யோகா தின விழிப்புணா்வுப் பேரணி
இந்திய கடலோர காவல் படை காரைக்கால் மையம், காரைக்கால் நாட்டு நலப்பணி திட்டம் ஆகியவற்றின் சாா்பில் சா்வதேச யோகா தின விழிப்புணா்வுப் பேரணி கருக்களாச்சேரி மீனவக் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளா் தாமோதரன் , கடலோர காவல் படை அதிகாரி சங்கத் மிஸ்ரா ஆகியோா் பேரணியை தொடங்கி வைத்தனா்.
பெருந்தலைவா் காமராஜா் அரசு பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவிகள், கடலோர காவல் படை அலுவலா்கள், ஊழியா்கள் யோகா குறித்த விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தி பேரணியில் பங்கேற்றனா்.