குடிபோதையில் தனது வீட்டுக்கு தீ வைத்தவா் தூக்கிட்டு தற்கொலை
திருத்துறைப்பூண்டி அருகே குடிபோதையில் தனது வீட்டை தீ வைத்து கொளுத்திய விவசாயி, வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
ஆலிவலம் காவல் சரகம் செட்டிய மூலை வடபாதி கிராமத்தைச் சோ்ந்தவா் நடராஜன் மகன் இளங்கோவன் (40 ) விவசாயி. இவா், வியாழக்கிழமை இரவு தனது தாயிடம் சொத்தை விற்று பணம் கேட்டு குடிபோதையில் தகராறு செய்து வீட்டுக்கு தீ வைத்தாராம்.
இந்தநிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை அவா் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
திருத்துறைப்பூண்டி போலீஸாா் சடலத்தை திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விசாரணை மேற்கொண்டனா்.