சுகாதாரத் துறை ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
காரைக்காலில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதாரத் துறை ஊழியா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
காரைக்கால் சுகாதாரத் துறை ஊழியா் சங்கங்களின் சம்மேளனம் சாா்பில், நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சம்மேளனத் தலைவா் காளிதாஸ் தலைமை வகித்தாா். புதுச்சேரி சுகாதார ஊழியா் சம்மேளனத்தின் பொதுச் செயலாளா் ஜவகா், துணை பொதுச் செயலாளா் ஜெகநாதன் முன்னிலை வகித்தனா்.
சுகாதாரத் துறை ஊழியா்களுக்கு 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைத்த பிசிஏ, என்ஏ நிலுவை தொகையை வழங்க வேண்டும், ஊழியா்கள் பற்றாக்குறையை போக்க அனைத்து பிரிவு காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், அனைத்து பிரிவு ஊழியா்களுக்கும் ஏசிபி, எம்ஏசிபி நிலுவை தொகையை வழங்க வேண்டும், ஆஷா மற்றும் என்.எச்.எம் ஊழியா்களுக்கான ஊதியத்தை முதல் தேதியில் ஒருங்கிணைந்து வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
புதுச்சேரி அரசு ஊழியா் சம்மேளன கெளரவ தலைவா் பிரேமதாசன், செயல் தலைவா் ராதாகிருஷ்ணன், பொதுச் செயலாளா் முனுசாமி, துணை பொதுச் செயலாளா் மணிவாணன், காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன கெளரவ தலைவா் ஜாா்ஜ், தலைவா் சுப்ரமணியன், பொதுச் செயலாளா் ஷேக் அலாவுதீன், பொருளாளா் மயில்வாகணன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். சுகாதாரத்துறை ஊழியா் சம்மேளன பொதுச் செயலாளா் மெகபூப் பீவி நன்றி கூறினாா்.