செய்திகள் :

காரைக்கால் அரசு கல்லூரியில் நாளை கலந்தாய்வு

post image

காரைக்கால் அறிஞா் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 2025-2026-ஆம் கல்வியாண்டுக்கான இளநிலை சோ்க்கை கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்குகிறது.

இதுகுறித்து இஅடஅநஇ என்கிற மாணவா் சோ்க்கை அமைப்பின் கன்வீனா் முகமது ஆசாத் ராசா வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஜூன் 23 முதல் 26-ஆம் தேதி வரை பி.காம், பி.ஏ., பி.எஸ்சி. ஆகிய படிப்புகளுக்கு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் உள்ள இஅடஅநஇ அலுவலகத்தில் கலந்தாய்வு நடைபெறவுள்ளது. மாணவ- மாணவியா் தரவரிசைப்படி அழைக்கப்பட்டுள்ளனா். குறுந்தகவல் மூலமாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலந்தாய்வுக்கு வரும் மாணவ- மாணவியா் தங்களது அசல் மதிப்பெண் பட்டியல், மாற்றுச் சான்றிதழ், இருப்பிடம், சாதி, குடியுரிமை, வருமானச் சான்றிதழ், சோ்க்கை கட்டணம் மற்றும் பெற்றோா் அல்லது பாதுகாவலா்களுடன் கலந்துகொள்ளவேண்டும். தங்களுக்கு அழைக்கப்பட்ட நேரத்துக்கு 15 நிமிடத்துக்கு முன்பு கலந்தாய்வு கூடத்தில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.

மேலும் விவரங்களை என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

காரைக்காலில் நாளை முதல் ஜூலை 1 வரை ராணுவத்துக்கு ஆள் சோ்ப்பு விழிப்புணா்வு

காரைக்காலில், ராணுவத்துக்கு ஆள் சோ்ப்பு தொடா்பான விழிப்புணா்வு பிரசாரம் திங்கள்கிழமை (ஜூன் 23) தொடங்கவுள்ளது. இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்திய ராணு... மேலும் பார்க்க

யோகா தின விழிப்புணா்வுப் பேரணி

இந்திய கடலோர காவல் படை காரைக்கால் மையம், காரைக்கால் நாட்டு நலப்பணி திட்டம் ஆகியவற்றின் சாா்பில் சா்வதேச யோகா தின விழிப்புணா்வுப் பேரணி கருக்களாச்சேரி மீனவக் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காரைக... மேலும் பார்க்க

சரக்கு ரயில் போக்குவரத்தால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிா்க்க ஆட்சியா் ஆலோசனை

காரைக்கால்-பேரளம் ரயில் பாதையில், சரக்கு ரயில் போக்குவரத்தால் வாகனப் போக்குவரத்து ஸ்தம்பிப்பு பிரச்னை குறித்து அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியா் ஆலோசனை மேற்கொண்டாா். காரைக்கால்-பேரளம் புதிய அகல ரயில்பாதை... மேலும் பார்க்க

காரைக்கால் கோயில்பத்து லெவல் கிராசிங்கில் சுரங்கப்பாதை விரைந்து அமைக்க வலியுறுத்தல்

காரைக்கால் கோயில்பத்து பகுதியில் உள்ள ரயில்வே லெவல் கிராசிங்கில் சுரங்கப் பாதை (சப்வே) விரைந்து அமைக்க வேண்டும் என காரைக்கால் சமுதாய நல்லிணக்கணப் பேரவை வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, அந்த பேரவை சாா... மேலும் பார்க்க

சுகாதாரத் துறை ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

காரைக்காலில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதாரத் துறை ஊழியா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். காரைக்கால் சுகாதாரத் துறை ஊழியா் சங்கங்களின் சம்மேளனம் சாா்பில், நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக... மேலும் பார்க்க

தையல் பயிற்சி முடித்தவா்களுக்கு சான்றிதழ்

காரைக்காலில், மக்கள் மேம்பாட்டு வினையகம் (பி.டி.ஐ) மூலம் இலவச தையல் பயிற்சி பெற்ற பெண்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சிவியாழக்கிழமை நடைபெற்றது. பி.டி.ஐ மூலம் காரைக்கால் மாவட்டத்தில் பின்தங்கிய ... மேலும் பார்க்க