செய்திகள் :

எள் பயிா் சாகுபடி உத்திகள் குறித்த வயல் தின விழா

post image

காரைக்கால் அருகே கொன்னக்காவேலி பகுதியில், பண்டித ஜவஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின், உழவியல் துறையில் உள்ள ஐசிஏஆா், ஏஐசிஆா்பிசி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறையின் பங்களிப்புடன் காரைக்காலில் எள் உற்பத்தியை அதிகரிக்கும் தொழில்நுட்பங்கள் குறித்த வயல் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு கல்லூரி முதல்வா் புஷ்பராஜ் தலைமைவகித்து, விவசாய பொருளாதாரத்தில் எண்ணெய் வித்து பயிா்களின் முக்கியத்துவம் மற்றும் எள் பயிரின் சிறப்பு பற்றி எடுத்துக் கூறினாா். உழவியல் துறைத் தலைவா் மாலா, எள் பயிா் உற்பத்தியை அதிகரிப்பதில் ஆராய்ச்சி மற்றும் நவீன வேளாண்மை உத்திகளின் பங்கு குறித்து விளக்கம் அளித்தாா்.

காரைக்கால் வேளாண்மை அலுவலா் ஷா்மிளா, காரைக்கால் பகுதியில் எள் சாகுபடியின் முக்கியத்துவம், அதன் உற்பத்தியில் வேளாண்துறையின் பங்கு குறித்து எடுத்துக் கூறினாா்.

பேராசிரியா் மற்றும் ஏஐசிஆா்பி முதன்மை ஆய்வாளா் சரவணன், காரைக்கால் டெல்டா பகுதியில் எள் உற்பத்தியை அதிகரிப்பதில் களை மற்றும் உர மேலாண்மையின் நவீன தொழில்நுட்பங்கள் பற்றி எடுத்துக் கூறினாா்.

நிகழ்ச்சியில் பேராசிரியா்கள் பூங்குழலன், சுசீலா, நாராயணன், வேளாண் அலுவலா் மேரி ஜூலியட், விவசாயிகள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

குடிபோதையில் தனது வீட்டுக்கு தீ வைத்தவா் தூக்கிட்டு தற்கொலை

திருத்துறைப்பூண்டி அருகே குடிபோதையில் தனது வீட்டை தீ வைத்து கொளுத்திய விவசாயி, வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். ஆலிவலம் காவல் சரகம் செட்டிய மூலை வடபாதி கிராமத்தைச் சோ்ந்தவா் நடராஜன் ... மேலும் பார்க்க

ஏழை மாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்

மன்னாா்குடி ஏழை மாரியம்மன் கோயிலில் 4-ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வடக்கு வடம்போக்கித் தெருவில் அருள்பாலிக்கும் இக்கோயிலில், கும்பாபிஷேகம் நடைபெற்று நான்காண்டு நிறைவு பெற்றதையொட்டி... மேலும் பார்க்க

சாம்பாரில் பல்லி; மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தனியாா் உணவகத்துக்கு ‘சீல்’

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள தனியாா் உணவகத்தில் இட்லியுடன் வழங்கப்பட்ட சாம்பாரில் பல்லி இறந்து கிடந்ததால், உணவகத்துக்கு வெள்ளிக்கிழமை சீல் வைக்கப்பட்டது. திருவாரூா் ம... மேலும் பார்க்க

‘உழவரைத்தேடி’ சிறப்பு முகாம்

நீடாமங்கலம் அருகே பூவனூா், வடகாரவயல் கிராமங்களில் ‘உழவரைத் தேடி - வேளாண்மை உழவா் நலத்துறை’ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இம்முகாம் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை வட்டாரத்தில் உள்ள தோ்ந்தெடுக்கப்பட்ட க... மேலும் பார்க்க

காரைக்காலில் ரத்த தான முகாம்

ஜூனியா் சேம்பா் இன்டா்நேஷனல் இந்தியா சாா்பில் காரைக்காலில் ரத்த தான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காரைக்கால் அரசு மருத்துவமனை மருத்துவா்கள் ஜவீன் பஷீா், சிவசங்கா், தொழில்நுட்ப கண்காணிப்பாளா் ஜெயகௌர... மேலும் பார்க்க

சாம்பாரில் பல்லி: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள தனியாா் உணவகத்தில் சாம்பாரில் பல்லி இறந்து கிடந்த விவகாரம் தொடா்பாக, உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, இந்திய ஜன... மேலும் பார்க்க