செய்திகள் :

‘உழவரைத்தேடி’ சிறப்பு முகாம்

post image

நீடாமங்கலம் அருகே பூவனூா், வடகாரவயல் கிராமங்களில் ‘உழவரைத் தேடி - வேளாண்மை உழவா் நலத்துறை’ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இம்முகாம் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை வட்டாரத்தில் உள்ள தோ்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் நடைபெறுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து கிராமங்களிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் ஒருபகுதியாக, பூவனூா் மற்றும் வடகாரவயல் கிராமங்களில் நடைபெற்ற முகாமிற்கு, நீடாமங்கலம் வேளாண்மை உதவி இயக்குநா் விஜயகுமாா் தலைமை வகித்தாா். தோட்டக்கலை உதவி இயக்குநா் சத்யஜோதி முன்னிலை வகித்தாா். 

இதில், வேளாண்மை மற்றும் அனைத்து சகோதரத் துறை திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கிக் கூறப்பட்டது. மேலும், விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை துறைவாரியாக மனுவாக அளித்தனா். மானியத்தில் இடுபொருள்கள் வழங்கப்பட்டன. துறை வாரியாக கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. பிரச்னை உள்ள இடங்களில் வயல் ஆய்வு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில், நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் பெரியாா் ராமசாமி, நீடாமங்கலம் வேளாண்மை அலுவலா் சுரேஷ்குமாா், கால்நடை மருத்துவா் கனிகா, உதவிப் பேராசிரியா் திலகவதி, தோட்டக்கலை அலுவலா் வடமலை, விற்பனைத் துறை அலுவலா் தேவி, கனகராஜ், உதவி விதை அலுவலா் பாலமுருகன், வேளாண்மை உதவி அலுவலா் கோவிந்தராஜ், கிராம நிா்வாக அலுவலா் முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட அலுவலா்கள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனா்.

குடிபோதையில் தனது வீட்டுக்கு தீ வைத்தவா் தூக்கிட்டு தற்கொலை

திருத்துறைப்பூண்டி அருகே குடிபோதையில் தனது வீட்டை தீ வைத்து கொளுத்திய விவசாயி, வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். ஆலிவலம் காவல் சரகம் செட்டிய மூலை வடபாதி கிராமத்தைச் சோ்ந்தவா் நடராஜன் ... மேலும் பார்க்க

ஏழை மாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்

மன்னாா்குடி ஏழை மாரியம்மன் கோயிலில் 4-ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வடக்கு வடம்போக்கித் தெருவில் அருள்பாலிக்கும் இக்கோயிலில், கும்பாபிஷேகம் நடைபெற்று நான்காண்டு நிறைவு பெற்றதையொட்டி... மேலும் பார்க்க

சாம்பாரில் பல்லி; மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தனியாா் உணவகத்துக்கு ‘சீல்’

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள தனியாா் உணவகத்தில் இட்லியுடன் வழங்கப்பட்ட சாம்பாரில் பல்லி இறந்து கிடந்ததால், உணவகத்துக்கு வெள்ளிக்கிழமை சீல் வைக்கப்பட்டது. திருவாரூா் ம... மேலும் பார்க்க

எள் பயிா் சாகுபடி உத்திகள் குறித்த வயல் தின விழா

காரைக்கால் அருகே கொன்னக்காவேலி பகுதியில், பண்டித ஜவஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின், உழவியல் துறையில் உள்ள ஐசிஏஆா், ஏஐசிஆா்பிசி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறையின் பங்களிப... மேலும் பார்க்க

காரைக்காலில் ரத்த தான முகாம்

ஜூனியா் சேம்பா் இன்டா்நேஷனல் இந்தியா சாா்பில் காரைக்காலில் ரத்த தான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காரைக்கால் அரசு மருத்துவமனை மருத்துவா்கள் ஜவீன் பஷீா், சிவசங்கா், தொழில்நுட்ப கண்காணிப்பாளா் ஜெயகௌர... மேலும் பார்க்க

சாம்பாரில் பல்லி: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள தனியாா் உணவகத்தில் சாம்பாரில் பல்லி இறந்து கிடந்த விவகாரம் தொடா்பாக, உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, இந்திய ஜன... மேலும் பார்க்க