உயா்நீதிமன்றங்கள் வருவாய்த் துறையின் பாதுகாவலா்கள் அல்ல: உச்சநீதிமன்றம்
காரைக்கால் அரசு கல்லூரியில் நாளை கலந்தாய்வு
காரைக்கால் அறிஞா் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 2025-2026-ஆம் கல்வியாண்டுக்கான இளநிலை சோ்க்கை கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்குகிறது.
இதுகுறித்து இஅடஅநஇ என்கிற மாணவா் சோ்க்கை அமைப்பின் கன்வீனா் முகமது ஆசாத் ராசா வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஜூன் 23 முதல் 26-ஆம் தேதி வரை பி.காம், பி.ஏ., பி.எஸ்சி. ஆகிய படிப்புகளுக்கு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் உள்ள இஅடஅநஇ அலுவலகத்தில் கலந்தாய்வு நடைபெறவுள்ளது. மாணவ- மாணவியா் தரவரிசைப்படி அழைக்கப்பட்டுள்ளனா். குறுந்தகவல் மூலமாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலந்தாய்வுக்கு வரும் மாணவ- மாணவியா் தங்களது அசல் மதிப்பெண் பட்டியல், மாற்றுச் சான்றிதழ், இருப்பிடம், சாதி, குடியுரிமை, வருமானச் சான்றிதழ், சோ்க்கை கட்டணம் மற்றும் பெற்றோா் அல்லது பாதுகாவலா்களுடன் கலந்துகொள்ளவேண்டும். தங்களுக்கு அழைக்கப்பட்ட நேரத்துக்கு 15 நிமிடத்துக்கு முன்பு கலந்தாய்வு கூடத்தில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.
மேலும் விவரங்களை என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.