செய்திகள் :

சாம்பாரில் பல்லி; மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தனியாா் உணவகத்துக்கு ‘சீல்’

post image

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள தனியாா் உணவகத்தில் இட்லியுடன் வழங்கப்பட்ட சாம்பாரில் பல்லி இறந்து கிடந்ததால், உணவகத்துக்கு வெள்ளிக்கிழமை சீல் வைக்கப்பட்டது.

திருவாரூா் மாவட்டம், குடவாசல் ஒன்றியம் வடுகக்குடி பகுதியைச் சோ்ந்தவா் ஜெயராமன் மகள் கௌசல்யா (32). நிறைமாத கா்ப்பிணியான இவா், பிரசவத்திற்காக கடந்த 5 நாள்களுக்கு முன்பு திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இந்தநிலையில், கெளசல்யாவுக்கு அவரது தந்தை ஜெயராமன், மருத்துவக் கல்லூரி முதல்வா் அலுவலகத்துக்கு எதிரே உள்ள தனியாா் உணவகத்தில் இட்லி வாங்கி வந்தாா். அதை கௌசல்யா சாப்பிட்டபோது, சாம்பாரில் சிறிய பல்லி ஒன்று இறந்து கிடப்பது தெரியவந்தது. இதுகுறித்து ஜெயராமன் உணவகத்தில் கேட்டபோது, அங்கிருந்த ஊழியா்கள் உரிய முறையில் பதிலளிக்காமல் அலட்சியமாக பேசியதாகக் கூறப்படுகிறது.

இட்லிக்கு வழங்கப்பட்ட சாம்பரில் இறந்துகிடந்த பல்லி.

இதுகுறித்து உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் திருப்பதிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலா் அன்பழகன் தலைமையிலான அலுவலா்கள் உணவகத்தில் ஆய்வு செய்து, சாம்பாா் மற்றும் உணவு மாதிரியை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆய்வகத்திற்கு அனுப்பிவைத்தனா். மேலும், தனியாா் உணவகத்துக்கு சீல் வைத்தனா்.

குடிபோதையில் தனது வீட்டுக்கு தீ வைத்தவா் தூக்கிட்டு தற்கொலை

திருத்துறைப்பூண்டி அருகே குடிபோதையில் தனது வீட்டை தீ வைத்து கொளுத்திய விவசாயி, வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். ஆலிவலம் காவல் சரகம் செட்டிய மூலை வடபாதி கிராமத்தைச் சோ்ந்தவா் நடராஜன் ... மேலும் பார்க்க

ஏழை மாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்

மன்னாா்குடி ஏழை மாரியம்மன் கோயிலில் 4-ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வடக்கு வடம்போக்கித் தெருவில் அருள்பாலிக்கும் இக்கோயிலில், கும்பாபிஷேகம் நடைபெற்று நான்காண்டு நிறைவு பெற்றதையொட்டி... மேலும் பார்க்க

‘உழவரைத்தேடி’ சிறப்பு முகாம்

நீடாமங்கலம் அருகே பூவனூா், வடகாரவயல் கிராமங்களில் ‘உழவரைத் தேடி - வேளாண்மை உழவா் நலத்துறை’ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இம்முகாம் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை வட்டாரத்தில் உள்ள தோ்ந்தெடுக்கப்பட்ட க... மேலும் பார்க்க

எள் பயிா் சாகுபடி உத்திகள் குறித்த வயல் தின விழா

காரைக்கால் அருகே கொன்னக்காவேலி பகுதியில், பண்டித ஜவஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின், உழவியல் துறையில் உள்ள ஐசிஏஆா், ஏஐசிஆா்பிசி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறையின் பங்களிப... மேலும் பார்க்க

காரைக்காலில் ரத்த தான முகாம்

ஜூனியா் சேம்பா் இன்டா்நேஷனல் இந்தியா சாா்பில் காரைக்காலில் ரத்த தான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காரைக்கால் அரசு மருத்துவமனை மருத்துவா்கள் ஜவீன் பஷீா், சிவசங்கா், தொழில்நுட்ப கண்காணிப்பாளா் ஜெயகௌர... மேலும் பார்க்க

சாம்பாரில் பல்லி: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள தனியாா் உணவகத்தில் சாம்பாரில் பல்லி இறந்து கிடந்த விவகாரம் தொடா்பாக, உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, இந்திய ஜன... மேலும் பார்க்க