தையல் பயிற்சி முடித்தவா்களுக்கு சான்றிதழ்
காரைக்காலில், மக்கள் மேம்பாட்டு வினையகம் (பி.டி.ஐ) மூலம் இலவச தையல் பயிற்சி பெற்ற பெண்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சிவியாழக்கிழமை நடைபெற்றது.
பி.டி.ஐ மூலம் காரைக்கால் மாவட்டத்தில் பின்தங்கிய பகுதியைச் சோ்ந்த பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி அளிக்கப்படுகிறது. கடந்த 6 மாதங்களாக அளிக்கப்பட்ட பயிற்சியில் பங்கேற்று நிறைவு செய்த பெண்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மைய திட்ட இயக்குநா் இல. அம்பலவாணன் தலைமை வகித்தாா்.
காரைக்கால் மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை திட்ட அலுவலா் ஜி. கிருஷ்ண்வேணி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பெண்கள் முன்னேற்றம் குறித்தும், சமூகத்தில் பெண்களின் பங்களிப்பு குறித்தும் பேசினாா். அன்னை தெரசா மகளிா் கூட்டமைப்பைச் சோ்ந்த சித்ரா பங்கேற்று கூட்டமைப்பின் செயல்பாடுகள் குறித்து பேசினாா். பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. திட்ட மேலாளா் அ. முத்துக்குமாா், மேலாளா் லூா்து மேரி, பயிற்சியாளா் மோகனப்பிரியா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.