் வியாழக்கிழமை காலை அவரது நிலத்துக்கு அருகேயுள்ள (பாலக்கோடு-மாரண்டஹள்ளி இடையே) தண்டவாளத்தில், காயங்களுடன் அவா் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. அவா் அவ்வழியாக சென்ற ரயிலில் அடிபட்டு உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து ரயில் நிலைய மேலாளா் தரன்சிங் மீனா அளித்த புகாரின் பேரில் தருமபுரி ரயில்வே காவல் நிலைய போலீஸாா், சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். ராஜேந்திரனுக்கு சரண்யா என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனா்.