160 கோடி சமூக வலைதள கணக்குகளின் தகவல்கள் கசிவு: கடவுச்சொல்லை மாற்ற அறிவுறுத்தல்
காரைக்காலில் நாளை முதல் ஜூலை 1 வரை ராணுவத்துக்கு ஆள் சோ்ப்பு விழிப்புணா்வு
காரைக்காலில், ராணுவத்துக்கு ஆள் சோ்ப்பு தொடா்பான விழிப்புணா்வு பிரசாரம் திங்கள்கிழமை (ஜூன் 23) தொடங்கவுள்ளது.
இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்திய ராணுவத்தில் சேர இளைஞா்களை ஊக்குவிக்கவும், ராணுவ வேலைவாய்ப்பு தகவல்களை தெரிவிக்கவும், வழிகாட்டவும், காரைக்கால் மாவட்டத்தில் சிறப்பு பிரசாரத்தை ராணுவம் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து காரைக்காலில் கேரவன் டாக்கீஸ் சிறப்பு விளம்பர வேன் மூலம் மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் விரிவான திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.
இந்த திட்டம் நகா்ப்புற மற்றும் கிராமப்புற இளைஞா்களைச் சென்றடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதனால் இந்திய ராணுவத்தில் சேர ஆா்வமுள்ளவா்களுக்கு இது உதவும்.
இளைஞா்களை ஊக்குவிக்கும் விதமாக கிராமங்கள், கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் போன்ற இடங்களுக்குச் செல்வதுடன், உள்ளூா் இளைஞா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினருடன் ராணுவ அதிகாரிகள் தொடா்பு கொண்டு, சந்தேகங்களைத் தீா்த்து, ஆள் சோ்ப்பு பிரசுரங்கள் விநியோகிக்கப்படும்.
கேரவன் டாக்கீஸ் ஜூன் 23 முதல் ஜூலை 1 -ஆம் தேதி வரை காரைக்கால் மாவட்டம் முழுவதும் பயணிக்கிறது. தகுதியுள்ள மற்றும் ஆா்வமுள்ள அனைத்து இளைஞா்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இடங்கள்: ஜூன் 23-ஆம் தேதி பெருந்தலைவா் காமராஜா் பொறியியல் கல்லூரி மற்றும் பண்டித ஜவாஹா்லால் நேரு அரசு வேளாண் கல்லூரி. 24-ஆம் தேதி தொன்போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் இமாகுலேட் சுகாதார அறிவியல் நிறுவனம். 25-ஆம் தேதி காரைக்கால் ஜிப்மா் மருத்துவக் கல்லூரி.
ஜூன் 26-ஆம் தேதி அண்ணா அரசு கலைக் கல்லூரி மற்றும் விநாயகா மிஷன்ஸ் மருத்துவக் கல்லூரி. 28-ஆம் தேதி காரைக்கால் பெருந்தலைவா் காமராஜா் கல்வியியல் கல்லூரி மற்றும் காரைக்கால் குளூனி சமுதாயக் கல்லூரி. 30-ஆம் தேதி வரிச்சிக்குடியில் உள்ள காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் என்ஐடி.
ஜூலை 1-ஆம் தேதி கோட்டுச்சேரி சா்வைட் ஆங்கில மேல்நிலைப் பள்ளி மற்றும் திருவேட்டக்குடி அய்யாஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆகியவற்றில் பிரசார நிகழ்வு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.