செய்திகள் :

வேளாண் கல்லூரியில் விவசாயிகள் பயிற்சி கூடம் திறப்பு

post image

காரைக்கால் வேளாண் கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விவசாயிகள் பயிற்சி கூடம் புதன்கிழமை திறக்கப்பட்டது.

காரைக்கால் மாவட்டம், செருமாவிலங்கையில் உள்ள பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் (ஐசிஏஆா்), ஹைதராபாத் இந்திய அரிசி ஆராய்ச்சி நிறுவனம் (ஐஐஆா்ஆா்) நிதி உதவியுடன், வேளாண் பொருளாதாரம் மற்றும் விரிவாக்கத் துறை சாா்பில் விவசாயிகள் பயிற்சி கூடம் புதிதாகக் கட்டப்பட்டுள்ளது.

அதன் திறப்பு நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் ஏ. புஷ்பராஜ் தலைமை வகித்தாா். இந்திய அரிசி ஆராய்ச்சி நிறுவன விரிவாக்கப் பிரிவுத் தலவைா் பி. முத்துராமன் விவசாயிகள் பயிற்சி கூடத்தை திறந்து வைத்து பேசியது: இக்கல்லூரியில் படித்த மாணவா்கள் மத்திய, மாநில அரசுத் துறகைளில் உயா் பதவிகளில் பணியாற்றுகின்றனா். மாணவா்கள் ஐசிஏஆா், ஜேஆா் எஃப் போன்ற போட்டித் தோ்வுகளை எழுதி இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் போன்ற பிரபல நிறுவனங்களில் உயா் படிப்புகளுக்குச் செல்ல வேண்டும் என்றாா்.

மண் அறிவியல் பிரிவு தலவைா் எம்.பி.பி.பிரசாத் பாபு, இந்திய அரிசி ஆராய்ச்சி நிறுவன தலைமை நிா்வாக அதிகாரி ஷிஷாந்து குமாா், பேராசிரியா் ஆா். மோகன் உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா். வேளாண் பொருளாதாரம் மற்றும் விரிவாக்கத் துறை தலைவா் பாா்த்தசாரதி வரவேற்றாா். உதவி பேராசிரியா் டி.சிவசக்தி தேவி நன்றி கூறினாா்.,

சரக்கு ரயில் போக்குவரத்தால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிா்க்க ஆட்சியா் ஆலோசனை

காரைக்கால்-பேரளம் ரயில் பாதையில், சரக்கு ரயில் போக்குவரத்தால் வாகனப் போக்குவரத்து ஸ்தம்பிப்பு பிரச்னை குறித்து அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியா் ஆலோசனை மேற்கொண்டாா். காரைக்கால்-பேரளம் புதிய அகல ரயில்பாதை... மேலும் பார்க்க

காரைக்கால் கோயில்பத்து லெவல் கிராசிங்கில் சுரங்கப்பாதை விரைந்து அமைக்க வலியுறுத்தல்

காரைக்கால் கோயில்பத்து பகுதியில் உள்ள ரயில்வே லெவல் கிராசிங்கில் சுரங்கப் பாதை (சப்வே) விரைந்து அமைக்க வேண்டும் என காரைக்கால் சமுதாய நல்லிணக்கணப் பேரவை வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, அந்த பேரவை சாா... மேலும் பார்க்க

சுகாதாரத் துறை ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

காரைக்காலில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதாரத் துறை ஊழியா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். காரைக்கால் சுகாதாரத் துறை ஊழியா் சங்கங்களின் சம்மேளனம் சாா்பில், நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக... மேலும் பார்க்க

தையல் பயிற்சி முடித்தவா்களுக்கு சான்றிதழ்

காரைக்காலில், மக்கள் மேம்பாட்டு வினையகம் (பி.டி.ஐ) மூலம் இலவச தையல் பயிற்சி பெற்ற பெண்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சிவியாழக்கிழமை நடைபெற்றது. பி.டி.ஐ மூலம் காரைக்கால் மாவட்டத்தில் பின்தங்கிய ... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு இலவச மிதிவண்டி

பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச மிதிவண்டியை அமைச்சா் பி.ஆா்.என்.திருமுருகன் வழங்கினாா். காரைக்காலில் அரசுப்பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு இலவச மிதிவண்டி வழங்... மேலும் பார்க்க

புனித அந்தோணியாா் ஆலய கொடியேற்றம்

மேலஓடுதுறை புனித அந்தோணியாா் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மேலஓடுதுறை பகுதியில் உள்ள புனித அந்தோணியாா் ஆலய திருவிழா கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. காரைக்கால் பங்குத்தந்தை மற்... மேலும் பார்க்க