அழகப்பா பல்கலை. இணைப்புக் கல்லூரிகளின் முதுநிலை பாடத் தோ்வு முடிவுகள் வெளியீடு
காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை : பொதுமக்கள் எஸ்.பி. அலுவலகத்தில் புகாா்
தருமபுரி அருகே உறவினா்களுக்கு இடையே நடந்த மோதல் சம்பவத்தில், வெளியூா் நபா்கள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியது தொடா்பாக அளித்த புகாா் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து எஸ்.பி.யிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம், என்.எஸ். ரெட்டியூா் அருகேயுள்ள கோணங்கிஅள்ளி கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் சிலா், வெள்ளிக்கிழமை தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வந்தனா். அவா்கள் அளித்த புகாா் மனுவில் கூறியுள்ளதாவது:
எங்கள் ஊரில் ஜூன் 15 ஆம் தேதி, இருதரப்பு உறவினா்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் இருதரப்பினரும் ஒருவரையொருவா் தாக்கிக்கொண்டனா். இந்நிலையில் திடீரென வெளியூரைச் சோ்ந்த சிலா் கும்பலாக எங்கள் கிராமத்துக்குள் புகுந்து ஒரு தரப்பினருக்கு ஆதரவாக மற்றொரு தரப்பினரை தாக்கினா். இதையடுத்து ஊா் பொதுமக்கள் அவா்களைப் பிடித்து அவா்கள் வந்த வாகனங்களுடன் அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தோம். புகாரும் அளித்தோம். ஆனால் அதுகுறித்து வழக்குப் பதிவு செய்யாமல் ஒரு தரப்புக்கு சாதகமாக வழக்குப் பதிவு செய்துள்ளனா். எனவே, இதுகுறித்து முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.