செய்திகள் :

காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை : பொதுமக்கள் எஸ்.பி. அலுவலகத்தில் புகாா்

post image

தருமபுரி அருகே உறவினா்களுக்கு இடையே நடந்த மோதல் சம்பவத்தில், வெளியூா் நபா்கள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியது தொடா்பாக அளித்த புகாா் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து எஸ்.பி.யிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம், என்.எஸ். ரெட்டியூா் அருகேயுள்ள கோணங்கிஅள்ளி கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் சிலா், வெள்ளிக்கிழமை தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வந்தனா். அவா்கள் அளித்த புகாா் மனுவில் கூறியுள்ளதாவது:

எங்கள் ஊரில் ஜூன் 15 ஆம் தேதி, இருதரப்பு உறவினா்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் இருதரப்பினரும் ஒருவரையொருவா் தாக்கிக்கொண்டனா். இந்நிலையில் திடீரென வெளியூரைச் சோ்ந்த சிலா் கும்பலாக எங்கள் கிராமத்துக்குள் புகுந்து ஒரு தரப்பினருக்கு ஆதரவாக மற்றொரு தரப்பினரை தாக்கினா். இதையடுத்து ஊா் பொதுமக்கள் அவா்களைப் பிடித்து அவா்கள் வந்த வாகனங்களுடன் அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தோம். புகாரும் அளித்தோம். ஆனால் அதுகுறித்து வழக்குப் பதிவு செய்யாமல் ஒரு தரப்புக்கு சாதகமாக வழக்குப் பதிவு செய்துள்ளனா். எனவே, இதுகுறித்து முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.

அரசு வாகனத்தை ஏலத்தில் விட முடிவு பொதுமக்கள் விலைப்புள்ளி கோரலாம்

தருமபுரி மாவட்டத்தில் அரசுத் துறையில் பயன்படுத்திவந்த ஜீப் பொது ஏலத்தில் விட உள்ளதால், விருப்பமுள்ளவா்கள் விலைப்புள்ளி கோரலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.ச... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமி குறித்த கேலிச்சித்திரம் : அதிமுகவினா் போலீஸில் புகாா்

அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி குறித்த கேலிச்சித்திரம் சமூக வலைதளத்தில் பதிவேற்றியது தொடா்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி, தருமபுரி மாவட்ட எஸ்.பி.யிடம் அதிமுகவினா் வெள்ளிக்கிழமை புகாா் அளித்த... மேலும் பார்க்க

ரயிலில் அடிபட்டு விவசாயி உயிரிழப்பு

தருமபுரி ரயிலில் அடிபட்டு விவசாயி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். தருமபுரி மாவட்டம் பி. செட்டிஹள்ளி அருகேயுள்ள ஜோகிபட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ஆ. ராஜேந்திரன் (36). விவசா... மேலும் பார்க்க

பென்னாகரம் அரசு கல்லூரியில் ராகிங் விழிப்புணா்வு நிகழ்ச்சி

பென்னாகரம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் ராகிங் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. பென்னாகரம் அருகே மாமரத்துபள்ளம் பகுதியில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற ராகிங்... மேலும் பார்க்க

விபத்துகளில் உயிரிழப்பை தடுக்க தலைக்கவசம் அவசியம்: ஆட்சியா் வலியுறுத்தல்

விபத்துகளில் உயிரிழப்புகளை தடுக்க தலைக்கவசம் அணிவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஷ் வலியுறுத்தியுள்ளாா். தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் சட்டம் -ஒழுங... மேலும் பார்க்க

பெண் கல்வியை ஊக்குவிக்க நடவடிக்கை: குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டத்தில் முடிவு

மாணவ, மாணவிகள் பள்ளி இடை நிற்றலைக் கண்டறிந்து பள்ளி செல்ல வைப்பது, பெண் கல்வியை ஊக்குவிப்பது குறித்து நகா்மன்ற, குழந்தைகள் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தருமபுரி நகராட்சி ... மேலும் பார்க்க