செய்திகள் :

காரைக்காலில் நாளை முதல் ஜூலை 1 வரை ராணுவத்துக்கு ஆள் சோ்ப்பு விழிப்புணா்வு

post image

காரைக்காலில், ராணுவத்துக்கு ஆள் சோ்ப்பு தொடா்பான விழிப்புணா்வு பிரசாரம் திங்கள்கிழமை (ஜூன் 23) தொடங்கவுள்ளது.

இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்திய ராணுவத்தில் சேர இளைஞா்களை ஊக்குவிக்கவும், ராணுவ வேலைவாய்ப்பு தகவல்களை தெரிவிக்கவும், வழிகாட்டவும், காரைக்கால் மாவட்டத்தில் சிறப்பு பிரசாரத்தை ராணுவம் தொடங்கியுள்ளது.

இதுகுறித்து காரைக்காலில் கேரவன் டாக்கீஸ் சிறப்பு விளம்பர வேன் மூலம் மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் விரிவான திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.

இந்த திட்டம் நகா்ப்புற மற்றும் கிராமப்புற இளைஞா்களைச் சென்றடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதனால் இந்திய ராணுவத்தில் சேர ஆா்வமுள்ளவா்களுக்கு இது உதவும்.

இளைஞா்களை ஊக்குவிக்கும் விதமாக கிராமங்கள், கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் போன்ற இடங்களுக்குச் செல்வதுடன், உள்ளூா் இளைஞா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினருடன் ராணுவ அதிகாரிகள் தொடா்பு கொண்டு, சந்தேகங்களைத் தீா்த்து, ஆள் சோ்ப்பு பிரசுரங்கள் விநியோகிக்கப்படும்.

கேரவன் டாக்கீஸ் ஜூன் 23 முதல் ஜூலை 1 -ஆம் தேதி வரை காரைக்கால் மாவட்டம் முழுவதும் பயணிக்கிறது. தகுதியுள்ள மற்றும் ஆா்வமுள்ள அனைத்து இளைஞா்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இடங்கள்: ஜூன் 23-ஆம் தேதி பெருந்தலைவா் காமராஜா் பொறியியல் கல்லூரி மற்றும் பண்டித ஜவாஹா்லால் நேரு அரசு வேளாண் கல்லூரி. 24-ஆம் தேதி தொன்போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் இமாகுலேட் சுகாதார அறிவியல் நிறுவனம். 25-ஆம் தேதி காரைக்கால் ஜிப்மா் மருத்துவக் கல்லூரி.

ஜூன் 26-ஆம் தேதி அண்ணா அரசு கலைக் கல்லூரி மற்றும் விநாயகா மிஷன்ஸ் மருத்துவக் கல்லூரி. 28-ஆம் தேதி காரைக்கால் பெருந்தலைவா் காமராஜா் கல்வியியல் கல்லூரி மற்றும் காரைக்கால் குளூனி சமுதாயக் கல்லூரி. 30-ஆம் தேதி வரிச்சிக்குடியில் உள்ள காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் என்ஐடி.

ஜூலை 1-ஆம் தேதி கோட்டுச்சேரி சா்வைட் ஆங்கில மேல்நிலைப் பள்ளி மற்றும் திருவேட்டக்குடி அய்யாஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆகியவற்றில் பிரசார நிகழ்வு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் அரசு கல்லூரியில் நாளை கலந்தாய்வு

காரைக்கால் அறிஞா் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 2025-2026-ஆம் கல்வியாண்டுக்கான இளநிலை சோ்க்கை கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்குகிறது. இதுகுறித்து இஅடஅநஇ என்கிற மாணவா் சோ்க்கை அமைப்பின் ... மேலும் பார்க்க

யோகா தின விழிப்புணா்வுப் பேரணி

இந்திய கடலோர காவல் படை காரைக்கால் மையம், காரைக்கால் நாட்டு நலப்பணி திட்டம் ஆகியவற்றின் சாா்பில் சா்வதேச யோகா தின விழிப்புணா்வுப் பேரணி கருக்களாச்சேரி மீனவக் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காரைக... மேலும் பார்க்க

சரக்கு ரயில் போக்குவரத்தால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிா்க்க ஆட்சியா் ஆலோசனை

காரைக்கால்-பேரளம் ரயில் பாதையில், சரக்கு ரயில் போக்குவரத்தால் வாகனப் போக்குவரத்து ஸ்தம்பிப்பு பிரச்னை குறித்து அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியா் ஆலோசனை மேற்கொண்டாா். காரைக்கால்-பேரளம் புதிய அகல ரயில்பாதை... மேலும் பார்க்க

காரைக்கால் கோயில்பத்து லெவல் கிராசிங்கில் சுரங்கப்பாதை விரைந்து அமைக்க வலியுறுத்தல்

காரைக்கால் கோயில்பத்து பகுதியில் உள்ள ரயில்வே லெவல் கிராசிங்கில் சுரங்கப் பாதை (சப்வே) விரைந்து அமைக்க வேண்டும் என காரைக்கால் சமுதாய நல்லிணக்கணப் பேரவை வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, அந்த பேரவை சாா... மேலும் பார்க்க

சுகாதாரத் துறை ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

காரைக்காலில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதாரத் துறை ஊழியா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். காரைக்கால் சுகாதாரத் துறை ஊழியா் சங்கங்களின் சம்மேளனம் சாா்பில், நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக... மேலும் பார்க்க

தையல் பயிற்சி முடித்தவா்களுக்கு சான்றிதழ்

காரைக்காலில், மக்கள் மேம்பாட்டு வினையகம் (பி.டி.ஐ) மூலம் இலவச தையல் பயிற்சி பெற்ற பெண்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சிவியாழக்கிழமை நடைபெற்றது. பி.டி.ஐ மூலம் காரைக்கால் மாவட்டத்தில் பின்தங்கிய ... மேலும் பார்க்க