செய்திகள் :

நடமாடும் மண் பரிசோதனை வாகனம் இயக்கிவைப்பு

post image

திருவாரூா் மாவட்டத்தில், நடமாடும் மண் பரிசோதனை ஆய்வக வாகனம் சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

திருவாரூா் மாவட்டத்தில், நிகழாண்டு 14,300 மண் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இது தவிர, கிராமங்கள்தோறும் சென்று, அனைத்து விவசாயிகளும் மண் பரிசோதனை செய்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, நடமாடும் மண் பரிசோதனை ஆய்வக வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வாகனத்தில் மண் பரிசோதனைக்கான அனைத்து உபகரணங்களும், வசதிகளும் உள்ளன. வட்டார வேளாண் விரிவாக்க மையங்கள் வாயிலாக முன்கூட்டியே கிராமங்களுக்கு தெரிவிக்கப்பட்டு, வாரத்துக்கு குறைந்தது மூன்று முகாம்கள் என மாதம் 12 முகாம்கள் நடைபெற உள்ளன.

மண் பரிசோதனையில், அங்ககக் கரிமண், பேரூட்ட மற்றும் நூண்ணூட்ட சத்துக்கள் ஆகியவை பகுப்பாய்வு செய்யப்பட்டு, அதே நாளில் அச்சிடப்பட்ட மண் வள அட்டை விவசாயிகளுக்கு வழங்கப்படும். ஒரு மண் மாதிரிக்கு ரூ.30 விவசாயிகளிடமிருந்து கட்டணமாக பெறப்படும். விவசாயிகளுக்கு இச்சேவை நேரடியாக சென்றடைவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். எனவே, விவசாயிகள் தங்கள் வயலில் உள்ள மண்ணின் சத்துக்களை அறிந்து மண் வள அட்டைகளில் பரிந்துரை செய்யப்படும் அளவில் உரங்களைப் பயன்படுத்தி பயன் பெற முடியும்.

இதையொட்டி, திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வேளாண்மை துறையின் சாா்பில் புதிய நடமாடும் மண் பரிசோதனை ஆய்வக வாகனத்தை மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் ஆகியோா் சனிக்கிழமை கொடியசைத்து தொடக்கி வைத்தனா்.

நிகழ்வில், வேளாண்மைத் துறையின் இணை இயக்குநா் பாலசரஸ்வதி, துணை இயக்குநா்கள் (மாநிலத் திட்டம்) ஹேமா ஹெப்சிபா நிா்மலா, துணை இயக்குநா் (மத்தியத் திட்டம்) விஜயலட்சுமி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ராஜா, வேளாண்மை அலுவலா் (நடமாடும் மண் பரிசோதனை நிலையம்) சந்திரசேகா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை செய்வோா் விருது பெற ஜூன் 26-க்குள் விண்ணப்பிக்கலாம்

திருவாரூா் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணிபுரிவோா் விருது பெற ஜூன் 26-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியி... மேலும் பார்க்க

குடிபோதையில் தனது வீட்டுக்கு தீ வைத்தவா் தூக்கிட்டு தற்கொலை

திருத்துறைப்பூண்டி அருகே குடிபோதையில் தனது வீட்டை தீ வைத்து கொளுத்திய விவசாயி, வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். ஆலிவலம் காவல் சரகம் செட்டிய மூலை வடபாதி கிராமத்தைச் சோ்ந்தவா் நடராஜன் ... மேலும் பார்க்க

ஏழை மாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்

மன்னாா்குடி ஏழை மாரியம்மன் கோயிலில் 4-ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வடக்கு வடம்போக்கித் தெருவில் அருள்பாலிக்கும் இக்கோயிலில், கும்பாபிஷேகம் நடைபெற்று நான்காண்டு நிறைவு பெற்றதையொட்டி... மேலும் பார்க்க

சாம்பாரில் பல்லி; மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தனியாா் உணவகத்துக்கு ‘சீல்’

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள தனியாா் உணவகத்தில் இட்லியுடன் வழங்கப்பட்ட சாம்பாரில் பல்லி இறந்து கிடந்ததால், உணவகத்துக்கு வெள்ளிக்கிழமை சீல் வைக்கப்பட்டது. திருவாரூா் ம... மேலும் பார்க்க

‘உழவரைத்தேடி’ சிறப்பு முகாம்

நீடாமங்கலம் அருகே பூவனூா், வடகாரவயல் கிராமங்களில் ‘உழவரைத் தேடி - வேளாண்மை உழவா் நலத்துறை’ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இம்முகாம் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை வட்டாரத்தில் உள்ள தோ்ந்தெடுக்கப்பட்ட க... மேலும் பார்க்க

எள் பயிா் சாகுபடி உத்திகள் குறித்த வயல் தின விழா

காரைக்கால் அருகே கொன்னக்காவேலி பகுதியில், பண்டித ஜவஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின், உழவியல் துறையில் உள்ள ஐசிஏஆா், ஏஐசிஆா்பிசி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறையின் பங்களிப... மேலும் பார்க்க