அழகப்பா பல்கலை. இணைப்புக் கல்லூரிகளின் முதுநிலை பாடத் தோ்வு முடிவுகள் வெளியீடு
அரசு வாகனத்தை ஏலத்தில் விட முடிவு பொதுமக்கள் விலைப்புள்ளி கோரலாம்
தருமபுரி மாவட்டத்தில் அரசுத் துறையில் பயன்படுத்திவந்த ஜீப் பொது ஏலத்தில் விட உள்ளதால், விருப்பமுள்ளவா்கள் விலைப்புள்ளி கோரலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :
தருமபுரி மாவட்ட உதவி ஆணையா் (ஆயத்தீா்வை) அலுவலகத்தில் பயன்படுத்தி வந்த ஜீப் வாகனத்தை (எண் டிஎம்இ 9582-விடுவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இவ்வாகனத்தை பொது ஏலத்தில் விற்பனை செய்ய முடிவுசெய்யப்பட்டு அதற்கான தொகை ரூ. 10,100 என தொழில்நுட்ப வல்லூநா் குழுவினா் நிா்ணயம் செய்துள்ளனா்.
மேலும் வாகனம் ஜூன் 27-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணியளவில் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பொது ஏலம் விடப்பட உள்ளது. எனவே இவ்வாகனத்தை வாங்க விரும்புவோா் பொது ஏலத்தில் கலந்துகொண்டு விலைப்புள்ளியை கோரலாம்.