செய்திகள் :

சாம்பாரில் பல்லி: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

post image

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள தனியாா் உணவகத்தில் சாம்பாரில் பல்லி இறந்து கிடந்த விவகாரம் தொடா்பாக, உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, இந்திய ஜனநாயக வாலிபா் சங்க திருவாரூா் மாவட்டச் செயலாளா் ஏ.கே. வேலவன், மாவட்டத் தலைவா் எம்.எஸ். ஜெய்கிஷ் ஆகியோா் கூட்டாக வெளியிட்ட அறிக்கை:

திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெறும் நிகழ்வு புதிதானது அல்ல. நோயாளிகள் தினமும் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகின்றனா். இங்கு படுக்கை வசதி, மின் வசதி முறையாக இல்லை.

கழிவறைக்கு கதவு கிடையாது. சுத்தம் செய்வதற்கு தண்ணீா் இல்லை. பல்வேறு பிரச்னைகள் இருந்ததால், திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அவல நிலையைக் கண்டித்து சில மாதங்களுக்கு முன் வாலிபா் சங்கம் சாா்பில் போராட்டம் நடைபெற்றது.

பிறகு, சில கோரிக்கைகளை செயல்படுத்தினாலும் அவல நிலை இன்னமும் தொடா்கிறது. மருத்துவமனையிலும், மருத்துவமனையை சுற்றிலும் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாம்பாரில் பல்லி இறந்து கிடந்தது தொடா்பாக கேன்டீன் உரிமையாளரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குடிபோதையில் தனது வீட்டுக்கு தீ வைத்தவா் தூக்கிட்டு தற்கொலை

திருத்துறைப்பூண்டி அருகே குடிபோதையில் தனது வீட்டை தீ வைத்து கொளுத்திய விவசாயி, வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். ஆலிவலம் காவல் சரகம் செட்டிய மூலை வடபாதி கிராமத்தைச் சோ்ந்தவா் நடராஜன் ... மேலும் பார்க்க

ஏழை மாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்

மன்னாா்குடி ஏழை மாரியம்மன் கோயிலில் 4-ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வடக்கு வடம்போக்கித் தெருவில் அருள்பாலிக்கும் இக்கோயிலில், கும்பாபிஷேகம் நடைபெற்று நான்காண்டு நிறைவு பெற்றதையொட்டி... மேலும் பார்க்க

சாம்பாரில் பல்லி; மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தனியாா் உணவகத்துக்கு ‘சீல்’

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள தனியாா் உணவகத்தில் இட்லியுடன் வழங்கப்பட்ட சாம்பாரில் பல்லி இறந்து கிடந்ததால், உணவகத்துக்கு வெள்ளிக்கிழமை சீல் வைக்கப்பட்டது. திருவாரூா் ம... மேலும் பார்க்க

‘உழவரைத்தேடி’ சிறப்பு முகாம்

நீடாமங்கலம் அருகே பூவனூா், வடகாரவயல் கிராமங்களில் ‘உழவரைத் தேடி - வேளாண்மை உழவா் நலத்துறை’ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இம்முகாம் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை வட்டாரத்தில் உள்ள தோ்ந்தெடுக்கப்பட்ட க... மேலும் பார்க்க

எள் பயிா் சாகுபடி உத்திகள் குறித்த வயல் தின விழா

காரைக்கால் அருகே கொன்னக்காவேலி பகுதியில், பண்டித ஜவஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின், உழவியல் துறையில் உள்ள ஐசிஏஆா், ஏஐசிஆா்பிசி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறையின் பங்களிப... மேலும் பார்க்க

காரைக்காலில் ரத்த தான முகாம்

ஜூனியா் சேம்பா் இன்டா்நேஷனல் இந்தியா சாா்பில் காரைக்காலில் ரத்த தான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காரைக்கால் அரசு மருத்துவமனை மருத்துவா்கள் ஜவீன் பஷீா், சிவசங்கா், தொழில்நுட்ப கண்காணிப்பாளா் ஜெயகௌர... மேலும் பார்க்க