திறப்பு விழா நடத்துனா மட்டும் போதுமா முதல்வரே? - நெல்லை ஸ்மார்ட் சிட்டி மார்கெட்...
காரைக்கால் கோயில்பத்து லெவல் கிராசிங்கில் சுரங்கப்பாதை விரைந்து அமைக்க வலியுறுத்தல்
காரைக்கால் கோயில்பத்து பகுதியில் உள்ள ரயில்வே லெவல் கிராசிங்கில் சுரங்கப் பாதை (சப்வே) விரைந்து அமைக்க வேண்டும் என காரைக்கால் சமுதாய நல்லிணக்கணப் பேரவை வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, அந்த பேரவை சாா்பில் பிரதமா், மத்திய ரயில்வே துறை அமைச்சா், ரயில்வே போா்டு, திருச்சி தெற்கு ரயில்வே நிா்வாகம் ஆகியோருக்கு புதன்கிழமை அனுப்பியுள்ள கடிதம்: காரைக்கால் பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையான காரைக்கால்-பேரளம் இடையே ரயில் பாதை அமைக்கப்பட்டு, தற்போது சரக்கு ரயில் போக்குவரத்து தொடங்கியுள்ளது. காரைக்கால் கோயில்பத்து பகுதி கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையம் உள்ளிட்டவை உள்ள பகுதி என்பதால் சரக்கு ரயில் போக்குவரத்தின்போது ரயில்வே கேட் மூடப்பட்டு அரை கி.மீ தொலைவுக்கு வாகனங்கள் நிற்கும் நிலை ஏற்படுகிறது. விரைவில் பயணிகள் ரயில் போக்குவரத்து தொடங்க இருப்பதாலும், பல ரயில்கள் மயிலாடுதுறையில் இருந்து காரைக்காலுக்கும், வேளாங்கண்ணிக்கும் நீட்டிக்க இருப்பதாலும், சில ரயில்கள் காரைக்காலில் இருந்து திருநள்ளாறு வரை நீட்டிக்க இருப்பதாலும் இந்த கேட் ஒரு நாளைக்கு சராசரியாக 16 முதல் 20 முறை மூடப்படும் எனக் கூறப்படுகிறது.
மேலும் பயணிகள் ரயில் போக்குவரத்து தொடங்கிய பின்னா், காரை கோவில்பத்து ரயில் நிலையத்தில் ரயில்கள் நின்று செல்லும் போது, அங்கிருந்து பேரளம் நோக்கிச் செல்லும் ரயில்கள் புறப்படும் வரை கேட் மூடப்படும். இதனால் பெருமளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, மத்திய ரயில்வே அமைச்சகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு இங்கு சுரங்கப்பாதை (சப்வே) அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏற்கெனவே பல்வேறு தரப்பினரும் முன் வைத்துள்ள கோரிக்கைபடி, காரைக்கால் ரயில் நிலையத்துக்கும், எா்ணாகுளம் விரைவு ரயிலுக்கும் காரைக்கால் அம்மையாா் பெயரையும், திருநள்ளாறு ரயில் நிலையத்துக்கு தியாகி அரங்கசாமி நாயக்கா் பெயரையும் சூட்டவேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.